ETV Bharat / opinion

இவ்வாறு தான் விவசாயிகளுக்கு உத்தரவாதம் அளிப்பதா?

author img

By

Published : Sep 25, 2020, 5:24 AM IST

மத்திய அரசு அன்மையில் நிறைவேற்றியுள்ள வேளாண் மசோதாக்கள் குறித்து அன்னதாத்தா வேளாண் நாளிதழின் ஆசிரியர் அமிர்நேனி ஹரிகிருஷ்ணா எழுதியுள்ள கட்டுரையின் தமிழாக்கம்.

farmers
farmers

இவ்வாறு தான் விவசாயிகளுக்கு உத்தரவாதம் அளிப்பதா?

நிச்சயமான மற்றும் நிலையான வருமானம் இல்லாத நிலையில், நாட்டில் ஆண்டுதோறும் விவசாயத்தை கைவிடும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தப் பின்னணியில், விவசாயிகளுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டிய பொறுப்பைக் கொண்ட அரசாங்கங்கள், ஒருங்கிணைந்த விவசாய சீர்திருத்தங்களைத் தொடங்காமல் அதற்கு பதிலாக நலத்திட்டங்களை அறிமுகப்படுத்துகின்றன.

மக்களவையில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மசோதாக்கள் விவசாயிகளுக்கு அதிக பயனளிக்கும் என்று மத்திய அரசு கருதுகிறது. விவசாயிகளின் சிரமங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு களநிலவரங்களை புரிந்து கொள்ளாமல் பெருநிறுவன முதலாளிகளை ஆதரிப்பதற்கான அரசாங்கத்தின் இந்த அணுகுமுறை விவசாயிகள் சங்கங்களை கோபப்படுத்தியுள்ளது.

களத்துமேட்டிலேயே விற்பனை

ஜூன் மாதம் இயற்றப்பட்ட விவசாயிகளின் நலனுக்காக என்று கூறப்படும் அவசர சட்டத்திற்கு சட்டப்பூர்வ அனுமதியை வழங்குவதற்காக மத்திய அரசு மக்களவையில் மூன்று மசோதாக்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அவற்றில், முக்கியமானது மசோதா விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை நாட்டில் எங்கும் விற்பதற்கான சுதந்திரம்

இவற்றில் முதலாவது மசோதா, விவசாயி தனது பயிரை நாட்டில் எங்கும் விற்பதற்கான சுதந்திரம். இரண்டாவது, வர்த்தகர்களுடன் விவசாயிகளின் முன்கூட்டியே செய்யும் ஒப்பந்தங்களுக்கான சட்ட அனுமதி. மூன்றாவது, பருப்பு வகைகள், எண்ணெய் விதைகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை இருப்பு வைப்பதற்கான கட்டுப்பாடுகளை நீக்குதல்.

விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை நாடு முழுவதும் எங்கு வேண்டுமானாலும் விற்பதற்கு சுதந்திரம் கிடைக்கும் என்று அரசாங்கம் தொடர்ந்து கூறுகிறது. முரண்பாடான கேள்வி என்னவென்றால, தங்கள் கடன்களைத் தீர்ப்பதற்காக, தங்கள் விளைபொருட்களை களத்துமேட்டிலேயே விற்கும் 86% சிறு விவசாயிகள், அவற்றை விற்க மற்ற மாநிலங்களுக்கு செல்லும் நிலையில் இருப்பார்களா?

வர்த்தகர்கள் தங்களுக்குள் ஒரு அமைப்பை ஏற்படுத்தி, சரியான விலைகளை நிர்ணயிக்காததன் மூலம் விவசாயிகளின் நலனுக்கு இடையூறு விளைவிக்கின்றனர். கட்டுப்படுத்தப்பட்ட சந்தையில் கூட எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசாங்கம், நாட்டின் தனியார் வர்த்தகர்களை கட்டுப்படுத்துமா? தெலங்கானாவின் பருத்தி சந்தைகளில் இந்த வகையான சுரண்டலை நாம் கண்டிருக்கிறோம்.

வர்த்தகர்களைக் கட்டுப்படுத்துவதற்கு சந்தை அதிகாரிகளின் இயலாமை குறித்து விவசாயிகளின் போராட்டங்களை நடத்தி, இறுதியில் ஆட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுத்ததன் மூலம் ஆதரவு விலையை பெற்றதை நாம் கண்டிருக்கிறோம். எந்தவொரு சந்தைக் கட்டணமும் செலுத்தாமல் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை எங்கும் விற்க சுதந்திரம் வழங்கப்பட்டால், வருமானம் இல்லாத நிலையில் கிடங்குகள் மூடப்படும். மேலும் வர்த்தக சுதந்திரம் என்று பலர், விவசாயிகள் என்ற போர்வையில் பொருட்களை விற்பார்கள்.

அரசாங்கத்தின் நடவடிக்கைகளிலிருந்து இறுதியில் பயனடைபவர்கள் வர்த்தகர்கள் தான் என்பது மிகவும் தெளிவாகத் தெரிகிறது. இந்த ஆண்டு, குறுவை மக்காச்சோளம் ஒரு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,000 விலை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், அதற்கு ரூ.1,300 கூட கிடைக்கவில்லை. இந்த நிலையில், அதிக விலை கொடுத்து அரசாங்கமே வாங்குவதற்கு பதிலாக, நாட்டில் எங்கு வேண்டுமானாலும் விற்குமாறு மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளிடம் சொன்னால், அது விவசாயிகளுக்கு உதவுமா? ஒன்று அல்லது இரண்டு ஏக்கர் நிலம் கொண்ட ஒரு சிறு விவசாயி, அதிக விலை பெறுவதற்காக விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை வேறு இடத்தில் விற்க முயற்சி செய்தாலும், அவர்கள் அவ்வளவு தூரம் பயணித்து சந்தையின் தந்திரங்களை எவ்வாறு சமாளிப்பார்கள்? இந்த உண்மைகளை அரசாங்கம் நிச்சயமாக அறிந்திருக்கும்.

இரண்டாவது மசோதா

இரண்டாவது மசோதாவை நாம் ஆராய்ந்தால், நிறுவனங்களிலிருந்து வாங்கப்பட்ட சில விதைகள் தரம் குறைந்தவை என நிரூபிக்கப்பட்டபோதும், ​​ விவசாயிகளுக்கு இழப்பீடு கூட பெற்று தர முடியாத பரிதாபகரமான சூழ்நிலையில் அரசாங்கம் இருக்கிறது. விவசாயிகளிடம் அவர்களின் மகசூலை வாங்கிக் கொள்வோம் என்ற உறுதிமொழியுடன் விவசாயம் செய்ய சில வகையான விதைகளை வழங்குவதற்காக விவசாயிகளுடன் செய்யப்படும் ஒப்பந்தங்கள் இந்த மசோதாவின் கீழ் வருகின்றன.

கடந்த காலத்தில் சில நிறுவனங்கள் மாஞ்சியம், ஜாஃப்ரா, தேக்கு செடிகள், கற்றாழை, தூலகொண்டி, ராம ரோஜா, சஃபெட் மஸ்லி போன்ற மருத்துவ தாவரங்களை பயிரிடும்போது லட்சக்கணக்கில் லாபம் கிடைக்கும் என்று விவசாயிகளை நம்ப வைத்தன. விதைகளை விற்ற பிறகு, அந்த நிறுவனங்கள் காணாமல் போய்விட்டன. இது தொடர்பாக அரசாங்கத்தால் எதுவும் செய்ய முடியவில்லை.

நிறுவனங்களுடனான ஒப்பந்தங்களுக்கு சட்டபூர்வமான அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தால், நிறுவனங்களால் மோசடி செய்வதை தடுத்திருக்க முடியும் என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆனால் இது மறைமுகமாக ‘ஒப்பந்த விவசாயத்திற்கு’ வழிவகுக்கிறது. நாட்டில் ஒப்பந்த விவசாயம் செயல்படுத்தப்பட்டு, விவசாயம் பெருநிறுவன அமைப்புகளின் கட்டுப்பாட்டிற்கு சென்றால் அதனால் ஏழை விவசாயிகள், கூலிகளாக மாற வேண்டியிருக்கும் என்ற அச்சத்தை ஏற்படுத்துகின்றன.

வியாபாரிகள் மற்றும் நிறுவனங்களுடன் விவசாயிகள் மேற்கொள்ளும் ஒப்பந்தங்களுக்கு, விவசாயத் துறை எந்தப் பொறுப்பும் ஏற்காது என்பது தான் இந்த மசோதாவின் மிகப்பெரிய குறைபாடு. குஜராத்தில் உருளைக்கிழங்கு விவசாயிகள் மீது பெப்சி நிறுவனம் தாக்கல் செய்துள்ள சட்ட வழக்குகள் குறிப்பிடத்தக்கவை.

மூன்றாவது மசோதா

இது அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு வைப்பதற்கான திருத்தம் தொடர்பானது. அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் முக்கிய நோக்கம் என்னவென்றால், போரின் போதோ அல்லது இதுபோன்ற சில நெருக்கடி நிலைமை தவிர, எண்ணெய் விதைகள், பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், தினை போன்ற பொருட்களை சேமித்து வைப்பதில் எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இருக்காது என்பது தான்.

ஆனால் அவற்றை பெரிதும் சேமித்து வைப்பதன் மூலம் அதிக பயனடைபவர்கள், விவசாயிகளை விட விவசாய வணிக நிறுவனங்கள் தான். விவசாய மற்றும் உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் அறுவடை செய்யும் இடங்களிலேயே விற்கும் ஏழை விவசாயிகளைப் பயன்படுத்திக் கொள்ளும். அவர்கள் விவசாயிகளிடமிருந்து விளைபொருட்களை வாங்குவதற்கும், பெருமளவில் இருப்பு வைப்பதற்கும் இந்த மசோதா வாய்ப்பளிக்கிறது.

விலைகள் குறைவாக இருக்கும்போது விவசாயிகளிடமிருந்து விளைபொருட்களை வாங்கி, அவற்றை அதிக அளவு சேமித்து வைத்து, விலை அதிகமாக இருக்கும்போது விற்பார்கள். புதிய மசோதாக்கள் அவர்களுக்கு ஒருவித தடையற்ற சுதந்திரத்தை அளிக்கின்றன. இந்த மசோதா மூலம் சில்லறை விற்பனை நிறுவனங்கள் அதிக பயன்பெறும் என்பது மிகவும் தெளிவாக தெரிகிறது

விளைபொருட்களை அரசாங்கமே கொள்முதல் செய்ய வேண்டும்

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் இலக்கை அடைய, மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் எந்த வகையிலும் பயனளிக்காது. இது வணிகர்கள் மற்றும் பெருநிறுவன அமைப்புகளின் வருமானத்தை பத்து மடங்கு அதிகரிக்கும் என்பது ஒரு கசப்பான உண்மை. ஒருவர் உண்மையிலேயே விவசாயிகளுக்கு உதவ விரும்பினால், அவர்களுக்கு லாபகரமான ஆதரவு விலை வழங்கப்பட்டால் போதும்.

உற்பத்திச் செலவுக்கு மேலதிகமாக, விவசாயிகளுக்கு உதவ வேண்டுமென்று நினைத்தால், விவசாயிகளுக்கு 50 விழுக்காடு சம்பளமாக வழங்கப்பட வேண்டும் என்று டாக்டர் சுவாமிநாதன் பரிந்துரைகளின் பரிந்துரையை அவர்கள் செயல்படுத்த வேண்டும். குறைந்தபட்ச ஆதரவு விலையை 22 வகைகளுக்கு மட்டுமல்ல, நாட்டில் பயிரிடப்படும் அனைத்து பயிர்களுக்கும் அளிக்க வேண்டும்.

விலை குறைவாக இருந்தால், அரசாங்கம் தலையிட்டு விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். விவசாய விளைபொருட்களை அரசாங்கமே வாங்க வேண்டும் அல்லது மஹிளா சங்கங்களிடம் ஒப்படைக்க வேண்டும். விளைபொருட்களின் உணவு பதப்படுத்துதலுக்கான ஒப்பந்தங்களை செய்யும் போது அரசாங்கம் இடைதரகர் போல் செயல்பட வேண்டும். உணவு பதப்படுத்தும் துறை, விவசாயிக்கு நிலையான வருமானத்தை அளிக்கும் வகையில் நீட்டிக்கப்பட வேண்டும்.

இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்தால், விவசாயிகளுக்கு அவர்களின் சொந்தக்காலில் நிற்பதற்கு உதவும். வணிகர்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கு சாதகமான முடிவுகளை எடுப்பது என்பது விவசாயிகளின் கஷ்டங்களை அவர்களிடம் ஒப்படைப்பதற்கு ஒப்பாகும். அதே சமயம், வாக்குகளுக்காக, PMகிசான் போன்ற திட்டங்களை அறிமுகப்படுத்தினால், அது விவசாயிகளையும் ஏமாற்றி தங்களையும் ஏமாற்றி கொள்வதைத் தவிர வேறில்லை.

இவ்வாறு தான் விவசாயிகளுக்கு உத்தரவாதம் அளிப்பதா?

நிச்சயமான மற்றும் நிலையான வருமானம் இல்லாத நிலையில், நாட்டில் ஆண்டுதோறும் விவசாயத்தை கைவிடும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தப் பின்னணியில், விவசாயிகளுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டிய பொறுப்பைக் கொண்ட அரசாங்கங்கள், ஒருங்கிணைந்த விவசாய சீர்திருத்தங்களைத் தொடங்காமல் அதற்கு பதிலாக நலத்திட்டங்களை அறிமுகப்படுத்துகின்றன.

மக்களவையில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மசோதாக்கள் விவசாயிகளுக்கு அதிக பயனளிக்கும் என்று மத்திய அரசு கருதுகிறது. விவசாயிகளின் சிரமங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு களநிலவரங்களை புரிந்து கொள்ளாமல் பெருநிறுவன முதலாளிகளை ஆதரிப்பதற்கான அரசாங்கத்தின் இந்த அணுகுமுறை விவசாயிகள் சங்கங்களை கோபப்படுத்தியுள்ளது.

களத்துமேட்டிலேயே விற்பனை

ஜூன் மாதம் இயற்றப்பட்ட விவசாயிகளின் நலனுக்காக என்று கூறப்படும் அவசர சட்டத்திற்கு சட்டப்பூர்வ அனுமதியை வழங்குவதற்காக மத்திய அரசு மக்களவையில் மூன்று மசோதாக்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அவற்றில், முக்கியமானது மசோதா விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை நாட்டில் எங்கும் விற்பதற்கான சுதந்திரம்

இவற்றில் முதலாவது மசோதா, விவசாயி தனது பயிரை நாட்டில் எங்கும் விற்பதற்கான சுதந்திரம். இரண்டாவது, வர்த்தகர்களுடன் விவசாயிகளின் முன்கூட்டியே செய்யும் ஒப்பந்தங்களுக்கான சட்ட அனுமதி. மூன்றாவது, பருப்பு வகைகள், எண்ணெய் விதைகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை இருப்பு வைப்பதற்கான கட்டுப்பாடுகளை நீக்குதல்.

விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை நாடு முழுவதும் எங்கு வேண்டுமானாலும் விற்பதற்கு சுதந்திரம் கிடைக்கும் என்று அரசாங்கம் தொடர்ந்து கூறுகிறது. முரண்பாடான கேள்வி என்னவென்றால, தங்கள் கடன்களைத் தீர்ப்பதற்காக, தங்கள் விளைபொருட்களை களத்துமேட்டிலேயே விற்கும் 86% சிறு விவசாயிகள், அவற்றை விற்க மற்ற மாநிலங்களுக்கு செல்லும் நிலையில் இருப்பார்களா?

வர்த்தகர்கள் தங்களுக்குள் ஒரு அமைப்பை ஏற்படுத்தி, சரியான விலைகளை நிர்ணயிக்காததன் மூலம் விவசாயிகளின் நலனுக்கு இடையூறு விளைவிக்கின்றனர். கட்டுப்படுத்தப்பட்ட சந்தையில் கூட எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசாங்கம், நாட்டின் தனியார் வர்த்தகர்களை கட்டுப்படுத்துமா? தெலங்கானாவின் பருத்தி சந்தைகளில் இந்த வகையான சுரண்டலை நாம் கண்டிருக்கிறோம்.

வர்த்தகர்களைக் கட்டுப்படுத்துவதற்கு சந்தை அதிகாரிகளின் இயலாமை குறித்து விவசாயிகளின் போராட்டங்களை நடத்தி, இறுதியில் ஆட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுத்ததன் மூலம் ஆதரவு விலையை பெற்றதை நாம் கண்டிருக்கிறோம். எந்தவொரு சந்தைக் கட்டணமும் செலுத்தாமல் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை எங்கும் விற்க சுதந்திரம் வழங்கப்பட்டால், வருமானம் இல்லாத நிலையில் கிடங்குகள் மூடப்படும். மேலும் வர்த்தக சுதந்திரம் என்று பலர், விவசாயிகள் என்ற போர்வையில் பொருட்களை விற்பார்கள்.

அரசாங்கத்தின் நடவடிக்கைகளிலிருந்து இறுதியில் பயனடைபவர்கள் வர்த்தகர்கள் தான் என்பது மிகவும் தெளிவாகத் தெரிகிறது. இந்த ஆண்டு, குறுவை மக்காச்சோளம் ஒரு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,000 விலை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், அதற்கு ரூ.1,300 கூட கிடைக்கவில்லை. இந்த நிலையில், அதிக விலை கொடுத்து அரசாங்கமே வாங்குவதற்கு பதிலாக, நாட்டில் எங்கு வேண்டுமானாலும் விற்குமாறு மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளிடம் சொன்னால், அது விவசாயிகளுக்கு உதவுமா? ஒன்று அல்லது இரண்டு ஏக்கர் நிலம் கொண்ட ஒரு சிறு விவசாயி, அதிக விலை பெறுவதற்காக விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை வேறு இடத்தில் விற்க முயற்சி செய்தாலும், அவர்கள் அவ்வளவு தூரம் பயணித்து சந்தையின் தந்திரங்களை எவ்வாறு சமாளிப்பார்கள்? இந்த உண்மைகளை அரசாங்கம் நிச்சயமாக அறிந்திருக்கும்.

இரண்டாவது மசோதா

இரண்டாவது மசோதாவை நாம் ஆராய்ந்தால், நிறுவனங்களிலிருந்து வாங்கப்பட்ட சில விதைகள் தரம் குறைந்தவை என நிரூபிக்கப்பட்டபோதும், ​​ விவசாயிகளுக்கு இழப்பீடு கூட பெற்று தர முடியாத பரிதாபகரமான சூழ்நிலையில் அரசாங்கம் இருக்கிறது. விவசாயிகளிடம் அவர்களின் மகசூலை வாங்கிக் கொள்வோம் என்ற உறுதிமொழியுடன் விவசாயம் செய்ய சில வகையான விதைகளை வழங்குவதற்காக விவசாயிகளுடன் செய்யப்படும் ஒப்பந்தங்கள் இந்த மசோதாவின் கீழ் வருகின்றன.

கடந்த காலத்தில் சில நிறுவனங்கள் மாஞ்சியம், ஜாஃப்ரா, தேக்கு செடிகள், கற்றாழை, தூலகொண்டி, ராம ரோஜா, சஃபெட் மஸ்லி போன்ற மருத்துவ தாவரங்களை பயிரிடும்போது லட்சக்கணக்கில் லாபம் கிடைக்கும் என்று விவசாயிகளை நம்ப வைத்தன. விதைகளை விற்ற பிறகு, அந்த நிறுவனங்கள் காணாமல் போய்விட்டன. இது தொடர்பாக அரசாங்கத்தால் எதுவும் செய்ய முடியவில்லை.

நிறுவனங்களுடனான ஒப்பந்தங்களுக்கு சட்டபூர்வமான அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தால், நிறுவனங்களால் மோசடி செய்வதை தடுத்திருக்க முடியும் என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆனால் இது மறைமுகமாக ‘ஒப்பந்த விவசாயத்திற்கு’ வழிவகுக்கிறது. நாட்டில் ஒப்பந்த விவசாயம் செயல்படுத்தப்பட்டு, விவசாயம் பெருநிறுவன அமைப்புகளின் கட்டுப்பாட்டிற்கு சென்றால் அதனால் ஏழை விவசாயிகள், கூலிகளாக மாற வேண்டியிருக்கும் என்ற அச்சத்தை ஏற்படுத்துகின்றன.

வியாபாரிகள் மற்றும் நிறுவனங்களுடன் விவசாயிகள் மேற்கொள்ளும் ஒப்பந்தங்களுக்கு, விவசாயத் துறை எந்தப் பொறுப்பும் ஏற்காது என்பது தான் இந்த மசோதாவின் மிகப்பெரிய குறைபாடு. குஜராத்தில் உருளைக்கிழங்கு விவசாயிகள் மீது பெப்சி நிறுவனம் தாக்கல் செய்துள்ள சட்ட வழக்குகள் குறிப்பிடத்தக்கவை.

மூன்றாவது மசோதா

இது அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு வைப்பதற்கான திருத்தம் தொடர்பானது. அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் முக்கிய நோக்கம் என்னவென்றால், போரின் போதோ அல்லது இதுபோன்ற சில நெருக்கடி நிலைமை தவிர, எண்ணெய் விதைகள், பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், தினை போன்ற பொருட்களை சேமித்து வைப்பதில் எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இருக்காது என்பது தான்.

ஆனால் அவற்றை பெரிதும் சேமித்து வைப்பதன் மூலம் அதிக பயனடைபவர்கள், விவசாயிகளை விட விவசாய வணிக நிறுவனங்கள் தான். விவசாய மற்றும் உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் அறுவடை செய்யும் இடங்களிலேயே விற்கும் ஏழை விவசாயிகளைப் பயன்படுத்திக் கொள்ளும். அவர்கள் விவசாயிகளிடமிருந்து விளைபொருட்களை வாங்குவதற்கும், பெருமளவில் இருப்பு வைப்பதற்கும் இந்த மசோதா வாய்ப்பளிக்கிறது.

விலைகள் குறைவாக இருக்கும்போது விவசாயிகளிடமிருந்து விளைபொருட்களை வாங்கி, அவற்றை அதிக அளவு சேமித்து வைத்து, விலை அதிகமாக இருக்கும்போது விற்பார்கள். புதிய மசோதாக்கள் அவர்களுக்கு ஒருவித தடையற்ற சுதந்திரத்தை அளிக்கின்றன. இந்த மசோதா மூலம் சில்லறை விற்பனை நிறுவனங்கள் அதிக பயன்பெறும் என்பது மிகவும் தெளிவாக தெரிகிறது

விளைபொருட்களை அரசாங்கமே கொள்முதல் செய்ய வேண்டும்

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் இலக்கை அடைய, மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் எந்த வகையிலும் பயனளிக்காது. இது வணிகர்கள் மற்றும் பெருநிறுவன அமைப்புகளின் வருமானத்தை பத்து மடங்கு அதிகரிக்கும் என்பது ஒரு கசப்பான உண்மை. ஒருவர் உண்மையிலேயே விவசாயிகளுக்கு உதவ விரும்பினால், அவர்களுக்கு லாபகரமான ஆதரவு விலை வழங்கப்பட்டால் போதும்.

உற்பத்திச் செலவுக்கு மேலதிகமாக, விவசாயிகளுக்கு உதவ வேண்டுமென்று நினைத்தால், விவசாயிகளுக்கு 50 விழுக்காடு சம்பளமாக வழங்கப்பட வேண்டும் என்று டாக்டர் சுவாமிநாதன் பரிந்துரைகளின் பரிந்துரையை அவர்கள் செயல்படுத்த வேண்டும். குறைந்தபட்ச ஆதரவு விலையை 22 வகைகளுக்கு மட்டுமல்ல, நாட்டில் பயிரிடப்படும் அனைத்து பயிர்களுக்கும் அளிக்க வேண்டும்.

விலை குறைவாக இருந்தால், அரசாங்கம் தலையிட்டு விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். விவசாய விளைபொருட்களை அரசாங்கமே வாங்க வேண்டும் அல்லது மஹிளா சங்கங்களிடம் ஒப்படைக்க வேண்டும். விளைபொருட்களின் உணவு பதப்படுத்துதலுக்கான ஒப்பந்தங்களை செய்யும் போது அரசாங்கம் இடைதரகர் போல் செயல்பட வேண்டும். உணவு பதப்படுத்தும் துறை, விவசாயிக்கு நிலையான வருமானத்தை அளிக்கும் வகையில் நீட்டிக்கப்பட வேண்டும்.

இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்தால், விவசாயிகளுக்கு அவர்களின் சொந்தக்காலில் நிற்பதற்கு உதவும். வணிகர்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கு சாதகமான முடிவுகளை எடுப்பது என்பது விவசாயிகளின் கஷ்டங்களை அவர்களிடம் ஒப்படைப்பதற்கு ஒப்பாகும். அதே சமயம், வாக்குகளுக்காக, PMகிசான் போன்ற திட்டங்களை அறிமுகப்படுத்தினால், அது விவசாயிகளையும் ஏமாற்றி தங்களையும் ஏமாற்றி கொள்வதைத் தவிர வேறில்லை.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.