ETV Bharat / jagte-raho

காதலியுடன் இணைந்து கடத்தல் நாடகமாடிய இளைஞர் கைது! - கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி: வெளிநாடு செல்ல பணம் பறிப்பதற்காக காதலியுடன் சேர்ந்து கடத்தல் நாடகம் நடத்திய இளைஞரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

drama with lover
author img

By

Published : Sep 14, 2019, 8:24 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர், தெலங்கானா மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவருக்கு விக்னேஷ் என்ற மகனும், வித்யா என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில், வித்யா தனது தோழியின் சகோதரி திருமணத்துக்காக கடந்த 6ஆம் தேதி திருநள்ளாறு சென்றார். அதன்பின் பெற்றோர்கள், வித்யாவை தொடர்பு கொண்டபோது, அவரது செல்ஃபோன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இதனிடையே, வித்யாவை தான் கடத்தியதாகவும் அவரை விடுவிக்க 10 லட்சம் ரூபாய் பணம் வழங்க வேண்டும் என்றும் அடையாளம் தெரியாத நபர் ஒருவர், வித்யாவின் தந்தை ஆறுமுகத்துக்கு தொலைபேசி வாயிலாக மிரட்டல் விடுத்தார்.

இதுகுறித்து, கோயம்பேடு காவல் நிலையத்தில் வித்யாவின் சகோதரர் விக்னேஷ் புகார் அளித்தார். இது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு அடையாளம் தெரியாத நபர் தொடர்பு கொண்ட செல்ஃபோன் எண் குறித்து தீவிர விசாரணை நடத்தியதில், பணம் கேட்டு மிரட்டிய நபர் காரைக்காலை சேர்ந்த மனோஜ் (24) என்பது தெரியவந்தது.

தனிப்படை போலீசார் அவரை கடலூரில் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பும் நிறுவனத்தில் ஏஜெண்டாக அவர் பணியாற்றுவதும், கடந்த இரண்டு வருடங்களாக வித்யாவை காதலித்து வருவதும் தெரியவந்தது.

இருப்பினும், கனடாவுக்கு செல்ல முயன்றபோது 10 லட்சம் ரூபாய் பணம் தேவைப்பட்டதால் தனது தந்தையிடம் பணம் உள்ளதாக வித்யா தெரிவித்தார். அதனாலேயே தனது தோழி அக்ஷயாவுடன் இணைந்து கடத்தல் நாடகத்தில் ஈடுபட்டதாக போலீசாரிடம் மனோஜ் கூறினார்.

இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், வித்யா, அக்ஷயா ஆகிய மூவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர், தெலங்கானா மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவருக்கு விக்னேஷ் என்ற மகனும், வித்யா என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில், வித்யா தனது தோழியின் சகோதரி திருமணத்துக்காக கடந்த 6ஆம் தேதி திருநள்ளாறு சென்றார். அதன்பின் பெற்றோர்கள், வித்யாவை தொடர்பு கொண்டபோது, அவரது செல்ஃபோன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இதனிடையே, வித்யாவை தான் கடத்தியதாகவும் அவரை விடுவிக்க 10 லட்சம் ரூபாய் பணம் வழங்க வேண்டும் என்றும் அடையாளம் தெரியாத நபர் ஒருவர், வித்யாவின் தந்தை ஆறுமுகத்துக்கு தொலைபேசி வாயிலாக மிரட்டல் விடுத்தார்.

இதுகுறித்து, கோயம்பேடு காவல் நிலையத்தில் வித்யாவின் சகோதரர் விக்னேஷ் புகார் அளித்தார். இது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு அடையாளம் தெரியாத நபர் தொடர்பு கொண்ட செல்ஃபோன் எண் குறித்து தீவிர விசாரணை நடத்தியதில், பணம் கேட்டு மிரட்டிய நபர் காரைக்காலை சேர்ந்த மனோஜ் (24) என்பது தெரியவந்தது.

தனிப்படை போலீசார் அவரை கடலூரில் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பும் நிறுவனத்தில் ஏஜெண்டாக அவர் பணியாற்றுவதும், கடந்த இரண்டு வருடங்களாக வித்யாவை காதலித்து வருவதும் தெரியவந்தது.

இருப்பினும், கனடாவுக்கு செல்ல முயன்றபோது 10 லட்சம் ரூபாய் பணம் தேவைப்பட்டதால் தனது தந்தையிடம் பணம் உள்ளதாக வித்யா தெரிவித்தார். அதனாலேயே தனது தோழி அக்ஷயாவுடன் இணைந்து கடத்தல் நாடகத்தில் ஈடுபட்டதாக போலீசாரிடம் மனோஜ் கூறினார்.

இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், வித்யா, அக்ஷயா ஆகிய மூவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro:Body:10லட்சம் பணம் பறிக்க  காதலியுடன் சேர்ந்து கடத்தல் நாடகம் நடத்திய வாலிபர் கைது. 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பாப்பாரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் வயது51.இவர் தெலுங்கானா மாநிலத்தில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.இவரது மகன் விக்னேஷ் வயது24 மகள் வித்யா வயது22. விக்னேஷ் சாப்ட்வேர் என்ஜினீயராகவும் வித்யா தனியார் மருத்துவமனையில் நர்சாகவும் சென்னையில் தங்கி வேலை பார்த்து வந்தனர்.இந்த நிலையில் வித்யா தனது தோழியின் அக்கா திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கடந்த 6ந் தேதி  திருநள்ளாறு சென்றார்.பின்னர் பஸ் மூலம் சென்னைக்கு வந்து கொண்டு இருப்பதாக கூறிய வித்யா சென்னை வரவில்லை வித்யாவை தொடர்பு கொண்டபோது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் காலை வித்யாவை நான் கடத்தி வைத்து இருப்பதாகவும் அவளை விடுவிக்க ரூ 10லட்சம் பணம் வேண்டும் என்று கேட்டு அவரது தந்தை ஆறுமுகம் மற்றும்  அண்ணன் விக்ணேஷ் ஆகியோருக்கு மர்ம நபர் மிரட்டல் விடுத்தார் .

இதுகுறித்து விக்னேஷ் கோயம்பேடு பஸ் நிலைய போலிசில் புகார் அளித்தார். இது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு மர்ம நபர் தொடர்பு கொண்ட செல்போன் எண்ணை வைத்து தீவிர  விசாரணை நடத்தியதில் செல்போனில் பணம் கேட்டு மிரட்டிய நபர் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த மனோஜ் என்கிற சுரேஷ்பாபு வயது24 என்பது தெரிந்தது அவரை கடலூரில் வைத்து தனிப்படை  போலிசார் கைது செய்தனர்.பின்னர் விசாரணையில் நான் வெளிநாட்டிற்கு ஆட்களை அனுப்பும் நிறுவனத்தில் ஏஜென்டாக வேலை பார்த்து வந்தேன் வித்யா தோழி ஒருவர் மூலமாக எனக்கு அறிமுகமானார் இருவரும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்தோம் கனடா சென்று வேலை பார்க்க வேண்டும் என்று நான் முயற்சி செய்து வந்தேன் அதற்கு எனக்கு 10லட்சம் பணம் தேவைப்பட்டது அப்போது வித்யா எனது தந்தை ஆறுமுகத்திடம் நிறைய பணம் உள்ளது அவர் பெரிய நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார் என்றும் கூறினார்.

இதையடுத்து வித்யா எனது காதலியான கல்லூரி மாணவி  அக்சயா ஆகியோர் உடன் சேர்ந்து கடத்தல் நாடகத்திற்கு திட்டம் போட்டேன் அதன்படி கடந்த 13ந் தேதி மலேசியாவில் இருந்து சென்னை வந்த நான் திருமண நிகழ்ச்சி முடிந்து கோயம்பேட்டிற்கு பஸ்ஸில் வந்து இறங்கிய வித்யாவை விமான நிலையம் வரவழைத்து அவரை அழைத்துக் கொண்டு பாண்டிச்சேரிக்கு சென்று இருவரும் லாட்ஜில் தங்கினோம் அங்கிருந்து  வித்யாவின் தந்தை ஆறுமுகம் மற்றும் அவரது அண்ணன் விக்ணேஷ் ஆகியோருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு  ரூ10லட்சம் பணம் கேட்டு மிரட்டினேன் ஆனால் தீடீரென  போலிசார் எண்ணை தொடர்பு கொண்டபோது நான் கடலூரில் இருப்பதாகவும் வித்யாவை நான் பார்க்கவில்லை என்று போலிசாரிடம் பொய் சொன்னதாகவும் தெரிவித்தார்.

பின்னர்  காரைக்காலில் உள்ள அக்சயா வீட்டிற்கு வித்யாவை அனுப்பிவிட்டு நான் கடலூர் வந்தபோது போலிசார் எண்ணை சுற்றி வளைத்து கைது செய்தனர் இவ்வாறு கூறினார்.  மனோஜ் வித்யா மற்றும் காரைக்காலைச் சேர்ந்த கல்லூரி மாணவி அக்சயா என இருவரையும் காதலித்து  வந்ததும் குறிப்பிடத்தக்கது தொடர்ந்து 3 பேரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.