தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த அணைக்காடு நரசிங்கபுரம் கிளையில் உள்ள வாய்க்காலில் இன்று (நவம்பர் 2) சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று கழிவுகளில் சிக்கி ஒதுங்கியது.
இதைப் பார்த்தவர்கள் உடனடியாக அணைக்காடு கிராம நிர்வாக அலுவலருக்குத் தகவல் கொடுத்தனர். இதனைத்தொடர்ந்து அலுவலர் பட்டுக்கோட்டை தாலுகா காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தார்.
இந்தத் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அதன்பின் கிராம நிர்வாக அலுவலரின் புகாரைவைத்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்னறர்.
இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? இவரை யாரேனும் கொலைசெய்தனரா அல்லது தற்கொலை செய்துகொண்டாரா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதே பகுதியில் அக்டோபர் 20ஆம் தேதி 50 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. பத்து நாள்களுக்குள் மற்றொரு சடலமும் கண்டெக்கப்பட்டிருப்பது அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.