ETV Bharat / jagte-raho

கேரளாவைச் சேர்ந்த ஹவாலா கும்பல் சிக்கியது - அமலாக்கத்துறை விசாரணை!

author img

By

Published : Nov 8, 2020, 11:01 AM IST

சென்னை: உரிய ஆவணங்கள் இல்லாத ரூ. 59 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணத்தை எடுத்துச் சென்ற கேரளாவைச் சேர்ந்த ஹவாலா கும்பலில் இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

அமலாக்கத்துறை விசாரணை
அமலாக்கத்துறை விசாரணை

சென்னை மண்ணடி பகுதியில் ஆட்டோவில் ஹவாலா கும்பல் வெளிநாட்டு பணம் கொண்டு செல்வதாக வடக்கு மண்டல காவல் துறை இணை ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையிலான தனிப்படை காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் தனிப்படை காவலர்கள் மண்ணடி ராஜாஜி சாலையில் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.

அப்போது மண்ணடி ராஜாஜி சாலை வழியாக வந்த ஆட்டோவை மடக்கி காவல் துறையினர் சோதனை செய்தனர். மேலும் அந்த ஆட்டோவில் பயணித்த இரண்டு பேரிடம் இருந்த பைகளை வாங்கி சோதனை செய்ததில் அதில் ரூ. 59, 20, 659 மதிப்பிலான வெளிநாட்டு பணம் இருப்பதை கண்டுபிடித்தனர்.

விசாரணை செய்ததில், இவர்கள் கேரளாவை சேர்ந்த முகமத் அர்ஷத், முகமது ஜியாத் என தெரியவந்துள்ளது. மேலும், கேரள மாநிலம் கோட்டயம் பகுதியிலிருந்து ரயில் மூலம் பணத்தை கொண்டு வந்து மண்ணடி தம்பு செட்டி தெருவில் மெட்ரோ பேலஸ் கடை உரிமையாளரான ஜமால் சாதிக் என்பவரிடம் கொடுக்க வந்ததாக தெரியவந்துள்ளது.

இவர்களிடம் பணத்திற்குண்டான போலியான ஆவணங்கள் இருந்ததால் இருவரையும் கைது செய்து பணத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இவர்கள் இதே போல் கருப்பு பணத்தை மாற்றி வரும் ஹவாலா கும்பல் என தெரியவந்துள்ளது.

அதேசமயம் கைப்பற்றப்பட்ட பணம் வெளிநாட்டு ரூபாய் என்பதால் அமலாக்கத் துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இதுகுறித்து இருவரிடமும் அமலாக்கத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: கஞ்சா விற்ற உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கைது!

சென்னை மண்ணடி பகுதியில் ஆட்டோவில் ஹவாலா கும்பல் வெளிநாட்டு பணம் கொண்டு செல்வதாக வடக்கு மண்டல காவல் துறை இணை ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையிலான தனிப்படை காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் தனிப்படை காவலர்கள் மண்ணடி ராஜாஜி சாலையில் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.

அப்போது மண்ணடி ராஜாஜி சாலை வழியாக வந்த ஆட்டோவை மடக்கி காவல் துறையினர் சோதனை செய்தனர். மேலும் அந்த ஆட்டோவில் பயணித்த இரண்டு பேரிடம் இருந்த பைகளை வாங்கி சோதனை செய்ததில் அதில் ரூ. 59, 20, 659 மதிப்பிலான வெளிநாட்டு பணம் இருப்பதை கண்டுபிடித்தனர்.

விசாரணை செய்ததில், இவர்கள் கேரளாவை சேர்ந்த முகமத் அர்ஷத், முகமது ஜியாத் என தெரியவந்துள்ளது. மேலும், கேரள மாநிலம் கோட்டயம் பகுதியிலிருந்து ரயில் மூலம் பணத்தை கொண்டு வந்து மண்ணடி தம்பு செட்டி தெருவில் மெட்ரோ பேலஸ் கடை உரிமையாளரான ஜமால் சாதிக் என்பவரிடம் கொடுக்க வந்ததாக தெரியவந்துள்ளது.

இவர்களிடம் பணத்திற்குண்டான போலியான ஆவணங்கள் இருந்ததால் இருவரையும் கைது செய்து பணத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இவர்கள் இதே போல் கருப்பு பணத்தை மாற்றி வரும் ஹவாலா கும்பல் என தெரியவந்துள்ளது.

அதேசமயம் கைப்பற்றப்பட்ட பணம் வெளிநாட்டு ரூபாய் என்பதால் அமலாக்கத் துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இதுகுறித்து இருவரிடமும் அமலாக்கத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: கஞ்சா விற்ற உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.