ETV Bharat / jagte-raho

ரயிலில் காவல் உதவி ஆய்வாளர் தற்கொலை - Police suicide

துாத்துக்குடி: மீளவிட்டான் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் ரயிலில் தற்கொலை செய்துகொண்டார். அவரது உடலை ரயில்வே காவல் துறையினர் மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

போலீஸ் தற்கொலை
author img

By

Published : Mar 19, 2019, 1:11 PM IST

துாத்துக்குடி மீளவிட்டான் பகுதியில் ரயிலில் அடிபட்டு ஒருவர் இறந்துகிடப்பதாக ரயில்வே காவல் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு விரைந்து சென்ற காவல் துறையினர், இறந்தவர் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதையடுத்து காவல் துறையினர் விசாரணை செய்ததில், இறந்தவர் மால்கம் பெர்ணான்டோ (50)என்பதும், துாத்துக்குடி தருவைப் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.

மேலும், இவர் மணியாச்சி காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளர் எனவும், தற்போது சிறப்பு காவல் குழுவில் பணியாற்றி வந்தார் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரிந்தது.

மேலும், அவர் எதற்காகத் தற்கொலை செய்து கொண்டார்? குடும்பத் தகராறு காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமாக என விசாரித்துவருகின்றனர். .

தற்கொலை செய்துகொண்ட மால்கம் பெர்னாண்டோவுக்கு மேகலா என்ற மனைவியும், ஒரு மகள், மகன் உள்ளனர். மேகலா, தூத்துக்குடி பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

துாத்துக்குடி மீளவிட்டான் பகுதியில் ரயிலில் அடிபட்டு ஒருவர் இறந்துகிடப்பதாக ரயில்வே காவல் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு விரைந்து சென்ற காவல் துறையினர், இறந்தவர் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதையடுத்து காவல் துறையினர் விசாரணை செய்ததில், இறந்தவர் மால்கம் பெர்ணான்டோ (50)என்பதும், துாத்துக்குடி தருவைப் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.

மேலும், இவர் மணியாச்சி காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளர் எனவும், தற்போது சிறப்பு காவல் குழுவில் பணியாற்றி வந்தார் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரிந்தது.

மேலும், அவர் எதற்காகத் தற்கொலை செய்து கொண்டார்? குடும்பத் தகராறு காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமாக என விசாரித்துவருகின்றனர். .

தற்கொலை செய்துகொண்ட மால்கம் பெர்னாண்டோவுக்கு மேகலா என்ற மனைவியும், ஒரு மகள், மகன் உள்ளனர். மேகலா, தூத்துக்குடி பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


தூத்துக்குடி தருவை பகுதியை சேர்ந்தவர் மால்கம் பெர்னாண்டோ (வயது 50). இவர் தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி போலீஸ் நிலைய காவல் உதவி ஆய்வாளர். தற்போது சிறப்பு காவல் குழுவில் பணியாற்றி வந்தார்.
இந்தநிலையில் இன்று காலை தூத்துக்குடி மீளவிட்டான் பகுதியில் ரெயிலில் அடிப்பட்டு இறந்தவர் குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்தவர்  மால்கம் பெர்னான்டோ என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவர் எதற்காக தற்கொலை கொண்டார்? குடும்ப தகராறு காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரித்து வருகின்றனர்.

தற்கொலை செய்து கொண்ட மால்கம் பெர்னாண்டோவுக்கு மேகலா என்ற மனைவியும், ஒரு மகள், மகன் உள்ளனர்.
மேகலா, தூத்துக்குடி பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.