ETV Bharat / jagte-raho

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சுட்டுக் கொலை!

author img

By

Published : Nov 12, 2020, 11:24 AM IST

சவுகார்பேட்டையில் ஃபைனான்ஸ் விடுபவர், அவரது மனைவி, மகன் என மூன்று பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

கொலை நடந்த இடம்
கொலை நடந்த இடம்

சென்னை: யானைகவுனியில் மூன்றுபேர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவமானது குடும்பத் தகராறில் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தைப் பூர்வீகமாக கொண்டவரான தலில் சந்த்(74) என்பவர், வால்டாக்ஸ் சாலையில் உள்ள விநாயகர் மேஸ்திரி தெருவில் வசித்து வருகின்றார்.

இவருக்கு புஷ்பா பாய்(70) என்ற மனைவியும், சீத்தல்(38) என்ற மகனும், பிங்கி என்ற மகளும் உள்ளனர். மகன் சீத்தலுக்கு, ஜெயமாலா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்று கருத்து வேறுபாடு காரணமாக, ஜெயமாலா பிரிந்து மகாராஷ்டிராவில் வாழ்ந்து வருகிறார். மகள் பிங்கி கணவருடன் சென்னையில் வசித்து வருகிறார். தலில் சந்த், மகன் சீத்தல் ஆகியோர் இணைந்து சவுகார்பேட்டையில் ஃபைனான்ஸ் விடும் தொழிலை செய்து வந்துள்ளனர்.

கொலை நடந்த இடம்

இந்த நிலையில் நேற்று(நவ.11) இரவு மகள் பிங்கி தனது தந்தை வீட்டிற்கு வந்து பார்க்கும்போது துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் மெத்தையில் தந்தை தலில் சந்த், தாய் புஷ்பா பாய், அண்ணன் சீத்தல் ஆகியோர் இறந்து கிடந்துள்ளனர். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பிங்கி உடனடியாக யானைகவுனி காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், கைரேகை நிபுணர்கள் குழுவை வரவழைத்து விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து காவல் ஆணையர், கூடுதல் ஆணையர் உள்ளிட்ட அலுவலர்கள் பார்வையிட்டுச் சென்றனர்.

இந்தக் கொலையாளிகளைப் பிடிக்க ஐந்து தனிப்படைகள் அமைத்து காவல் துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். மேலும் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் தனித்தனியாக நான்கு நபர்கள் சந்தேகப்படும்படியாக சென்றது தெரியவந்துள்ளது.

மேலும் சீத்தலுக்கும் அவரது மனைவி ஜெயமாலாவின் குடும்பத்திற்கும் இடையே தகராறு இருந்து வருவதாகவும், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தது முதல் சண்டை நிலவி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனால் அவர்கள் ஏதேனும் கொலை செய்துள்ளார்களா? என ஜெயமாலாவின் சகோதரர்களை தேடும் பணியில் தனிப்படை காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கிளப்பில் சூதாட்டம்: 13 பேர் கைது, 11 செல்போன்கள், ரூ.42,000 பறிமுதல்!

சென்னை: யானைகவுனியில் மூன்றுபேர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவமானது குடும்பத் தகராறில் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தைப் பூர்வீகமாக கொண்டவரான தலில் சந்த்(74) என்பவர், வால்டாக்ஸ் சாலையில் உள்ள விநாயகர் மேஸ்திரி தெருவில் வசித்து வருகின்றார்.

இவருக்கு புஷ்பா பாய்(70) என்ற மனைவியும், சீத்தல்(38) என்ற மகனும், பிங்கி என்ற மகளும் உள்ளனர். மகன் சீத்தலுக்கு, ஜெயமாலா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்று கருத்து வேறுபாடு காரணமாக, ஜெயமாலா பிரிந்து மகாராஷ்டிராவில் வாழ்ந்து வருகிறார். மகள் பிங்கி கணவருடன் சென்னையில் வசித்து வருகிறார். தலில் சந்த், மகன் சீத்தல் ஆகியோர் இணைந்து சவுகார்பேட்டையில் ஃபைனான்ஸ் விடும் தொழிலை செய்து வந்துள்ளனர்.

கொலை நடந்த இடம்

இந்த நிலையில் நேற்று(நவ.11) இரவு மகள் பிங்கி தனது தந்தை வீட்டிற்கு வந்து பார்க்கும்போது துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் மெத்தையில் தந்தை தலில் சந்த், தாய் புஷ்பா பாய், அண்ணன் சீத்தல் ஆகியோர் இறந்து கிடந்துள்ளனர். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பிங்கி உடனடியாக யானைகவுனி காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், கைரேகை நிபுணர்கள் குழுவை வரவழைத்து விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து காவல் ஆணையர், கூடுதல் ஆணையர் உள்ளிட்ட அலுவலர்கள் பார்வையிட்டுச் சென்றனர்.

இந்தக் கொலையாளிகளைப் பிடிக்க ஐந்து தனிப்படைகள் அமைத்து காவல் துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். மேலும் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் தனித்தனியாக நான்கு நபர்கள் சந்தேகப்படும்படியாக சென்றது தெரியவந்துள்ளது.

மேலும் சீத்தலுக்கும் அவரது மனைவி ஜெயமாலாவின் குடும்பத்திற்கும் இடையே தகராறு இருந்து வருவதாகவும், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தது முதல் சண்டை நிலவி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனால் அவர்கள் ஏதேனும் கொலை செய்துள்ளார்களா? என ஜெயமாலாவின் சகோதரர்களை தேடும் பணியில் தனிப்படை காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கிளப்பில் சூதாட்டம்: 13 பேர் கைது, 11 செல்போன்கள், ரூ.42,000 பறிமுதல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.