ETV Bharat / jagte-raho

வயதான தம்பதியை கட்டிப்போட்டு கொள்ளை: ரவுடி உள்பட 5 பேரிடம் விசாரணை

author img

By

Published : Oct 5, 2020, 7:06 PM IST

வயதான தம்பதியை கட்டிப்போட்டு 250 சவரன் தங்க நகை கொள்ளையடித்த வழக்கில், ரவுடி உள்பட 5 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

t nagar_theft
t nagar_theft

சென்னை : தி. நகர் சாரதாம்பாள் நகரைச் சேர்ந்த தொழில் அதிபர் நூரில் ஹக். கடந்த மாதம் 30ஆம் தேதி, நூரில் ஹக் வீட்டில் அவர், அவரது மனைவி ஆயிஷா, குடும்பத்தினரைக் கட்டிப்போட்டு 250 சவரன் தங்க நகைகள், கார் உள்ளிட்டப் பொருள்களை கொள்ளையர்களின் துணையுடன், நூரில் ஹக் உறவினர் மொய்தீன் என்பவர் கொள்ளையடித்துச் சென்றார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக, பாண்டிபஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொள்ளைக்கு மூளையாகச் செயல்பட்ட மொய்தீனை பிடிக்க, தனிப்படை போலீசார் தூத்துக்குடியில் முகாமிட்டு அவரைத் தேடி வருகின்றனர்.

இந்தநிலையில், கொள்ளையில் தொடர்புடையதாக, ராயப்பேட்டையைச் சேர்ந்த ரவுடி எல்லப்பன் உள்பட 5 பேரை பாண்டிபஜார் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: இருசக்கர வாகனத்தில் கள்ளச்சாராயம் கடத்திய இருவர் கைது!

சென்னை : தி. நகர் சாரதாம்பாள் நகரைச் சேர்ந்த தொழில் அதிபர் நூரில் ஹக். கடந்த மாதம் 30ஆம் தேதி, நூரில் ஹக் வீட்டில் அவர், அவரது மனைவி ஆயிஷா, குடும்பத்தினரைக் கட்டிப்போட்டு 250 சவரன் தங்க நகைகள், கார் உள்ளிட்டப் பொருள்களை கொள்ளையர்களின் துணையுடன், நூரில் ஹக் உறவினர் மொய்தீன் என்பவர் கொள்ளையடித்துச் சென்றார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக, பாண்டிபஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொள்ளைக்கு மூளையாகச் செயல்பட்ட மொய்தீனை பிடிக்க, தனிப்படை போலீசார் தூத்துக்குடியில் முகாமிட்டு அவரைத் தேடி வருகின்றனர்.

இந்தநிலையில், கொள்ளையில் தொடர்புடையதாக, ராயப்பேட்டையைச் சேர்ந்த ரவுடி எல்லப்பன் உள்பட 5 பேரை பாண்டிபஜார் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: இருசக்கர வாகனத்தில் கள்ளச்சாராயம் கடத்திய இருவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.