ETV Bharat / jagte-raho

குடித்துவிட்டு, உடன் குடித்த மகனை கொலை செய்த தந்தை..! - சங்கர் மகன் முத்துக்குமார்

தஞ்சாவூர்: தந்தை - மகன் இருவரும் மது அருந்தும்போது, ஏற்பட்ட கடும் வாக்கு வாதத்தால், மகனை அதே இடத்தில் கொலை செய்துவிட்டுத் தப்பியோடிய தந்தையை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

குடித்துவிட்டு, உடன் குடித்த மகனை கொலை செய்த தந்தை..!
author img

By

Published : Jul 15, 2019, 8:12 AM IST

Updated : Jul 15, 2019, 10:27 AM IST

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அரசலாற்றைச் சேர்ந்த சங்கர் மகன் முத்துக்குமார்(40). தச்சுத் தொழிலாளியான இவரும், இவர் தந்தையும் ஒன்றாக மது அருந்தி பேசிக்கொண்டு இருந்துள்ளனர். இதனிடையே, இருவருக்கும் ஏற்பட்ட பேச்சுவார்த்தை, வாய் தகராறாக மாறியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சங்கர், தனது மகனைக் கொலை செய்துள்ளதாக அறியப்படுகிறது.

மொட்டை மாடியிலிருந்து வந்த சத்தத்தைத் தொடர்ந்து, அருகில் இருந்தர்கள் சென்று பார்த்தபோது, முத்துக்குமார் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து காவல்துறைக்குத் தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் நிலைய ஆய்வாளரும், காவல்துறை துணை கண்காணிப்பாளரும், முத்துக்குமாரின் உடலைக் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக, மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

குடித்துவிட்டு, உடன் குடித்த மகனை கொலை செய்த தந்தை..!

அதன்பின், வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், கொலை செய்த தந்தை சங்கரைத் தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட முத்துக்குமாருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அரசலாற்றைச் சேர்ந்த சங்கர் மகன் முத்துக்குமார்(40). தச்சுத் தொழிலாளியான இவரும், இவர் தந்தையும் ஒன்றாக மது அருந்தி பேசிக்கொண்டு இருந்துள்ளனர். இதனிடையே, இருவருக்கும் ஏற்பட்ட பேச்சுவார்த்தை, வாய் தகராறாக மாறியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சங்கர், தனது மகனைக் கொலை செய்துள்ளதாக அறியப்படுகிறது.

மொட்டை மாடியிலிருந்து வந்த சத்தத்தைத் தொடர்ந்து, அருகில் இருந்தர்கள் சென்று பார்த்தபோது, முத்துக்குமார் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து காவல்துறைக்குத் தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் நிலைய ஆய்வாளரும், காவல்துறை துணை கண்காணிப்பாளரும், முத்துக்குமாரின் உடலைக் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக, மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

குடித்துவிட்டு, உடன் குடித்த மகனை கொலை செய்த தந்தை..!

அதன்பின், வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், கொலை செய்த தந்தை சங்கரைத் தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட முத்துக்குமாருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர்.

Intro:தஞ்சாவூர் ஜுலை 14

தந்தையே மகனை வெட்டிய கொலை செய்த சம்பவம்
பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.Body:
தஞ்சாவூர் மாவட்டம்
கும்பகோணத்தில் அரசலாற்றை சேர்ந்த சங்கர் மகன் முத்துக்குமார் வயது 40, தச்சு தொழிலாளி இவரும் இவர் தந்தையும் ஒன்றாக மது அருந்திவிட்டு கஞ்சா அடித்து கொண்டு இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாத்தில் இதில் ஆத்திரம் அடைந்த சங்கர் தனது மகனை கொலை செய்துள்ளார் என்று தெரியவருகிறது. அருகிலுள்ளுவர்கள் மாடிக்குச் சென்று பார்த்தபோது முத்துக்குமார் மொட்டை மாடியில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்
தகவலறிந்த மேற்கு நிலைய காவல் நிலைய ஆய்வாளர் மணிவேல் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முத்துக்குமாரின் உடலை கைப்பற்றி கொலை செய்த தந்தை சங்கரை தேடி வருகின்றனர். முத்துக்குமாருக்கு திருமணமாகி இரண்டு மகன்களும் உள்ளனர்
முத்துக்குமார் மீது 2018 ஆண்டு மேற்கு காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
முத்துக்குமார் உடல் தற்போது உடற்கூறு ஆய்வுக்காக மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுConclusion:Tanjore sudhakaran 9976644011
Last Updated : Jul 15, 2019, 10:27 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.