ETV Bharat / jagte-raho

10 வயது சிறுமிக்கு 56 வயது நபர் கொடுத்த பாலியல் தொல்லை - பாய்ந்தது போக்சோ!

author img

By

Published : Dec 13, 2020, 9:22 PM IST

பத்து வயது சிறுமிக்கு 56 வயதான நபர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பெற்றோர் அளித்த புகாரின்பேரில், சம்பந்தப்பட்ட நபர் மீது காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது நடவடிக்கை எடுத்துள்ளனர்.

child abuse in thiruvallur
child abuse in thiruvallur

திருவள்ளூர்: 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்து சிறையிலடைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் விஜயன் (56). இவர் பக்கத்து வீட்டில் வசிக்கும் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். பெற்றோர்கள் ஊருக்குச் சென்றிருந்த நிலையில் சம்பந்தப்பட்ட நபர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதுகுறித்து சிறுமி பெற்றோரிடம் தெரிவிக்க, காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து விஜயனை கைதுசெய்த காவல் துறையினர், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவள்ளூர்: 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்து சிறையிலடைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் விஜயன் (56). இவர் பக்கத்து வீட்டில் வசிக்கும் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். பெற்றோர்கள் ஊருக்குச் சென்றிருந்த நிலையில் சம்பந்தப்பட்ட நபர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதுகுறித்து சிறுமி பெற்றோரிடம் தெரிவிக்க, காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து விஜயனை கைதுசெய்த காவல் துறையினர், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.