ETV Bharat / jagte-raho

வீச்சரிவாளுடன் வாகனம் திருடும் கும்பல் - அச்சத்தில் பொதுமக்கள்!

author img

By

Published : Dec 29, 2020, 8:30 PM IST

கூடுவாஞ்சேரியில் ரோந்து பணியில் இருந்த காவல் துறையினரை கண்டதும் அடையாளம் தெரியாத நபர்கள் தாங்கள் எடுத்த வந்த இருசக்கர வாகனத்தைப் போட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர்.

பைக் திருடர்கள்
bike thieves

செங்கல்பட்டு: கூடுவாஞ்சேரியில் வீச்சரிவாளுடன் வந்து இருசக்கர வாகனத்தை திருடிய அடையாளம் தெரியாத நபர்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

கூடுவாஞ்சேரி காவல் துறையினர், நேற்று(டிச.29) இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காவலர்களைப் பார்த்த அடையாளம் தெரியாத நபர்கள் தாங்கள் எடுத்த வந்த இருசக்கர வாகனத்தைப் போட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர்.

வீச்சரிவாளுடன் வாகனம் திருடும் கும்பல்

பின்னர், காவல் துறையினர் அந்த வாகனத்தைக் கைப்பற்றி சோதனையிட்டபோது, அது காயாரம்பேட்டில் வசிக்கும் ஒருவருக்குச் சொந்தமானது என தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட காவல் துறையினர், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, இரவு நேரத்தில் இரண்டு பேர், முகமூடி மற்றும் தலைக்கவசம் அணிந்தும், கையில் வீச்சரிவாளுடனும் ஒரு வீட்டிலிருந்த விலையுயர்ந்த இருசக்கர வாகனத்தைத் திருடும் காட்சி பதிவாகியிருந்தது.

இந்த சிசிடிவி கேமரா காட்சிகள் கூடுவாஞ்சேரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையின் புறநகர் பகுதியில், திருடர்கள் வீச்சரிவாளுடன் வலம் வர ஆரம்பித்திருப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கு:குற்றவாளிக்கு 3 மரண தண்டனைகள் விதித்து தீர்ப்பு

செங்கல்பட்டு: கூடுவாஞ்சேரியில் வீச்சரிவாளுடன் வந்து இருசக்கர வாகனத்தை திருடிய அடையாளம் தெரியாத நபர்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

கூடுவாஞ்சேரி காவல் துறையினர், நேற்று(டிச.29) இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காவலர்களைப் பார்த்த அடையாளம் தெரியாத நபர்கள் தாங்கள் எடுத்த வந்த இருசக்கர வாகனத்தைப் போட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர்.

வீச்சரிவாளுடன் வாகனம் திருடும் கும்பல்

பின்னர், காவல் துறையினர் அந்த வாகனத்தைக் கைப்பற்றி சோதனையிட்டபோது, அது காயாரம்பேட்டில் வசிக்கும் ஒருவருக்குச் சொந்தமானது என தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட காவல் துறையினர், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, இரவு நேரத்தில் இரண்டு பேர், முகமூடி மற்றும் தலைக்கவசம் அணிந்தும், கையில் வீச்சரிவாளுடனும் ஒரு வீட்டிலிருந்த விலையுயர்ந்த இருசக்கர வாகனத்தைத் திருடும் காட்சி பதிவாகியிருந்தது.

இந்த சிசிடிவி கேமரா காட்சிகள் கூடுவாஞ்சேரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையின் புறநகர் பகுதியில், திருடர்கள் வீச்சரிவாளுடன் வலம் வர ஆரம்பித்திருப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கு:குற்றவாளிக்கு 3 மரண தண்டனைகள் விதித்து தீர்ப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.