ETV Bharat / jagte-raho

Latest Crime News:சேலத்தில் பல லட்சம் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல்!

author img

By

Published : Oct 20, 2019, 3:41 AM IST

சேலம்: தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட பல லட்ச ரூபாய் மதிப்பிலான பான்பராக், ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

Panparag, Hans Seized In Salem

Latest Crime News: சேலம் மாவட்டம் பச்சப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சித்திக். இவர் சேலத்தில் உள்ள தீபம் பீடி என்ற நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் சேலம் கந்தம்பட்டி பகுதியில் உள்ள ஃபெட்எக்ஸ் என்ற பார்சல் நிறுவனத்திற்கு சித்திக் பெயரில் 53 சரக்கு மூட்டைகள் டெல்லியிலிருந்து வந்தது.

இதையடுத்து, சரக்கு மூட்டைகளை பார்சல் நிறுவன ஊழியர்கள் கிச்சி பாளையம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இறக்கி வைத்து விட்டு சென்றனர். இந்த மூட்டைகளில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக், ஹான்ஸ் இருப்பது பார்சல் நிறுவன ஊழியர்களுக்கு தெரியவந்தது. இதுகுறித்து, பார்சல் நிறுவன ஊழியர்கள் சேலம் மாநகர காவல் ஆணையர் செந்தில்குமாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதனைத்தொடர்ந்து கிச்சிப்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் சிவகுமார் தலைமையிலான காவலர்கள் சரக்கு மூட்டைகள் இறக்கி வைக்கப்பட்டிருந்த வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது, அங்குபதுக்கி வைக்கப்பட்டிருந்த 53 மூட்டைகளிலும் ஹான்ஸ், பான்பராக் உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

உடனடியாக காவல் துறையினர் சித்திக்கை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் தனது பெயரில் பார்சல் ஏதும் பதிவு செய்யவில்லை என்றும் தனக்கும் பார்சலுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து அவர்பணியாற்றும் நிறுவன உரிமையாளர் சித்திக்கின் ஆதார் அட்டையை பயன்படுத்தி பார்சலை பதிவு செய்துள்ளாரா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பான்பராக்,ஹான்ஸ்

தொடர்ந்து காவல் துறையினர் பீடி நிறுவன உரிமையாளரிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். சேலம் மாநகரையொட்டிய பகுதியில் பல லட்சம் மதிப்பிலான பான்பராக், ஹான்ஸ் பிடிபட்டிருப்பது சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: Latest Pudukkottai News: 2,100 போதை மாத்திரைகள் பறிமுதல் - விற்பனை செய்த 6 பேர் கைது!

Latest Crime News: சேலம் மாவட்டம் பச்சப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சித்திக். இவர் சேலத்தில் உள்ள தீபம் பீடி என்ற நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் சேலம் கந்தம்பட்டி பகுதியில் உள்ள ஃபெட்எக்ஸ் என்ற பார்சல் நிறுவனத்திற்கு சித்திக் பெயரில் 53 சரக்கு மூட்டைகள் டெல்லியிலிருந்து வந்தது.

இதையடுத்து, சரக்கு மூட்டைகளை பார்சல் நிறுவன ஊழியர்கள் கிச்சி பாளையம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இறக்கி வைத்து விட்டு சென்றனர். இந்த மூட்டைகளில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக், ஹான்ஸ் இருப்பது பார்சல் நிறுவன ஊழியர்களுக்கு தெரியவந்தது. இதுகுறித்து, பார்சல் நிறுவன ஊழியர்கள் சேலம் மாநகர காவல் ஆணையர் செந்தில்குமாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதனைத்தொடர்ந்து கிச்சிப்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் சிவகுமார் தலைமையிலான காவலர்கள் சரக்கு மூட்டைகள் இறக்கி வைக்கப்பட்டிருந்த வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது, அங்குபதுக்கி வைக்கப்பட்டிருந்த 53 மூட்டைகளிலும் ஹான்ஸ், பான்பராக் உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

உடனடியாக காவல் துறையினர் சித்திக்கை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் தனது பெயரில் பார்சல் ஏதும் பதிவு செய்யவில்லை என்றும் தனக்கும் பார்சலுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து அவர்பணியாற்றும் நிறுவன உரிமையாளர் சித்திக்கின் ஆதார் அட்டையை பயன்படுத்தி பார்சலை பதிவு செய்துள்ளாரா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பான்பராக்,ஹான்ஸ்

தொடர்ந்து காவல் துறையினர் பீடி நிறுவன உரிமையாளரிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். சேலம் மாநகரையொட்டிய பகுதியில் பல லட்சம் மதிப்பிலான பான்பராக், ஹான்ஸ் பிடிபட்டிருப்பது சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: Latest Pudukkottai News: 2,100 போதை மாத்திரைகள் பறிமுதல் - விற்பனை செய்த 6 பேர் கைது!

Intro:சேலத்தில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த பல லட்சம் மதிப்பிலான பான்பராக்,ஹான்ஸ் பறிமுதல். பீடி கம்பெனி ஊழியரை பிடித்து விசாரணை.


Body:சேலத்தில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த பல லட்சம் மதிப்பிலான பான்பராக்,ஹான்ஸ் பறிமுதல் செய்யப்பட்டது. சேலம் கிச்சிப்பாளையம் காவல் நிலைய எல்லையில் உள்ளது பச்சப்பட்டி. இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் சித்திக். இவர் சேலம் டவுன் பகுதியில் இருக்கும் வால்மீகி தெருவில் உள்ள தீபம் டிவி கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

நேற்று சித்திக் பெயரில் 53 பார்சல் மூட்டைகள் சேலம் கந்தம்பட்டி பகுதியில் உள்ள பெட்டாக்ஸ் என்ற பார்சல் நிறுவனத்திற்கு வந்தது. பின்னர் இந்த மூட்டைகளை பார்சல் நிறுவன ஊழியர்கள் கிச்சி பாளையத்தில் உள்ள காளி கவுண்டர் காடு பகுதியில் வீடு ஒன்றில் இறக்கி வைத்து விட்டு சென்றனர். இந்த மூட்டைகளில் பான்பராக் மற்றும் ஆண் இருப்பது பார்சல் நிறுவன ஊழியர்களுக்கு தெரியவந்தது.

இதுகுறித்து பார்சல் நிறுவன ஊழியர்கள் உடனே சேலம் மாநகர காவல் ஆணையாளர் செந்தில்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து இது குறித்து விசாரிக்க அவர் கிச்சிப்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் சிவகுமாருக்கு உத்தரவிட்டார். இதன்பேரில் சிவகுமார் மற்றும் காவலர்கள் சனி இரவு மூட்டைகள் இறக்கி வைக்கப்பட்டிருந்த வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர்.

அப்போது வீட்டுக்குள் 53 மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இந்த மூட்டைகள் அனைத்திலும் ஆண் மற்றும் பான்பராக் இருந்தது. இந்த மூட்டைகள் அனைத்தும் டெல்லியில் இருந்து சேலத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளது. பின்னர் இந்த பான்பராக் ஹான்ஸ் மூட்டைகள் யாருக்காக வந்தது என சித்திக்கை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

அப்பொழுது வாலிபர் சித்திக் தான் பார்சல் ஒன்றும் செய்யவில்லை தான் பணியாற்றும் தீபம் பிடி கம்பெனி உரிமையாளர் தனது ஆதார் கார்டை வைத்து. அவர் எதுவும் பார்சலை புக் செய்தாரா? என தெரியவில்லை.
தனக்கும் பார் சொல்லுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். இதனையடுத்து தற்போது கிச்சிப்பாளையம் போலீசார் தீபம் பிடி கம்பெனி உரிமையாளரிடம் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

சேலத்தில் பல லட்சம் மதிப்பிலான பான்பராக் மற்றும் ஆண் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேறு யாரும் பான்பராக் மற்றும் ஆண் பதுக்கி வைத்துள்ளனர்? என்றும் தற்போது சேலம் மாநகர பகுதி முழுவதும் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.