ETV Bharat / jagte-raho

நகைப் பட்டறையில் கொத்தடிமைகளாக பணிபுரிந்த 61 சிறுவர்கள் மீட்பு!

author img

By

Published : Sep 7, 2019, 6:18 AM IST

சென்னை: நகைப் பட்டறையில் கொத்தடிமைகளாக பணிபுரிந்து வந்த 61 சிறுவர்களை குழந்தை தொழிலாளர் ஒழிப்பு அலுவலர்கள் மீட்டு காப்பகத்திற்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

recovery

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ளது வால்டாக்ஸ் சாலை. இந்த சாலையின் அருகே உள்ள கடைகள், வணிக நிறுவனங்களில் ஏராளமான சிறுவர்கள் கொத்தடிமைகளாக பணிபுரிந்து வருவதாக குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில், வால்டாக்ஸ் சாலையில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்களில் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அங்குள்ள நகை பட்டறை உள்பட ஐந்து இடங்களில் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டதில் 61 சிறுவர்கள் கொத்தடிமைகளாக பணியில் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, பணிபுரிந்து வந்த 61 சிறுவர்களும் மேற்குவங்கத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், நகைக்கடை உரிமையாளர்கள் சிறுவர்களின் பெற்றோர்களுக்கு முன் பணம் கொடுத்து பல வருடங்களாக கொத்தடிமைகளாக பணியில் அமர்த்தி இருந்ததும் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, அந்த 61 சிறுவர்களும் மீட்கப்பட்டனர். பின்னர் இதுகுறித்து ஆர்டிஓ, வட்டாட்சியருக்கு குழந்தை தொழிலாளர் ஒழிப்பு அலுவலர்கள் தகவல் தெரிவித்தனர். அதையடுத்து, மீட்கப்பட்ட சிறுவர்கள் அனைவரும் காப்பகத்திற்கு அழைத்து செல்லப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நகை பட்டறை  கொத்தடிமைகள்  சிறுவர்கள்  மீட்பு  சென்னை  Jewelry Workshop  Slaves  children  Chennai  Recover
மீட்கப்பட்ட சிறுவர்கள்

மேலும், சிறுவர்களை கொத்தடிமைகளாக பணியில் அமர்த்திய நகைப் பட்டறை உரிமையாளர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ளது வால்டாக்ஸ் சாலை. இந்த சாலையின் அருகே உள்ள கடைகள், வணிக நிறுவனங்களில் ஏராளமான சிறுவர்கள் கொத்தடிமைகளாக பணிபுரிந்து வருவதாக குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில், வால்டாக்ஸ் சாலையில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்களில் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அங்குள்ள நகை பட்டறை உள்பட ஐந்து இடங்களில் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டதில் 61 சிறுவர்கள் கொத்தடிமைகளாக பணியில் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, பணிபுரிந்து வந்த 61 சிறுவர்களும் மேற்குவங்கத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், நகைக்கடை உரிமையாளர்கள் சிறுவர்களின் பெற்றோர்களுக்கு முன் பணம் கொடுத்து பல வருடங்களாக கொத்தடிமைகளாக பணியில் அமர்த்தி இருந்ததும் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, அந்த 61 சிறுவர்களும் மீட்கப்பட்டனர். பின்னர் இதுகுறித்து ஆர்டிஓ, வட்டாட்சியருக்கு குழந்தை தொழிலாளர் ஒழிப்பு அலுவலர்கள் தகவல் தெரிவித்தனர். அதையடுத்து, மீட்கப்பட்ட சிறுவர்கள் அனைவரும் காப்பகத்திற்கு அழைத்து செல்லப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நகை பட்டறை  கொத்தடிமைகள்  சிறுவர்கள்  மீட்பு  சென்னை  Jewelry Workshop  Slaves  children  Chennai  Recover
மீட்கப்பட்ட சிறுவர்கள்

மேலும், சிறுவர்களை கொத்தடிமைகளாக பணியில் அமர்த்திய நகைப் பட்டறை உரிமையாளர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

Intro:Body:சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள வால்டாக்ஸ் சாலையில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் ஏராளமான சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டு கொத்தடிமைகளாக உள்ளதாக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

 தகவலின் பேரில் அங்கு சென்ற அதிகாரிகள் வால்டாக்ஸ் சாலையில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் ஆய்வு நடத்தினர்.

அப்போது வால்டாக்ஸ் சாலையில் உள்ள நகை பட்டறை உள்பட 5 இடங்களில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் முன்பணம் கொடுத்து கொத்தடிமைகளாக வேலைக்கு அமர்த்தப்பட்டு இருந்த 61 சிறுவர்களை மீட்டு தற்போது காசிமேட்டில் குழந்தைகள் காப்பகத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

 முதற்கட்ட விசாரணையில் மீட்கப்பட்ட 61 குழந்தைகளும் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள் எனவும், அவர்கள் முன் பணம் கொடுத்து கொத்தடிமைகளாக பல வருடங்களாக அங்கு வேலை செய்து வருவதும் தெரியவந்தது.

 அதனைத் தொடர்ந்து இது குறித்து ஆர்டிஓ மற்றும் வட்டாட்சியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் காப்பகத்திற்கு வந்து  இது தொடர்பாக  விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சிறுவர்களை கொத்தடிமைகளாக வேலைக்கு அமர்த்திய நகைப் பட்டறை உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.