ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று(டிசம்பர்-12) காலை ராக்கெட் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இதில், ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இதுகுறித்து உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "வடக்குக் காபூலில் உள்ள லப்-இ-ஜார் பகுதியில் இருந்து ஏவப்பட்ட ராக்கெட், விமான நிலையம், ஹவாஷினாசி, ஷன் அபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை தாக்கியது. இந்த தாக்குதலுக்கு தற்போதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல், கடந்த மாதம் லப்-இ-ஜார் பகுதிக்கு அருகே மற்றொரு ராக்கெட் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.