ETV Bharat / international

சீனாவில் மீண்டும் தலைக்காட்டும் கரோனா

author img

By

Published : Oct 13, 2020, 11:19 AM IST

உலகளவில் கடந்த 24 மணிநேரத்தில் 2 லட்சத்து 94 ஆயிரத்து 97 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 4 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

COVID-19 tracker
COVID-19 tracker

உலகளவில் கரோனா பரவல் தொடர்ந்து தீவிரமடைந்துவருகிறது. இதுவரை உலகளவில் 3 கோடியே 80 லட்சத்து 40 ஆயிரத்து 148 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10 லட்சத்து 85 ஆயிரத்து 373ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 85 லட்சத்து 98 ஆயிரத்து 151ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 2 லட்சத்து 94 ஆயிரத்து 97 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 ஆயிரத்து 938 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் அதிகளவிலான கரோனா பாதிப்பு அமெரிக்காவில் பதிவாகியுள்ளது. இதுவரை அந்நாட்டில் 80 லட்சத்து 37 ஆயிரத்து 789 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு லட்சத்து 20 ஆயிரத்து 11 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது.

இந்தியாவில் தீவிரத்தன்மை குறைந்துவரும் நிலையில், சீனாவில் மீண்டும் கரோனா தலைக்காட்ட தொடங்கியுள்ளது. அங்குள்ள துறைமுக நகரமான குவிங்டாவோவில் மீண்டும் பாதிப்புகள் தென்படத் தொடங்கியுள்ளதால், சீனா அரசு உஷார் நிலையில் உள்ளது. கடந்த சில நாட்களில் மட்டும் சுமார் 30 லட்சம் பேருக்கு பரிசோதனை மேற்கொண்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டவருக்கு உடல்நிலை பாதிப்பு - மருத்துவ சோதனைகள் நிறுத்தம்

உலகளவில் கரோனா பரவல் தொடர்ந்து தீவிரமடைந்துவருகிறது. இதுவரை உலகளவில் 3 கோடியே 80 லட்சத்து 40 ஆயிரத்து 148 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10 லட்சத்து 85 ஆயிரத்து 373ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 85 லட்சத்து 98 ஆயிரத்து 151ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 2 லட்சத்து 94 ஆயிரத்து 97 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 ஆயிரத்து 938 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் அதிகளவிலான கரோனா பாதிப்பு அமெரிக்காவில் பதிவாகியுள்ளது. இதுவரை அந்நாட்டில் 80 லட்சத்து 37 ஆயிரத்து 789 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு லட்சத்து 20 ஆயிரத்து 11 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது.

இந்தியாவில் தீவிரத்தன்மை குறைந்துவரும் நிலையில், சீனாவில் மீண்டும் கரோனா தலைக்காட்ட தொடங்கியுள்ளது. அங்குள்ள துறைமுக நகரமான குவிங்டாவோவில் மீண்டும் பாதிப்புகள் தென்படத் தொடங்கியுள்ளதால், சீனா அரசு உஷார் நிலையில் உள்ளது. கடந்த சில நாட்களில் மட்டும் சுமார் 30 லட்சம் பேருக்கு பரிசோதனை மேற்கொண்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டவருக்கு உடல்நிலை பாதிப்பு - மருத்துவ சோதனைகள் நிறுத்தம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.