ETV Bharat / international

உலகளவில் கரோனாவால் குறைந்த காற்று மாசு அளவு!

author img

By

Published : May 13, 2020, 11:28 PM IST

பெர்லின்: கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக அமலில் உள்ள ஊரடங்கு காரணமாக, காற்று மாசு அளவு அதிகளவில் குறைந்துள்ளது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ே்ே்
dே்ே்

கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டதால் உலகளவில் காற்றுமாசு அளவு 60 விழுக்காடு குறைந்துள்ளதாக பெர்லின் புவி இயற்பியல் ஆராய்ச்சியாளர்களின் இரண்டு புதிய ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளன.

இதுகுறித்து பெர்லின் ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறுகையில், "காற்றின் தரம் உயர்ந்துள்ளது தற்காலிகமானது தான். வாகனங்கள் உபயோகம் எதிர்காலத்தில் அதிகமாகும்போது காற்று மாசு பெரிதும் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. கடந்த 1990ஆம் ஆண்டு முதல் காற்று மாசு அளவு கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஆனால், தற்போது தான் வீழ்ச்சி அடைந்துள்ளது" என்றார்.

நைட்ரஜன் டை ஆக்சைடு மாசுபாட்டின் மாற்றங்களை மதிப்பிடுவதற்கு, காற்றின் தரத்தினை அளவிடும் செயற்கைக்கோளை ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தினர். அதன் மூலம், நைட்ரஜன் டை ஆக்சைடு மாசுபாடு, சீன நகரங்களில் 40 விழுக்காடும், ஐரோப்பா, அமெரிக்கா நாடுகளில் 20 முதல் 38 விழுக்காடும் குறைந்துள்ளது தெரியவந்தது. இத்தகைய மாற்றங்கள் தற்காலிகமானது என்றாலும், ஊரடங்கால் ஏற்பட்ட ஒரு நன்மையாகவும் பார்க்கலாம்.

இதையும் படிங்க: 'மகாராஷ்டிராவுக்கான ஜிஎஸ்டி பங்கை வழங்க வேண்டும்'- பிரதமருக்கு சிவசேனா கோரிக்கை

கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டதால் உலகளவில் காற்றுமாசு அளவு 60 விழுக்காடு குறைந்துள்ளதாக பெர்லின் புவி இயற்பியல் ஆராய்ச்சியாளர்களின் இரண்டு புதிய ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளன.

இதுகுறித்து பெர்லின் ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறுகையில், "காற்றின் தரம் உயர்ந்துள்ளது தற்காலிகமானது தான். வாகனங்கள் உபயோகம் எதிர்காலத்தில் அதிகமாகும்போது காற்று மாசு பெரிதும் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. கடந்த 1990ஆம் ஆண்டு முதல் காற்று மாசு அளவு கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஆனால், தற்போது தான் வீழ்ச்சி அடைந்துள்ளது" என்றார்.

நைட்ரஜன் டை ஆக்சைடு மாசுபாட்டின் மாற்றங்களை மதிப்பிடுவதற்கு, காற்றின் தரத்தினை அளவிடும் செயற்கைக்கோளை ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தினர். அதன் மூலம், நைட்ரஜன் டை ஆக்சைடு மாசுபாடு, சீன நகரங்களில் 40 விழுக்காடும், ஐரோப்பா, அமெரிக்கா நாடுகளில் 20 முதல் 38 விழுக்காடும் குறைந்துள்ளது தெரியவந்தது. இத்தகைய மாற்றங்கள் தற்காலிகமானது என்றாலும், ஊரடங்கால் ஏற்பட்ட ஒரு நன்மையாகவும் பார்க்கலாம்.

இதையும் படிங்க: 'மகாராஷ்டிராவுக்கான ஜிஎஸ்டி பங்கை வழங்க வேண்டும்'- பிரதமருக்கு சிவசேனா கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.