ETV Bharat / international

பிரிட்டன் தலையெழுத்தை தீர்மானிக்கும் தேர்தல்!

author img

By

Published : Nov 9, 2019, 9:50 AM IST

Updated : Nov 9, 2019, 3:30 PM IST

பிரெக்ஸிட்டை மையமாகக் கொண்டு டிசம்பர் 12ஆம் தேதி, பிரிட்டனில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் அந்நாட்டின் தலையெழுத்தையே தீர்மானிக்கப் போவதாக முன்னாள் இந்தியத் தூதர் விஷ்ணு பிரகாஷ் கட்டுரை எழுதியுள்ளார். அவர் எழுதிய கட்டுரை இதோ...

brexit

தங்கள் பலவீனத்தைப் பெருமையுடன் வெளிக்காட்டி தம்மை தாமே கேலிசெய்து கொள்வதில் கைத்தேர்ந்தவர்கள் இங்கிலாந்துவாசிகள்!

அவர்களுக்கு அரசியல்வாதிகள் என்றாலே சுத்தமாகப் பிடிக்காது. தயிருடன் மீன் சாப்பிடுவது எப்படி அருவெறுக்கப் படுகிறதோ அதுபோலத்தான் அரசியல்வாதிகளை அந்நாட்டு மக்கள் அருவெறுக்கிறார்கள். என்ன செய்வது, பிரிட்டன் அளிக்கும் சம்பளம் நிறுவனங்களுடன் போட்டிப்போடத் துப்பில்லாத, தற்பெருமை பேசுவதற்கே அரசியல்வாதிகளுக்கு உதவுகிறது' என்கிறார் ஆங்கில எழுத்தாளரும், அரசியல் விமர்சகருமான அர்டியன் கில்.

பத்து ஆண்டுகளுக்குள் நாட்டை நான்காவது முறையாக பொதுத்தேர்தலுக்கு அழைத்துச்சென்றுள்ள இன்றைய அரசியல்வாதிகளின் மதிப்பு அந்நாட்டு மக்கள் மனதில் எந்த கதியில் உள்ளதோ!

2016 ஜூன் 23ஆம் தேதி பிரிக்ஸிட் வாக்கெடுப்பில், எதிர்பார்ப்புகளுக்கு மாறான முடிவுகள் வெளியானதால் ( ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் வெளியேற வேண்டுமென மக்கள் வாக்களித்தனர்) முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் பதவி வலிகினார்.

சமீபத்தில் வெளியான அவரது புத்தகத்தில்(For the Record) , 'பிரெக்ஸிட் வாக்கெடுப்பின் முடிவென்பது, ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் வெளியேறக் கூடாது என பாடுபட்டவர்களுக்கு தோல்வியையே தேடித்தந்தது. அது கடைசியில் நாட்டை பிளவுபடுத்தி, அரசை முடமாக்கி, ஒப்பந்தமில்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் வெளியேறக் கூடிய சூழலை உருவாக்கியுள்ளது. இதுதான் என் வாழ்க்கையில் நடந்த மிகவும் வருத்தத்திற்குரிய விஷயமாகும்' எனக் கூறியுள்ளார்.

பிரெக்ஸிட், brexit
பிரெக்ஸிட்

டேவிட் கேமரூனைத் தொடர்ந்து பிரிட்டன் மக்களின் பேராதரவை வென்றிடலாம், இதன் மூலம் பிரிக்ஸிட் பேச்சுவார்த்தையில் பிரிட்டனின் கை ஓங்கியிருக்கும் என நம்பி 2017ஆம் ஆண்டு தேர்தல் களம் கண்டார் கன்சர்வேட்டிவ் கட்சியின் தெரசா மே.

ஆனால் கடும் அதிருப்தியிலிருந்த மக்களோ, கன்சர்வேட்டிவ் கட்சியிடமிருந்து மேலும் 13 தொகுதிகளை ( டேவிட் கேமரூன் வசம் 330 தொகுதிகள் இருந்தன) பறித்துக்கொண்டனர். இதனால், பிரதமர் தேரசா மே நிலையற்ற சிறுபான்மை அரசாங்கத்தை உருவாக்க வேண்டியதாயிற்று.

பிரெக்ஸிட் பிரிட்டனில் ஆழமான அரசியல் பிளவுகளை ஏற்படுத்தியது. ஐரோப்பிய ஒன்றியம் பிரிட்டன் நாட்டை ஆக்கிரமித்திருப்பதாக பிரெஸ்கிட் ஆதரவாளர்கள் கூறுகின்றனர், அதனை மீட்டெடுக்க வேண்டுமென அவர்கள் துடிக்கின்றனர். ஆனால், பிரிட்டனின் ஸ்காட்லேண்ட், வடக்கு அயர்லாந்து பிராந்திய மக்கள் பிரிக்ஸிட்டை அறவே எதிர்க்கின்றனர்.

முன்னாள் பிரதமர் தெரசா மேவின் பிரிக்ஸிட் ஒப்பந்தத்தைப் பிரிட்டன் நாடாளுமன்றம் மூன்று முறை நிராகரித்தது. அதனால் வேறுவழியின்றி கடந்த ஜூன் மாதம் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

முன்னாள் பிரிட்டன் பிரதமர் தெரசா மே, பிரெக்ஸிட், brexit
முன்னாள் பிரிட்டன் பிரதமர் தெரசா மே

இவரைத் தொடர்ந்து அதிகாரத்தை ஆவலுடன் எதிர்நோக்கியிருந்த தீவிர பிரெக்ஸிட் ஆதரவாளரான போரிஸ் ஜான்சன் பிரிட்டன் பிரதமரானார். ஐரோப்பிய ஒன்றியத்துடன் அக்டோபர் 17ஆம் தேதி புதிதாக ஒரு பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை எட்டினார்.

அப்போது, "நம் நாட்டிற்கான மிகச் சிறந்த ஒப்பந்தம் இதுவாகும். ஐரோப்பிய ஒன்றிய நண்பர்களுக்கும் இது பிடிக்கும் என நான் நம்புகிறேன்" என மகிழ்ச்சியோடு அவர் கூறினார்.

ஆனால், கூட்டணிக் கட்சியான டொமாக்ரெடிக் யூனியனிஸ்ட் பார்ட்டி (Democratic Unionist Party) உள்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் போரிஸின் ஒப்பந்தத்தை எதிர்த்தனர். அது இப்போது தேர்தலில் வந்து நிற்கிறது.

வரும் டிசம்பர் 12ஆம் தேதி பிரிட்டனில் தேர்தல் நடைபெறவுள்ளது. பொதுவாக கோடைக்காலங்களிலேயே பிரிட்டனில் தேர்தல் நடைபெறும். ஆனால் இந்தமுறை குளிர்காலத்தில் நடைபெறுகிறது.1923 ஆண்டிற்குப் பிறகு குளிர்காலத்தில் தேர்தல் நடப்பது இதுவே முதன் முறையாகும்.

பிரெக்ஸிட்டை இந்தியர் எவ்வாறு பார்க்க வேண்டும் ? பிரிட்டன் அரசு கொள்கைகளை எவ்வாறு இது பாதிக்கும்?

2018 ஜூலை மாதம், இந்தியா வந்திருந்த முன்னாள் பிரிட்டன் பிரதமர் தெரசா மே இதுகுறித்து நமக்கொரு கண்ணோட்டம் அளித்திருந்தார்.

"ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு பிரிட்டன் வெளியேற்றமும், இந்தியாவின் வளர்ச்சியும் ஒரே நேரத்தில் நடைபெறுவதால் அந்த வாயப்பை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்" என்று தெரசா மே கூறிருந்தார்.

இந்திய மாணவர்களுக்கான விசா கெடுபிடிகளை பிரிட்டன் குறைத்துக்கொள்ள வாய்ப்புள்ளது. இந்தக் கெடுபிடிகளால் 2010-11 ஆண்டில் 39,090 என்ற அளவில் இருந்த பிரிட்டனுக்குப் படிக்கச்சென்ற இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 2016-17ல் 16,550 ஆக குறைந்தது.

இந்தியாவிடம் சுமூகமாகச் செயல்படக்கூடியவர்கள் கன்சர்வேட்டவ் கட்சியினர். கேமரூன் தான் பிரதமராக இருந்தபோது இந்தியாவிற்கு மூன்று முறை ( 2010 ஜூலை, 2013 பிப்ரவரி, 2013 நவம்பர்) பயணம் மேறகொண்டார். இதுதவிர, பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து வில்பில்டன் மைதானத்தில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளிகளைச் சந்தித்துப் பேசியுள்ளார்.

"...பிரதமர் மோடியும், நானும் கட்டித்தழுவியபோது, பரந்த கைகளோடு பிரிட்டன் உலகையே அரவணைக்க ஆர்வத்துடன் காத்திருக்கிறது என நான் நம்பினேன்" என்று டேவிட் கேமரூன் கூறினார்.

பிரதமர் மோடியுடன், முன்னாள் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், பிரெக்ஸிட், brexit
பிரதமர் மோடியுடன், முன்னாள் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன்

அதே சமயத்தில், நசிர் அகமது பிரபு (பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து பிரிட்டனுக்குச் சென்றவர்) போன்றவர்களை வைத்திருக்கும் லேபர்ஸ் கட்சி தலைவர்கள் வாக்கு வங்கிகளை நிரப்புவதற்காக இந்தியாவை எதிர்த்து அவ்வப்போது முழக்கமிட்டு வருகின்றனர்.

பிரிட்டனில் உள்ள 10.1 லட்சம் பாகிஸ்தான் வம்சாவளியினரில் பெரும்பாலானோர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பிராந்தியத்தைச் சேர்ந்தவர்கள் என தி கார்டியன் ஊடகம் தெரிவிக்கிறது. அவர்கள் வெளி உலகோடு கலக்காமல் மிகமிக நெருக்கமாக உள்ளனர். இதனைப் பயன்படுத்திக் கொண்டு லேபர்ஸ் கட்சியினர் அவர்களுக்குச் சாதமாகப் பேசி வாக்கு வங்கிகளை நிரப்பிக்கொள்கின்றனர்.

உதாரணமாக, கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி ஜெரிமி கார்பின் தலைமையிலான லேபர்ஸ் கட்சி 370 சட்டப்பிரிவு நீக்கத்தை எதிர்த்து அவசர தீர்மானத்தை நிறைவேற்றியது. இதனை 100-க்கும் மேற்பட்ட பிரிட்டன்-இந்திய நிறுவனங்கள் சாடின. வாக்குவங்கிகளை நிரப்பவே அவர்கள் இவ்வாறு செயல்பட்டனர் என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது.

பிரிட்டனில் 10.5 லட்சம் இந்திய வம்சாவளியினர் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் பாகிஸ்தானியர்களை விட படிப்பிலும், ஆங்கில புலமையிலும் வல்லவர்களாவர். ஆனால் அவர்கள் நாடு முழுவதும் சிதறிக் கிடக்கின்றனர். பாகிஸ்தான் வம்சாவளியினரை
ஈர்க்கும் செயலில் ஈடுபடும் லேபர்ஸ் கட்சிக்கு இந்தியர்கள் பாடம்புகட்ட வேண்டும்.

சரி இப்போது தேர்லுக்கு வருவோம். கிட்டத்தட்ட எல்லா கருத்துக் கணிப்புகளுமே கன்சர்வேட்டிவ் கட்சியே ஆட்சியமைக்கும் என தெரிவிக்கின்றன. பிரெக்ஸிட், சுகாதாரம் (தேசிய சுகாதார திட்டம்) ஆகியவை தேர்தலின் முக்கியப் பிரச்னைகளாகும்.

ஆனால், சில நேரங்களில் கருத்துக் கணிப்புகள் தவறாக செல்வதுமுண்டு. 2015ஆம் ஆண்டு பிரதமர் டேவிட் கேமரூன் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி தோற்றுவிடும் என பரவலாக கருதப்பட்டது.

எதுவாக இருந்தாலும் சரி, இத்தேர்தலில் அனைத்து கட்சிகளும் முனைப்போடு போட்டியிடவுள்ளது. இது பிரிட்டனின் தலையெழுத்தினை தீர்மானிக்கக் கூடிய தேர்தலாக இருக்கும்.

தங்கள் பலவீனத்தைப் பெருமையுடன் வெளிக்காட்டி தம்மை தாமே கேலிசெய்து கொள்வதில் கைத்தேர்ந்தவர்கள் இங்கிலாந்துவாசிகள்!

அவர்களுக்கு அரசியல்வாதிகள் என்றாலே சுத்தமாகப் பிடிக்காது. தயிருடன் மீன் சாப்பிடுவது எப்படி அருவெறுக்கப் படுகிறதோ அதுபோலத்தான் அரசியல்வாதிகளை அந்நாட்டு மக்கள் அருவெறுக்கிறார்கள். என்ன செய்வது, பிரிட்டன் அளிக்கும் சம்பளம் நிறுவனங்களுடன் போட்டிப்போடத் துப்பில்லாத, தற்பெருமை பேசுவதற்கே அரசியல்வாதிகளுக்கு உதவுகிறது' என்கிறார் ஆங்கில எழுத்தாளரும், அரசியல் விமர்சகருமான அர்டியன் கில்.

பத்து ஆண்டுகளுக்குள் நாட்டை நான்காவது முறையாக பொதுத்தேர்தலுக்கு அழைத்துச்சென்றுள்ள இன்றைய அரசியல்வாதிகளின் மதிப்பு அந்நாட்டு மக்கள் மனதில் எந்த கதியில் உள்ளதோ!

2016 ஜூன் 23ஆம் தேதி பிரிக்ஸிட் வாக்கெடுப்பில், எதிர்பார்ப்புகளுக்கு மாறான முடிவுகள் வெளியானதால் ( ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் வெளியேற வேண்டுமென மக்கள் வாக்களித்தனர்) முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் பதவி வலிகினார்.

சமீபத்தில் வெளியான அவரது புத்தகத்தில்(For the Record) , 'பிரெக்ஸிட் வாக்கெடுப்பின் முடிவென்பது, ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் வெளியேறக் கூடாது என பாடுபட்டவர்களுக்கு தோல்வியையே தேடித்தந்தது. அது கடைசியில் நாட்டை பிளவுபடுத்தி, அரசை முடமாக்கி, ஒப்பந்தமில்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் வெளியேறக் கூடிய சூழலை உருவாக்கியுள்ளது. இதுதான் என் வாழ்க்கையில் நடந்த மிகவும் வருத்தத்திற்குரிய விஷயமாகும்' எனக் கூறியுள்ளார்.

பிரெக்ஸிட், brexit
பிரெக்ஸிட்

டேவிட் கேமரூனைத் தொடர்ந்து பிரிட்டன் மக்களின் பேராதரவை வென்றிடலாம், இதன் மூலம் பிரிக்ஸிட் பேச்சுவார்த்தையில் பிரிட்டனின் கை ஓங்கியிருக்கும் என நம்பி 2017ஆம் ஆண்டு தேர்தல் களம் கண்டார் கன்சர்வேட்டிவ் கட்சியின் தெரசா மே.

ஆனால் கடும் அதிருப்தியிலிருந்த மக்களோ, கன்சர்வேட்டிவ் கட்சியிடமிருந்து மேலும் 13 தொகுதிகளை ( டேவிட் கேமரூன் வசம் 330 தொகுதிகள் இருந்தன) பறித்துக்கொண்டனர். இதனால், பிரதமர் தேரசா மே நிலையற்ற சிறுபான்மை அரசாங்கத்தை உருவாக்க வேண்டியதாயிற்று.

பிரெக்ஸிட் பிரிட்டனில் ஆழமான அரசியல் பிளவுகளை ஏற்படுத்தியது. ஐரோப்பிய ஒன்றியம் பிரிட்டன் நாட்டை ஆக்கிரமித்திருப்பதாக பிரெஸ்கிட் ஆதரவாளர்கள் கூறுகின்றனர், அதனை மீட்டெடுக்க வேண்டுமென அவர்கள் துடிக்கின்றனர். ஆனால், பிரிட்டனின் ஸ்காட்லேண்ட், வடக்கு அயர்லாந்து பிராந்திய மக்கள் பிரிக்ஸிட்டை அறவே எதிர்க்கின்றனர்.

முன்னாள் பிரதமர் தெரசா மேவின் பிரிக்ஸிட் ஒப்பந்தத்தைப் பிரிட்டன் நாடாளுமன்றம் மூன்று முறை நிராகரித்தது. அதனால் வேறுவழியின்றி கடந்த ஜூன் மாதம் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

முன்னாள் பிரிட்டன் பிரதமர் தெரசா மே, பிரெக்ஸிட், brexit
முன்னாள் பிரிட்டன் பிரதமர் தெரசா மே

இவரைத் தொடர்ந்து அதிகாரத்தை ஆவலுடன் எதிர்நோக்கியிருந்த தீவிர பிரெக்ஸிட் ஆதரவாளரான போரிஸ் ஜான்சன் பிரிட்டன் பிரதமரானார். ஐரோப்பிய ஒன்றியத்துடன் அக்டோபர் 17ஆம் தேதி புதிதாக ஒரு பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை எட்டினார்.

அப்போது, "நம் நாட்டிற்கான மிகச் சிறந்த ஒப்பந்தம் இதுவாகும். ஐரோப்பிய ஒன்றிய நண்பர்களுக்கும் இது பிடிக்கும் என நான் நம்புகிறேன்" என மகிழ்ச்சியோடு அவர் கூறினார்.

ஆனால், கூட்டணிக் கட்சியான டொமாக்ரெடிக் யூனியனிஸ்ட் பார்ட்டி (Democratic Unionist Party) உள்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் போரிஸின் ஒப்பந்தத்தை எதிர்த்தனர். அது இப்போது தேர்தலில் வந்து நிற்கிறது.

வரும் டிசம்பர் 12ஆம் தேதி பிரிட்டனில் தேர்தல் நடைபெறவுள்ளது. பொதுவாக கோடைக்காலங்களிலேயே பிரிட்டனில் தேர்தல் நடைபெறும். ஆனால் இந்தமுறை குளிர்காலத்தில் நடைபெறுகிறது.1923 ஆண்டிற்குப் பிறகு குளிர்காலத்தில் தேர்தல் நடப்பது இதுவே முதன் முறையாகும்.

பிரெக்ஸிட்டை இந்தியர் எவ்வாறு பார்க்க வேண்டும் ? பிரிட்டன் அரசு கொள்கைகளை எவ்வாறு இது பாதிக்கும்?

2018 ஜூலை மாதம், இந்தியா வந்திருந்த முன்னாள் பிரிட்டன் பிரதமர் தெரசா மே இதுகுறித்து நமக்கொரு கண்ணோட்டம் அளித்திருந்தார்.

"ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு பிரிட்டன் வெளியேற்றமும், இந்தியாவின் வளர்ச்சியும் ஒரே நேரத்தில் நடைபெறுவதால் அந்த வாயப்பை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்" என்று தெரசா மே கூறிருந்தார்.

இந்திய மாணவர்களுக்கான விசா கெடுபிடிகளை பிரிட்டன் குறைத்துக்கொள்ள வாய்ப்புள்ளது. இந்தக் கெடுபிடிகளால் 2010-11 ஆண்டில் 39,090 என்ற அளவில் இருந்த பிரிட்டனுக்குப் படிக்கச்சென்ற இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 2016-17ல் 16,550 ஆக குறைந்தது.

இந்தியாவிடம் சுமூகமாகச் செயல்படக்கூடியவர்கள் கன்சர்வேட்டவ் கட்சியினர். கேமரூன் தான் பிரதமராக இருந்தபோது இந்தியாவிற்கு மூன்று முறை ( 2010 ஜூலை, 2013 பிப்ரவரி, 2013 நவம்பர்) பயணம் மேறகொண்டார். இதுதவிர, பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து வில்பில்டன் மைதானத்தில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளிகளைச் சந்தித்துப் பேசியுள்ளார்.

"...பிரதமர் மோடியும், நானும் கட்டித்தழுவியபோது, பரந்த கைகளோடு பிரிட்டன் உலகையே அரவணைக்க ஆர்வத்துடன் காத்திருக்கிறது என நான் நம்பினேன்" என்று டேவிட் கேமரூன் கூறினார்.

பிரதமர் மோடியுடன், முன்னாள் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், பிரெக்ஸிட், brexit
பிரதமர் மோடியுடன், முன்னாள் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன்

அதே சமயத்தில், நசிர் அகமது பிரபு (பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து பிரிட்டனுக்குச் சென்றவர்) போன்றவர்களை வைத்திருக்கும் லேபர்ஸ் கட்சி தலைவர்கள் வாக்கு வங்கிகளை நிரப்புவதற்காக இந்தியாவை எதிர்த்து அவ்வப்போது முழக்கமிட்டு வருகின்றனர்.

பிரிட்டனில் உள்ள 10.1 லட்சம் பாகிஸ்தான் வம்சாவளியினரில் பெரும்பாலானோர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பிராந்தியத்தைச் சேர்ந்தவர்கள் என தி கார்டியன் ஊடகம் தெரிவிக்கிறது. அவர்கள் வெளி உலகோடு கலக்காமல் மிகமிக நெருக்கமாக உள்ளனர். இதனைப் பயன்படுத்திக் கொண்டு லேபர்ஸ் கட்சியினர் அவர்களுக்குச் சாதமாகப் பேசி வாக்கு வங்கிகளை நிரப்பிக்கொள்கின்றனர்.

உதாரணமாக, கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி ஜெரிமி கார்பின் தலைமையிலான லேபர்ஸ் கட்சி 370 சட்டப்பிரிவு நீக்கத்தை எதிர்த்து அவசர தீர்மானத்தை நிறைவேற்றியது. இதனை 100-க்கும் மேற்பட்ட பிரிட்டன்-இந்திய நிறுவனங்கள் சாடின. வாக்குவங்கிகளை நிரப்பவே அவர்கள் இவ்வாறு செயல்பட்டனர் என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது.

பிரிட்டனில் 10.5 லட்சம் இந்திய வம்சாவளியினர் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் பாகிஸ்தானியர்களை விட படிப்பிலும், ஆங்கில புலமையிலும் வல்லவர்களாவர். ஆனால் அவர்கள் நாடு முழுவதும் சிதறிக் கிடக்கின்றனர். பாகிஸ்தான் வம்சாவளியினரை
ஈர்க்கும் செயலில் ஈடுபடும் லேபர்ஸ் கட்சிக்கு இந்தியர்கள் பாடம்புகட்ட வேண்டும்.

சரி இப்போது தேர்லுக்கு வருவோம். கிட்டத்தட்ட எல்லா கருத்துக் கணிப்புகளுமே கன்சர்வேட்டிவ் கட்சியே ஆட்சியமைக்கும் என தெரிவிக்கின்றன. பிரெக்ஸிட், சுகாதாரம் (தேசிய சுகாதார திட்டம்) ஆகியவை தேர்தலின் முக்கியப் பிரச்னைகளாகும்.

ஆனால், சில நேரங்களில் கருத்துக் கணிப்புகள் தவறாக செல்வதுமுண்டு. 2015ஆம் ஆண்டு பிரதமர் டேவிட் கேமரூன் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி தோற்றுவிடும் என பரவலாக கருதப்பட்டது.

எதுவாக இருந்தாலும் சரி, இத்தேர்தலில் அனைத்து கட்சிகளும் முனைப்போடு போட்டியிடவுள்ளது. இது பிரிட்டனின் தலையெழுத்தினை தீர்மானிக்கக் கூடிய தேர்தலாக இருக்கும்.

Intro:Body:

Brexit ball back in citizens court as UK heads for polls, yet again!-08.11.19                                                                                                   



(814 words)



பிரிட்டன் தேர்தலில் இங்கிலாந்து தலைவர்களாக குடிமக்கள்



 நீதிமன்றத்தில் மீண்டும் பிரெக்சிட் பந்து..



எழுதியவர் தூதர் விஷ்ணு பிரகாஷ் *



 



ஆங்கிலேயர்கள் சிறப்பாகச் செய்யும் ஒரு விஷயம்சுயமரியாதை நகைச்சுவை!  பிரிட்டிஷ் எழுத்தாளரும் விமர்சகருமான அட்ரியன் கில் எழுதினார், – பிரிட்டிஷ் ,வெறுமனே அரசியல்வாதிகளை வெறுக்கிறது. அனைத்து அரசியல்வாதிகளையும். ஆட்டுக்குட்டியுடன் புதினா சாஸ் போன்று  அரசியல்வாதிகள் மீது  வெறுப்பு இருக்கிறது … .. பிரிட்டிஷ்மக்கள்  தங்கள் அரசியல்வாதிகளுக்கு மந்தமானசுய முக்கியத்துவம் வாய்ந்த ட்ரோன்களை ஈர்க்கும் அளவுக்கு பணம் செலுத்துகிறார்கள்ஆனால் வணிகத்துடனோ அல்லது நிதிகளுடனோ போட்டியிட அது  போதுமானதாக இல்லை ”. அரசியல்வாதிகளின் தற்போதைய பயிர்களுக்கு  மத்தியிலான  ஜாக்கிங்பத்து ஆண்டுகளில் தேசத்தின் மீது நான்காவது பொதுத் தேர்தலை கட்டாயப்படுத்தியதுஅவர்களின் பணியை  மிகச் சிறப்பாக செய்திருக்க மாட்டார்கள் என்பதை உணர்த்துகிறது



         முன்னாள் கன்சர்வேடிவ் பிரதமர் தெரேசா மே, 2016 (ஜூன் 23) பிரெக்ஸிட் வாக்கெடுப்பின் மோசமான விளைவை அடுத்துராஜினாமா செய்ய முடிவு செய்த டேவிட் கேமரூனிடமிருந்து குறைந்த  பெரும்பான்மையை (650 பேர் கொண்ட சபையில்  330எம்.பி.க்கள்) பெற்றார். தனது சமீபத்திய புத்தகமான  - "ஃபார் தி ரெக்கார்ட் "- பிரதமர் கேமரூன்தனது - "மிகப் பெரிய வருத்தம்" என்னவென்றால்ஐரோப்பிய ஒன்றியத்தில் தங்க வேண்டும் என்று வாதிட்டவர்கள் வாக்குகளை இழந்தனர் - இது இறுதியில் நாட்டை பிளவுபடுத்திஅரசாங்கத்தை முடக்கியது மட்டுமல்லாமல்  எந்த ஒப்பந்தமும் இல்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து  பிரிட்டன்  வெளியேறும் அபாயத்தை  பெருக்கியுள்ளது .



 



      பிரெக்சிட் பேச்சுவார்த்தைகளில் தனது கையை வலுப்படுத்தும் வாக்காளர்களிடமிருந்து ஒரு பெரிய முடிவை  பெற முடியும் என்று நம்பிய தெரசா மேஜூன் 2017 இல் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாகவே   தேர்தலை  நடத்த  முடிவு செய்தார், .இதனால்  எரிச்சலடைந்த வாக்காளர்கள்  இந்த  நிலையற்ற சிறுபான்மை அரசாங்கத்தை தரையிறக்க13 இடங்களை பறித்தார்கள் .



          பிரெக்சிட் பிரச்சினை நாடு முழுவதும் ஆழ்ந்த அரசியல் பிளவுகளை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் பிரிட்டிஷ் இறையாண்மையை ஆக்கிரமித்துள்ளது,அதை மீட்டெடுக்க வேண்டும் என்று    ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறு’ பிரிவு நம்புகிறது. இருப்பினும்ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகியவை பிரெக்ஸிட்டை கடுமையாக எதிர்க்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கான பிரதமர் மேவின் முன்மொழிவு பாராளுமன்றத்தால் மூன்று முறை நிராகரிக்கப்பட்டது,அதனால்  இந்த ஆண்டு ஜூன் மாதம் அவர் பதவியில் இருந்து விலகுவதைத் தவிர வேறு வழியில்லை.



           இது நீண்டகால ஆர்வலரான போரிஸ் ஜான்சனை ஜூலை 24 அன்று அதிகாரத்திற்கு கொண்டுவந்தது. பிரஸ்ஸல்ஸை தளமாகக் கொண்ட பத்திரிகையாளராக தனது  முந்தைய அவதாரத்தில்பிரிட்டனை ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற்றுவதற்காக அவர் தீவிரமாக பிரச்சாரம் செய்தார். 17 அக்டோபர் 2019 அன்றுஅவர் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை மேற்கொண்டார், “இது நம் நாட்டுக்கு ஒரு பெரிய விஷயம். ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள எங்கள் நண்பர்களுக்கு இது ஒரு நல்ல ஒப்பந்தம் என்றும் நான் நம்புகிறேன் ”. என்றார் .இருந்தாலும் அவரது  அரசாங்கத்தை மிதக்க வைக்கும் ஜனநாயக யூனியனிஸ்ட் கட்சி (டி.யு.பி) உட்பட அனைத்து முக்கிய எதிர்க்கட்சிகளும் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்தனபோராட்டத்தை குடிமக்களின் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல விரும்பின. டிசம்பர் 12 ஆம் தேதி குளிர்காலத்தில் வாக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பாரம்பரியமாக அவை கோடை மாதங்களில்தான் நடத்தப்படுகின்றன. கடைசி குளிர்கால தேர்தல்கள் 1923 இல் நடந்தன.



 



    பிரெக்ஸிட்டை இந்தியா எவ்வாறு பார்க்க வேண்டும்இது பிரிட்டனின் கொள்கைகளை எந்த வகையில் பாதிக்கும்?என்று  ஜூலை 2018 இல் பிரதமர் மே தனது இந்திய பயணத்தின் போது ஒரு முன்னோக்கை வழங்கினார் - "நாங்கள் ஒரு ஆற்றல் மிக்க  கூட்டாட்சியை உருவாக்குவதால் எதிர்காலத்தைப் பார்க்க விரும்புகிறேன். இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறும்போதுஇந்தியா உயரும்,அப்போது  நாம் முன்னால் உள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்." ஒரு தாழ  தொங்கும் பழம் இந்திய மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு விசா கட்டுப்பாடுகளை தளர்த்தும் . நுழைவு மற்றும் வேலைவாய்ப்பு தடைகள் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையில் 50% ஐ குறைத்தது , 2010-11ல் 39,090 ஆக இருந்தது, 2016-17ல் 16,550 ஆக குறைந்தது.



      சமநிலையில்கன்சர்வேடிவ்கள் இந்தியாவை நோக்கி சிறப்பாக செயல்படுகிறார்கள். பிரதமர் கேமரூன் தனது முதல் பதவிக்காலத்தில் (ஜூலை 2010, பிப்ரவரி 2013 மற்றும் நவம்பர்2013) மூன்று முறை இந்தியாவுக்கு விஜயம் செய்தார். நவம்பர் 2015 இல் வெம்ப்லி ஸ்டேடியத்தில் (லண்டன்) நடந்த இந்திய புலம்பெயர்ந்தோர் கூட்டத்தில் உரையாற்ற அவர் பிரதமர் மோடியுடன் சென்றிருந்தார்மேலும் எழுதுகிறார் - "மோடியை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு, 60,000 பேர் கொண்ட கூட்டத்தினரிடம்ஒரு பிரிட்டிஷ் இந்தியர்ஒரு நாள் பிரதமராக டவுனிங் ஸ்ட்ரீட்10 ஆம் இலக்கத்திற்குள் நுழைவார் என  நான் நினைத்தேன் என்று கூறிய அவரின்  கர்ஜனை நம்பமுடியாதது." மோடியும் நானும் மேடையில் கட்டிப்பிடித்தபோதுஇந்த சிறிய சைகை பிரிட்டன் உலகை அணுகிய திறந்த-  ஆயுத ஆர்வத்தின் சமிக்ஞையாக இருக்கும் என்று நம்பினேன். "என்றார் .



 



          மறுபுறம்தொழிற்கட்சித் தலைவர்கள்நஜிர் அகமது பிரபுவைப் போன்றவர்களுடன் - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு-காஷ்மீரில் (POK) இருந்து தோன்றியவர்கள் - தங்கள் அணிகளில்,இந்தியாவை திட்டி  வாக்களிக்கும் வாக்கு வங்கி அரசியலைப் பின்பற்றுவதில்  பழக்கமாக உள்ளனர். 1.1 மில்லியன் பிரிட்டிஷ் பாகிஸ்தானியர்களில்ஒரு மில்லியன் பேர்POK (தி கார்டியன்) நாட்டைச் சேர்ந்தவர்கள். அரைகுறை  கல்வியறிவு மற்றும் ஆங்கில திறமை இல்லாதவர்கள் பெரும்பாலும் கைவினை  வேலைகளை மேற்கொள்கின்றனர். அவர்கள் பிரதான நீரோட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பது கடினமாக இருப்பதைக் கண்டறிந்துஅவர்களில் பெரும்பாலோர்  குழப்ப நிலையில்  திரிகிறார்கள். இது பல தொகுதிகளில் தேர்தல் முடிவுகளை பாதிக்க உதவுகிறது மற்றும் அவர்களின் எம்.பி. யை  ஏலம் மூலம் உறுதி செய்கிறது.



  சமீபத்திய உதாரணத்தை மேற்கோள் காட்டஜெர்மி கோர்பின் தலைமையிலான தொழிற்கட்சி செப்டம்பர் 25 அன்று காஷ்மீரில் அப்பட்டமான  ஒரு பக்கச்சார்பற்ற மற்றும் தீமூட்டும்  அவசரகால தீர்மானத்தை நிறைவேற்றியதுஇது 100 க்கும் மேற்பட்ட பிரிட்டிஷ்-இந்திய அமைப்புகளால் அவதூறாகப் பேசப்பட்டது மற்றும் வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர், "இந்த நிகழ்வில் அறிவிக்கப்படாத மற்றும் ஆதாரமற்ற நிலைப்பாடுகளுக்கு நாங்கள் வருந்துகிறோம். இது வாக்களிக்கும் வங்கி நலன்களைத் திசைதிருப்பும் ஒரு முயற்சி என்பது தெளிவாகத் தெரிகிறது. இது தொழிற்கட்சி மாநாட்டின் ஜனநாயக செயல்முறையின் ஒரு பகுதி "என்று கோர்பின் தனது நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார்ஆனால் அதை இவ்வாறு  ஒப்புக் கொண்டார் ,- "அதற்குள் பயன்படுத்தப்படும் சில மொழிகள் இந்தியாவிற்கும் இந்திய புலம்பெயர்ந்தோருக்கும் விரோதமானவை என்று தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம்."



 



இந்திய புலம்பெயர்ந்தோர் உயரமானவர்கள்  (1.5 மீ)மிகச் சிறந்த படித்தவர்கள் மற்றும் வசதியானவர்கள்ஆனால் அதற்கு ஈடான  அரசியல் செல்வாக்கு இல்லாதவர்கள் . முரண்பாடாகஅதனால்   வெற்றிகரமாக ஒன்றிணைக்கப்பட்டுநாடு முழுவதும் பரவலாக சிதறியிருக்கிறார்கள் . இருப்பினும்அவர்கள் காபி வாசனையை தங்கள் சொந்த நலன்களைப் பாதுகாக்க கற்றுக்கொள்ள வேண்டிய நேரம் இது. பாக்கிஸ்தானிய புலம்பெயர்ந்தோரின் விருப்பத்திற்கு இணங்குவது   செலவில்லாமல் இருக்கும் என்று தொழிற்கட்சிக்கு ஒரு தெளிவான செய்தியை அனுப்ப வேண்டியது அவசியம்.



 



மீண்டும் வரவிருக்கும் தேர்தல்களுக்கு  வருவோம் பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் கன்சர்வேடிவ் கட்சிக்கு  ஒரு நல்ல கணிப்பை  காட்டுகின்றன. ப்ரெக்சிட் மற்றும் உடல்நலம் (தேசிய சுகாதார திட்டம்) ஆகியவை முக்கிய பிரச்சினைகள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வாறாயினும்பொதுமக்களின் ஆதரவு நிலையில்லாதது  மற்றும் கருத்துக் கணிப்புகள் ஒன்றுக்கு மேற்பட்ட முறை தவறாக போயுள்ளன  . 2015 ஆம் ஆண்டில் பிரதமர் கேமரூன் தலைமையிலான கன்சர்வேடிவ்கள் தோல்வியுறுவார்கள்  என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. புத்திசாலித்தனமான வாக்காளர்கள் அவர்களுக்கு  குறைவான  பெரும்பான்மையை வழங்கியதன்  மூலம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினர். எப்படியிருந்தாலும்ஒரு விஷயம் நிச்சயம்தேர்தல்கள் தீவிரமாக போட்டியிடும்,கடுமையான மற்றும் பிரிட்டிஷ் விதியை ஒரு குறிப்பிடத்தக்க பாணியில் வரவிருக்கும் பல ஆண்டுகளுக்கு  வடிவமைக்கும்.





 thanks&regards



P.Rajamani


Conclusion:
Last Updated : Nov 9, 2019, 3:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.