ETV Bharat / international

Noble Price 2019: இயற்பியலுக்கான நோபல் பரிசு பெறும் மூவர்!

author img

By

Published : Oct 8, 2019, 9:17 PM IST

ஸ்டாக்ஹோம்: 2019ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசின் ஒரு பகுதி ஜோம்ஸ் பெபில்சுக்கும், மறுபாதி மஷெல் மேயர், டிடியர் குலோஸ் ஆகியோருக்கும் பகிர்ந்து அளிக்கப்படுகிறது.

noble prize 2019

Noble Price 2019:மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், உலக அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் மைல் கல் சாதனைப் படைப்போருக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. ஸ்வீடன் ஆராய்ச்சியாளர் ஆல்ஃபிரட் நோபலின் நினைவாக அளிக்கப்படும் இந்த பரிசானது, உலகின் மிகவும் மதிக்கத்தக்கப் பரிசாகக் கருதப்படுகிறது.

2019 இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்ற விஞ்ஞானிகள், Noble Price 2019, இயற்பியலுக்கான நோபல்
2019 இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்ற விஞ்ஞானிகள்

அந்த வகையில், 2019ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு வழங்கும் விழா, ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நடைபெற்றுவருகிறது. மருத்துவத்திற்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு புகழ்பெற்ற 'ராயல் ஸ்வீடிஷ் அகாடெமி ஆஃப் சைன்ஸ்' ( Royal Swedish Academy of Science) கல்வி நிறுவனத்தில் அறிவிக்கப்பட்டது.

இதில், இயற்பு அண்டவியல் (Physical Comology) கோட்பாடு சார்ந்த கண்டுபிடிப்புகளுக்காக ஜோம்ஸ் பெபில்சுக்கு நோபல் பரிசின் ஒரு பாதியும், சூரிய குடும்பத்தைப் போன்று வேறு ஒரு சூரிய குடும்பத்தில் உள்ள வேற்று கிரகத்தை (Exoplanet) கண்டுபிடித்ததற்காக மிஷெல் மேயர், டிடியர் குலோஸ் ஆகியோருக்கு மற்றொரு பாதியும் பிரித்து வழங்கப்பட்டுள்ளது.

இயற்பு அண்டவியில் என்பது பிரபஞ்சத்தின் தோற்றம், அளவு, பரிமாணம், முடிவு உள்ளிட்டவை குறித்தான அறிவியல் துறையாகும்.

இதையும் படிங்க:

2019 Nobel Prize :மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்றவர்களின் பின்புலம் என்ன?

Noble Price 2019:மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், உலக அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் மைல் கல் சாதனைப் படைப்போருக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. ஸ்வீடன் ஆராய்ச்சியாளர் ஆல்ஃபிரட் நோபலின் நினைவாக அளிக்கப்படும் இந்த பரிசானது, உலகின் மிகவும் மதிக்கத்தக்கப் பரிசாகக் கருதப்படுகிறது.

2019 இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்ற விஞ்ஞானிகள், Noble Price 2019, இயற்பியலுக்கான நோபல்
2019 இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்ற விஞ்ஞானிகள்

அந்த வகையில், 2019ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு வழங்கும் விழா, ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நடைபெற்றுவருகிறது. மருத்துவத்திற்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு புகழ்பெற்ற 'ராயல் ஸ்வீடிஷ் அகாடெமி ஆஃப் சைன்ஸ்' ( Royal Swedish Academy of Science) கல்வி நிறுவனத்தில் அறிவிக்கப்பட்டது.

இதில், இயற்பு அண்டவியல் (Physical Comology) கோட்பாடு சார்ந்த கண்டுபிடிப்புகளுக்காக ஜோம்ஸ் பெபில்சுக்கு நோபல் பரிசின் ஒரு பாதியும், சூரிய குடும்பத்தைப் போன்று வேறு ஒரு சூரிய குடும்பத்தில் உள்ள வேற்று கிரகத்தை (Exoplanet) கண்டுபிடித்ததற்காக மிஷெல் மேயர், டிடியர் குலோஸ் ஆகியோருக்கு மற்றொரு பாதியும் பிரித்து வழங்கப்பட்டுள்ளது.

இயற்பு அண்டவியில் என்பது பிரபஞ்சத்தின் தோற்றம், அளவு, பரிமாணம், முடிவு உள்ளிட்டவை குறித்தான அறிவியல் துறையாகும்.

இதையும் படிங்க:

2019 Nobel Prize :மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்றவர்களின் பின்புலம் என்ன?

Intro:Body:

Nobel prize for physics announced


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.