ETV Bharat / international

பிலிப்பைன்ஸ் மோலேவ் சூறாவளி : நிலச்சரிவில் சிக்கி 15 பேர் பலி!`

author img

By

Published : Oct 29, 2020, 3:00 PM IST

மணிலா : மோலேவ் சூறாவளியால் வியட்நாமில் ஏற்பட்ட நிலச்சரிவில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

lideslide
lide

பிலிப்பைன்ஸ் நாட்டை புரட்டிப்போட்ட மோலேவ் சூறாவளியின் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் ஒரே இரவில் வெளியேற்றப்பட்டனர். சுமார் 125 முதல் 150 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதால், ஏராளாமான மரங்கள், மின் கம்பங்கள் கீழே விழுந்தன. இவற்றை சீரமைக்கும் பணியில் பிலிப்பைன்ஸ் நாட்டு அரசு அலுவலர்கள் தற்போது ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், சூறாவளியால் வியட்நாமில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 15 பேர் உயிரிழந்துவிட்டதாக அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகியுள்ளது. இதுமட்டுமின்றி, 30க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் சிக்கில் கொண்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

மேலும், 'குவாங் நாம்’ மாகாணத்தில் உள்ள டிரா வான் கிராமத்தில் வீடுகள் இடிந்து விழுந்ததில் இதுவரை எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். பலர் பாதுகாப்பான இடங்களுக்கு அங்கிருந்து மீட்கப்பட்டு மாற்றப்பட்டுள்ளனர். நடுக்கடலில் காணாமல்போன மீனவர்களைத் தேடும் பணியும் கடலோர காவல் படையினரால் நடைபெற்று வருகிறது.

கடந்த 20 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் பிலிப்பைன்ஸை தாக்கிய மிக மோசமான சூறாவளி இது தான் என வியட்நாம் அலுவலர்கள் கூறுகின்றனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டை புரட்டிப்போட்ட மோலேவ் சூறாவளியின் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் ஒரே இரவில் வெளியேற்றப்பட்டனர். சுமார் 125 முதல் 150 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதால், ஏராளாமான மரங்கள், மின் கம்பங்கள் கீழே விழுந்தன. இவற்றை சீரமைக்கும் பணியில் பிலிப்பைன்ஸ் நாட்டு அரசு அலுவலர்கள் தற்போது ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், சூறாவளியால் வியட்நாமில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 15 பேர் உயிரிழந்துவிட்டதாக அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகியுள்ளது. இதுமட்டுமின்றி, 30க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் சிக்கில் கொண்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

மேலும், 'குவாங் நாம்’ மாகாணத்தில் உள்ள டிரா வான் கிராமத்தில் வீடுகள் இடிந்து விழுந்ததில் இதுவரை எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். பலர் பாதுகாப்பான இடங்களுக்கு அங்கிருந்து மீட்கப்பட்டு மாற்றப்பட்டுள்ளனர். நடுக்கடலில் காணாமல்போன மீனவர்களைத் தேடும் பணியும் கடலோர காவல் படையினரால் நடைபெற்று வருகிறது.

கடந்த 20 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் பிலிப்பைன்ஸை தாக்கிய மிக மோசமான சூறாவளி இது தான் என வியட்நாம் அலுவலர்கள் கூறுகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.