ETV Bharat / international

துருக்கி நிலநடுக்கம் : 12 பேர் பலி

author img

By

Published : Oct 31, 2020, 12:18 AM IST

அங்காரா : துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 12 பேர் உயிரிழந்தனர். 400க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

துருக்கி
துருக்கி

துருக்கி-கிரீஸ் ஆகிய நாடுகளின் எல்லையில் உள்ள ஏஜியான் கடல் பகுதியில் 10.3 மைல் ஆழத்தை மையமாகக் கொண்டு இன்று (அக்.30) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 7.0ஆக பதிவாகியுள்ள இந்தச் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் காரணமாக, துருக்கியில் உள்ள இஸ்மிர் நகரில் 20க்கும் மேற்பட்ட அடுக்குமாடிக் கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின.

இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர். 419 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, அங்கு சுனாமி ஏற்பட்டு தெருக்களில் கடல் நீர் பெருக்கெடுத்து ஓடியது.

துருக்கியின் மூன்றாவது பெரிய நகரான இஸ்மிரில் 40-50 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் கிரீஸ் நாட்டிலும் உணரப்பட்டது. அந்நாட்டின் தலைநகர் ஏதென்ஸில் குடியிருப்புகள் ஆட்டம் கண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

துருக்கி-கிரீஸ் ஆகிய நாடுகளின் எல்லையில் உள்ள ஏஜியான் கடல் பகுதியில் 10.3 மைல் ஆழத்தை மையமாகக் கொண்டு இன்று (அக்.30) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 7.0ஆக பதிவாகியுள்ள இந்தச் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் காரணமாக, துருக்கியில் உள்ள இஸ்மிர் நகரில் 20க்கும் மேற்பட்ட அடுக்குமாடிக் கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின.

இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர். 419 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, அங்கு சுனாமி ஏற்பட்டு தெருக்களில் கடல் நீர் பெருக்கெடுத்து ஓடியது.

துருக்கியின் மூன்றாவது பெரிய நகரான இஸ்மிரில் 40-50 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் கிரீஸ் நாட்டிலும் உணரப்பட்டது. அந்நாட்டின் தலைநகர் ஏதென்ஸில் குடியிருப்புகள் ஆட்டம் கண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.