ETV Bharat / international

குறைந்து வரும் கரோனா பாதிப்பு: ஆசுவாசமடையும் சிங்கப்பூர்!

author img

By

Published : May 25, 2020, 10:47 PM IST

சிங்கப்பூரில் புதியதாக கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 344 என அந்நாட்டின் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

கரோனா
கரோனா

தென் கிழக்கு ஆசியாவில் கோவிட்-19 தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடாக சிங்கப்பூர் இருந்தது. குட்டி நாடான சிங்கப்பூரில் இந்த பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகரிக்குமோ என்று அந்நாட்டு அரசு அச்சம்கொண்டது.

இந்நிலையில், சில வாரங்களுக்குப் பின், கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சிங்கப்பூரில் குறையத் தொடங்கியது. தற்போது, சிங்கப்பூரில் 31 ஆயிரத்து 960 பேருக்கு கரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் புதியதாக கரோனா பாதித்த 344 பேரில் 340 பேர் வெளிநாட்டினர் என அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கரோனா நெருக்கடியிலிருந்து மீளும் சிங்கப்பூர், தனது பொருளாதார நடவடிக்கைகளைத் தொடங்க ஆயுத்தமாகி வருகிறது. இதுவரை சிங்கப்பூரில், 16 ஆயிரத்து 27 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 14 ஆயிரத்து 876 பேர் நோயாளிகளாக இருந்து குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர்.

இதையும் படிங்க: அண்டை நாடான நேபாளத்தில் கரோனா நிலை என்ன?

தென் கிழக்கு ஆசியாவில் கோவிட்-19 தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடாக சிங்கப்பூர் இருந்தது. குட்டி நாடான சிங்கப்பூரில் இந்த பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகரிக்குமோ என்று அந்நாட்டு அரசு அச்சம்கொண்டது.

இந்நிலையில், சில வாரங்களுக்குப் பின், கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சிங்கப்பூரில் குறையத் தொடங்கியது. தற்போது, சிங்கப்பூரில் 31 ஆயிரத்து 960 பேருக்கு கரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் புதியதாக கரோனா பாதித்த 344 பேரில் 340 பேர் வெளிநாட்டினர் என அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கரோனா நெருக்கடியிலிருந்து மீளும் சிங்கப்பூர், தனது பொருளாதார நடவடிக்கைகளைத் தொடங்க ஆயுத்தமாகி வருகிறது. இதுவரை சிங்கப்பூரில், 16 ஆயிரத்து 27 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 14 ஆயிரத்து 876 பேர் நோயாளிகளாக இருந்து குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர்.

இதையும் படிங்க: அண்டை நாடான நேபாளத்தில் கரோனா நிலை என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.