ETV Bharat / international

நேபாளத்தில் தேர்வு ரத்து - மாணவர்கள் போராட்டம்!

காத்மாண்டு: நேபாளத்தில் தேர்வு வினாத்தாள் கசிந்ததையடுத்து தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

author img

By

Published : Mar 30, 2019, 12:04 PM IST

தேர்வு ரத்துசெய்யப்பட்டதையடுத்து மாணவர்கள் போராட்டம்

நேபாளத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) சமூக அறிவியல் தேர்வு நடைபெற்றது. இந்நிலையில், தேர்வு வினாத்தாள் கசிந்ததையடுத்து தேர்வை ரத்து செய்வதாக தேர்வு நடத்தும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேபாளத்தின் மாகாணம் 2-ல் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாநில உள்விவகாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் கயேதேந்திரா யாதவ், "இந்த விவகாரம் தொடர்பாக நடைபெற்ற முதற்கட்ட விசாரணையில் தேர்வு அறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. மாகாணம் 2-ல் வினாத்தாள் கசிவு நடைபெறவில்லை. எட்டு மாவட்ட பாதுகாப்பு அதிகாரிகளிடம் இது தொடர்பாக விசாரணை நடைபெற்றுள்ளது. மாகாணம் 2-ல் தான் வினாத்தாள் கசிவு நடைபெற்றதாக நம்ப வைக்கப்படுகிறது" என்றார்.

இதற்கிடையே, அந்நாட்டு மத்திய அரசும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணையை தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நேபாளத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) சமூக அறிவியல் தேர்வு நடைபெற்றது. இந்நிலையில், தேர்வு வினாத்தாள் கசிந்ததையடுத்து தேர்வை ரத்து செய்வதாக தேர்வு நடத்தும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேபாளத்தின் மாகாணம் 2-ல் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாநில உள்விவகாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் கயேதேந்திரா யாதவ், "இந்த விவகாரம் தொடர்பாக நடைபெற்ற முதற்கட்ட விசாரணையில் தேர்வு அறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. மாகாணம் 2-ல் வினாத்தாள் கசிவு நடைபெறவில்லை. எட்டு மாவட்ட பாதுகாப்பு அதிகாரிகளிடம் இது தொடர்பாக விசாரணை நடைபெற்றுள்ளது. மாகாணம் 2-ல் தான் வினாத்தாள் கசிவு நடைபெற்றதாக நம்ப வைக்கப்படுகிறது" என்றார்.

இதற்கிடையே, அந்நாட்டு மத்திய அரசும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணையை தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.