உலக நாடுகளை மிரட்டும் கரோனாவைக் கட்டுப்படுத்த முடியாமல் பல முன்னணி நாடுகளே திணறிவருகின்றன. வைரஸ் தடுப்பூசி மருந்து கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். நூற்றுக்கணக்கான மருந்துகள் பரிசோதனை கட்டத்தில் உள்ளன.
இதுவரை உலகளவில் இரண்டு கோடியே 91 லட்சத்து 88 ஆயிரத்து 438 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒன்பது லட்சத்து 28 ஆயிரத்து 325 ஆக அதிகரித்துள்ளது. வைரஸிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு கோடியே 10 லட்சத்து 31 ஆயிரத்து 679 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரேநாளில் மட்டும் இரண்டு லட்சத்து 41 ஆயிரத்து 810 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்றாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கரோனா அதிகம் பாதித்த நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.