ETV Bharat / international

கரோனா வைரஸ் கர்ப்பிணியிடமிருந்து குழந்தைக்கு பரவாது: ஆய்வில் தகவல்!

author img

By

Published : Mar 16, 2020, 5:41 PM IST

பெய்ஜிங்: கரோனா வைரஸ் தொற்று கர்ப்பிணித் தாய்மார்களிடமிருந்து புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு பிறக்கும்போதே பரவாது என இன்று (மார்ச் 16) வெளியான ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. அதாவது கர்ப்பக் காலத்தில் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட தாய்மார்கள் வழியாக அவர்களின் குழந்தைகளுக்கு வைரஸ் பரவாது என்று இந்த ஆய்வு உறுதிப்படுத்துகிறது.

coronavirus transmission update  coronavirus transmission from pregnant moms to babies  coronavirus transmission in babies  recent study on coronavirus  coronavirus transmitted in humans  coronavirus research  கரோனா வைரஸ் கர்ப்பிணியிடமிருந்து குழந்தைக்கு பரவாது: ஆய்வில் தகவல்  கரோனா வைரஸ் ஆய்வு  கரோனா வைரஸ், சீன ஆய்வு, வூகான் மாகாணம், வூகான் மருத்துவமனை
Coronavirus may not transmit from pregnant moms to babies: Study

சீனாவின் ஹுவாஷோங் அறிவியல், தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், உயிர்கொல்லி வைரஸான கோவிட்-19 பரவல் குறித்து ஆராய்ச்சி நடத்தினர். இந்த ஆய்வில் கரோனா வைரஸ் தொற்று கர்ப்பிணித் தாய்மார்களிடமிருந்து குழந்தைகளுக்கு பரவாது என்று தெரியவந்துள்ளது.

சீனாவின் வூகான் யூனியனில் உள்ள மருத்துவமனையில் கோவிட்-19 தொற்று காரணமாக, நான்கு கர்ப்பிணி பெண்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அந்தப் பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் பிறந்த குழந்தைகளுக்கு வைரஸ் தொற்று இல்லை என்பது கண்டறியப்பட்டது.

எனினும் அக்குழந்தைகளும் தனிமைப்படுத்தப்பட்டு முன்னெச்சரிக்கை மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நான்கு கர்ப்பிணி பெண்களில் ஒருவர் மட்டும் சோதனைக்கு மறுப்பு தெரிவித்துவிட்டார். இதுபற்றி ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கையில், “குழந்தைகளுக்கு கோவிட்-19 தொற்று இல்லை.

எனினும், ஒரு குழந்தைக்கு சொறி அறிகுறி தென்பட்டது. இரு குழந்தைகளுக்கு சிறிய அளவிலான சுவாசப் பிரச்னைகள் இருந்தது. தற்போது நான்கு குழந்தைகளும் நலமாக உள்ளனர். அக்குழந்தைகளின் தாய்மார்களும் நலமாக இருக்கின்றனர். அவர்கள் கோவிட்-19 (கரோனா) வைரஸ் தொற்று பாதிப்பிலிருந்து முழுமையாக குணமடைந்துவிட்டனர்” என்றார்.

மருத்துவர்கள் தரப்பில் கூறுகையில், “கோவிட்-19 தொற்று தாய்மார்களிடமிருந்து குழந்தைகளுக்கு பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை. ஒரு கர்ப்பிணிக்கு சாதாரண முறையில் பிரசவம் நடந்தது. இது சரியான முறை என்று கருதுகிறேன்.

எனினும் இதுகுறித்து மேலதிக ஆய்வு தேவை. முந்தைய காலத்திலும் கரோனா தாய்வழியிடமிருந்து பரவும் அறிகுறிகள் தென்படவில்லை. இருப்பினும் சார்ஸ் மற்றும் மெர்ஸ் உள்ளிட்ட வைரஸ் தொற்றுகள் பிறப்பு பாதிப்பை ஏற்படுத்தியது.

தன்னிச்சையான கருக்கலைப்பு அல்லது தாய்வழி மரணம் ஆகியவற்றை ஏற்படுத்தியது. சீனாவின் வூகான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா (கோவிட்-19) வைரஸ் தொற்றுக்கு, உலகில் இதுவரை ஆறு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கரோனா தொற்று பாதிப்பு 110 ஆக உள்ளது. இருவர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க: அப்போ இது 'சானிடைசர்' இல்லையா - பாகிஸ்தான் நபரின் காணொலி வைரல்

சீனாவின் ஹுவாஷோங் அறிவியல், தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், உயிர்கொல்லி வைரஸான கோவிட்-19 பரவல் குறித்து ஆராய்ச்சி நடத்தினர். இந்த ஆய்வில் கரோனா வைரஸ் தொற்று கர்ப்பிணித் தாய்மார்களிடமிருந்து குழந்தைகளுக்கு பரவாது என்று தெரியவந்துள்ளது.

சீனாவின் வூகான் யூனியனில் உள்ள மருத்துவமனையில் கோவிட்-19 தொற்று காரணமாக, நான்கு கர்ப்பிணி பெண்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அந்தப் பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் பிறந்த குழந்தைகளுக்கு வைரஸ் தொற்று இல்லை என்பது கண்டறியப்பட்டது.

எனினும் அக்குழந்தைகளும் தனிமைப்படுத்தப்பட்டு முன்னெச்சரிக்கை மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நான்கு கர்ப்பிணி பெண்களில் ஒருவர் மட்டும் சோதனைக்கு மறுப்பு தெரிவித்துவிட்டார். இதுபற்றி ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கையில், “குழந்தைகளுக்கு கோவிட்-19 தொற்று இல்லை.

எனினும், ஒரு குழந்தைக்கு சொறி அறிகுறி தென்பட்டது. இரு குழந்தைகளுக்கு சிறிய அளவிலான சுவாசப் பிரச்னைகள் இருந்தது. தற்போது நான்கு குழந்தைகளும் நலமாக உள்ளனர். அக்குழந்தைகளின் தாய்மார்களும் நலமாக இருக்கின்றனர். அவர்கள் கோவிட்-19 (கரோனா) வைரஸ் தொற்று பாதிப்பிலிருந்து முழுமையாக குணமடைந்துவிட்டனர்” என்றார்.

மருத்துவர்கள் தரப்பில் கூறுகையில், “கோவிட்-19 தொற்று தாய்மார்களிடமிருந்து குழந்தைகளுக்கு பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை. ஒரு கர்ப்பிணிக்கு சாதாரண முறையில் பிரசவம் நடந்தது. இது சரியான முறை என்று கருதுகிறேன்.

எனினும் இதுகுறித்து மேலதிக ஆய்வு தேவை. முந்தைய காலத்திலும் கரோனா தாய்வழியிடமிருந்து பரவும் அறிகுறிகள் தென்படவில்லை. இருப்பினும் சார்ஸ் மற்றும் மெர்ஸ் உள்ளிட்ட வைரஸ் தொற்றுகள் பிறப்பு பாதிப்பை ஏற்படுத்தியது.

தன்னிச்சையான கருக்கலைப்பு அல்லது தாய்வழி மரணம் ஆகியவற்றை ஏற்படுத்தியது. சீனாவின் வூகான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா (கோவிட்-19) வைரஸ் தொற்றுக்கு, உலகில் இதுவரை ஆறு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கரோனா தொற்று பாதிப்பு 110 ஆக உள்ளது. இருவர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க: அப்போ இது 'சானிடைசர்' இல்லையா - பாகிஸ்தான் நபரின் காணொலி வைரல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.