ETV Bharat / international

பிரான்ஸ் அதிபர் தேர்தல்: ரஷ்ய உளவாளிகள் செய்த சதிவேலை அம்பலம்

author img

By

Published : Oct 20, 2020, 10:33 PM IST

வாஷிங்டன்: பிரான்ஸ் அதிபர் தேர்தல் முடிவுகளை மாற்ற ரஷ்ய உளவாளிகள் சதி வேலையில் ஈடுபட்டதாக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Russian military officers
Russian military officers

உலகில் தொழில்நுட்ப வளர்ச்சியால் பல நன்மைகள் ஏற்பட்ட போதிலும் சில தீமைகளும் ஏற்படத்தான் செய்கிறது. குறிப்பாக, 2016ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க தேர்தலில், ரஷ்ய உளவாளிகள் தலையிட்டதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பிரான்ஸ் நாட்டின் அதிபர் தேர்தலில் ரஷ்ய உளவாளிகள் சதி வேலையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அது மட்டுமின்றி, தென்கொரியாவில் நடைபெற்ற மழைக்கால ஒலிம்பிக்ஸ், அமெரிக்க வர்த்தகம் உள்ளிட்டவற்றை குறிவைத்து ரஷ்ய உளவாளிகள் சைபர் தாக்குதலில் ஈடுபட்டதாக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட 6 பேரும், ரஷ்ய உளவு அமைப்பான ஜிஆர்யுவில் பணி புரிந்தவர்கள் ஆவர். ரஷ்யாவின் புவிசார் அரசியல் நலனை கருதியும், எதிரி நாடுகளின் நிலைத் தன்மையை குறைக்கவும் சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த சைபர் தாக்குதல் காரணமாக கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பென்சில்வேனியாவில் சுகாதார சேவை, உக்ரைன் நாட்டில் மின் சேவை பாதிக்கப்பட்டதற்கும் இந்த சைபர் தாக்குதல்களே காரணம் என கூறப்படுகிறது. நவம்பர் 3ஆம் தேதி நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலுக்கும் இந்த குற்றச்சாட்டுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என அமெரிக்க நீதிமன்றத்தின் துணைத் தலைமை வழக்கறிஞர் டேமர்ஸ் கூறியுள்ளார்.

தென்கொரியாவில் நடைபெற்ற மழைக்கால ஒலிம்பிக்ஸ் போட்டியில் போதை பொருள் பயன்படுத்திய ரஷ்ய வீரர்களுக்கு எதிராக சர்வதேச ஒலிம்பிக் அமைப்பு கடும் தண்டனை விதித்தது. இதற்குப் பழிவாங்கும் நோக்கில், அந்த ஒலிம்பிக் போட்டியைை குறிவைத்து சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஜோ பிடன் வென்றால் சீனா கை ஓங்கும், அது இந்தியாவுக்கு ஆபத்து' - ட்ரம்ப் ஜூனியர்

உலகில் தொழில்நுட்ப வளர்ச்சியால் பல நன்மைகள் ஏற்பட்ட போதிலும் சில தீமைகளும் ஏற்படத்தான் செய்கிறது. குறிப்பாக, 2016ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க தேர்தலில், ரஷ்ய உளவாளிகள் தலையிட்டதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பிரான்ஸ் நாட்டின் அதிபர் தேர்தலில் ரஷ்ய உளவாளிகள் சதி வேலையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அது மட்டுமின்றி, தென்கொரியாவில் நடைபெற்ற மழைக்கால ஒலிம்பிக்ஸ், அமெரிக்க வர்த்தகம் உள்ளிட்டவற்றை குறிவைத்து ரஷ்ய உளவாளிகள் சைபர் தாக்குதலில் ஈடுபட்டதாக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட 6 பேரும், ரஷ்ய உளவு அமைப்பான ஜிஆர்யுவில் பணி புரிந்தவர்கள் ஆவர். ரஷ்யாவின் புவிசார் அரசியல் நலனை கருதியும், எதிரி நாடுகளின் நிலைத் தன்மையை குறைக்கவும் சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த சைபர் தாக்குதல் காரணமாக கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பென்சில்வேனியாவில் சுகாதார சேவை, உக்ரைன் நாட்டில் மின் சேவை பாதிக்கப்பட்டதற்கும் இந்த சைபர் தாக்குதல்களே காரணம் என கூறப்படுகிறது. நவம்பர் 3ஆம் தேதி நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலுக்கும் இந்த குற்றச்சாட்டுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என அமெரிக்க நீதிமன்றத்தின் துணைத் தலைமை வழக்கறிஞர் டேமர்ஸ் கூறியுள்ளார்.

தென்கொரியாவில் நடைபெற்ற மழைக்கால ஒலிம்பிக்ஸ் போட்டியில் போதை பொருள் பயன்படுத்திய ரஷ்ய வீரர்களுக்கு எதிராக சர்வதேச ஒலிம்பிக் அமைப்பு கடும் தண்டனை விதித்தது. இதற்குப் பழிவாங்கும் நோக்கில், அந்த ஒலிம்பிக் போட்டியைை குறிவைத்து சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஜோ பிடன் வென்றால் சீனா கை ஓங்கும், அது இந்தியாவுக்கு ஆபத்து' - ட்ரம்ப் ஜூனியர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.