ETV Bharat / international

தீவிர ஊட்டசத்து குறைபாடு காரணமாக ஒரு கோடி குழந்தைகள் பாதிக்கப்படலாம் : ஐநா அதிர்ச்சித் தகவல்

author img

By

Published : Dec 31, 2020, 12:48 PM IST

தீவிர ஊட்டசத்து குறைபாடு காரணமாக உலகம் முழுவதும் ஒரு கோடி குழந்தைகள் பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.

Unicef
Unicef

கோவிட்-19 தாக்கம், அதன் காரணமாக பின்தங்கிய நாடுகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடி ஆகியவை தொடர்பான முக்கிய அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபையின் அங்கமான யுனிசெப் அமைப்பு (United Nations Children's Fund) வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, போர், மோதல், இயற்கைப் பேரிடர், பருவநிலை மாற்றம் என பல சிக்கல்களை சந்தித்துவரும் நாடுகளில், கோவிட்-19 பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் இந்நாடுகளில் வறுமை அதிகரித்து, சிறார்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து முறையே கிடைக்காமல் போகும் சூழல் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ஐந்து வயதுக்குள்பட்ட குழந்தைகள் உரிய வளர்ச்சி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இச்சூழலில் காங்கோ, நைஜீரியா, சூடான், ஏமன் உள்ளிட்ட பின்தங்கிய நாடுகளில் சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடை எதிர்கொள்ள நேரிடும் எனத் தெரிவித்துள்ளார்.

இதைத்தடுக்க சர்வதேச சமூகம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இதற்காக சுமார் ஏழாயிரத்து 500 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க சர்வதேச நாடுகள் முன்வர வேண்டும் எனவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சீனாவின் கோவிட் நிலவரம் குறித்து செய்தி வெளியிட்ட செய்தியாளருக்கு 4 ஆண்டு சிறை!

கோவிட்-19 தாக்கம், அதன் காரணமாக பின்தங்கிய நாடுகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடி ஆகியவை தொடர்பான முக்கிய அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபையின் அங்கமான யுனிசெப் அமைப்பு (United Nations Children's Fund) வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, போர், மோதல், இயற்கைப் பேரிடர், பருவநிலை மாற்றம் என பல சிக்கல்களை சந்தித்துவரும் நாடுகளில், கோவிட்-19 பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் இந்நாடுகளில் வறுமை அதிகரித்து, சிறார்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து முறையே கிடைக்காமல் போகும் சூழல் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ஐந்து வயதுக்குள்பட்ட குழந்தைகள் உரிய வளர்ச்சி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இச்சூழலில் காங்கோ, நைஜீரியா, சூடான், ஏமன் உள்ளிட்ட பின்தங்கிய நாடுகளில் சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடை எதிர்கொள்ள நேரிடும் எனத் தெரிவித்துள்ளார்.

இதைத்தடுக்க சர்வதேச சமூகம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இதற்காக சுமார் ஏழாயிரத்து 500 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க சர்வதேச நாடுகள் முன்வர வேண்டும் எனவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சீனாவின் கோவிட் நிலவரம் குறித்து செய்தி வெளியிட்ட செய்தியாளருக்கு 4 ஆண்டு சிறை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.