கரோனா வைரஸ் நோயின் தாக்கம், உலக நாடுகளைத் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. இருப்பினும், பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதன் மூலம் நியூசிலாந்தில் கடந்த மூன்று வார காலமாக கரோனா பாதிப்பு இல்லாமல் இருந்தது. இந்நிலையில், நோய்வாய்ப்பட்ட பெற்றோர்களைப் பார்க்க லண்டனிலிருந்து நியூசிலாந்துக்குச் சென்ற இரு பெண்களுக்குக் கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, தனிமைப்படுத்துவதிலிருந்து இரு பெண்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவர்கள் ஆக்லாந்திலிருந்து வெல்லிங்டனுக்கு கார் மூலம் சென்றனர்.
இதுகுறித்து நியூசிலாந்து சுகாதாரத்துறையின் இயக்குநர் ஆஷ்லி புளும்பில்டு கூறுகையில், "அந்தக் கார் பயணத்தின்போது, அவர்கள் பொதுமக்கள் யாரையும் சந்திக்கவில்லை" என்றார்.
இதனிடையே, அந்தப் பெண்களிடம் தொடர்பில் இருந்த அனைவரையும்; அந்நாட்டு அரசு மருத்துவப் பரிசோனைக்கு உட்படுத்தியுள்ளது. நியூசிலாந்தில் இதுவரை 1,500 பேர் கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க : சீனத் தலைநகரில் தலைதூக்கும் கரோனா!