ETV Bharat / international

கருத்துக்கணிப்பில் முன்னிலை வகிக்கும் பிடன்!

author img

By

Published : Oct 5, 2020, 1:38 AM IST

வாஷிங்டன்: அமெரிக்கா அதிபர் தேர்தலை முன்னிட்டு வெளியிடப்பட்ட புதிய கருத்துக் கணிப்பில், ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் பிடன் முன்னிலை வகிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிபர் வேட்பாளர் பிட
அதிபர் வேட்பாளர் பிட

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3ஆம் தேதி நடைபெறவுள்ளதை அடுத்து தேர்தல் களத்தின் முக்கிய நிகழ்வான பொது விவாதம் கடந்த (செப்.29)ஆம் தேதி நடைபெற்றது.

இதில் குடியரசுக் கட்சி சார்பில் வேட்பாளராக களமிறங்கும் தற்போதைய அதிபரான டொனால்ட் ட்ரம்ப் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடனுடன் காரசாமான விவாதத்தை மேற்கொண்டார்.

இந்த விவாதத்தில் கோவிட்-19, வரி விவகாரம், சட்டம் ஒழுங்கு, உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட தலைப்புகளில் இருவரும் விவாதித்தனர். விவாதம் முடித்து அதன் கருத்துக்கணிப்புகள் அனைத்திலும் பிடனே வெற்றிபெற்றார் என முடிவுகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை, சின்னா கல்லூரி இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் மிக முக்கிய இரண்டு மாகாணங்களில் வெற்றிபெறுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

ஃபுளோரிடா மாகாணத்தில், முன்னாள் துணை அதிபரான பிடனுக்கு 47 விழுக்காடு மக்களின் ஆதரவு உள்ளது. ட்ரம்புக்கு 42 விழுக்காடு மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பெனிசில்வேனியா மாகாணத்தில், பிடனுக்கு 49 விழுக்காடு மக்களின் ஆதரவும் ட்ரம்புக்கு 42 விழுக்காடு மக்களின் ஆதரவும் உள்ளது.

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் இந்த இரு மாகாணங்களிலும் போட்டி கடுமையாக இருந்தது, இருப்பினும் இறுதியில் ட்ரம்பே வெற்றி பெற்றார்.

இதையும் படிங்க: நாட்டை வலுப்படுத்த கரோனாவிலிருந்து விரைந்து மீள்வேன் - ட்ரம்ப் நம்பிக்கை

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3ஆம் தேதி நடைபெறவுள்ளதை அடுத்து தேர்தல் களத்தின் முக்கிய நிகழ்வான பொது விவாதம் கடந்த (செப்.29)ஆம் தேதி நடைபெற்றது.

இதில் குடியரசுக் கட்சி சார்பில் வேட்பாளராக களமிறங்கும் தற்போதைய அதிபரான டொனால்ட் ட்ரம்ப் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடனுடன் காரசாமான விவாதத்தை மேற்கொண்டார்.

இந்த விவாதத்தில் கோவிட்-19, வரி விவகாரம், சட்டம் ஒழுங்கு, உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட தலைப்புகளில் இருவரும் விவாதித்தனர். விவாதம் முடித்து அதன் கருத்துக்கணிப்புகள் அனைத்திலும் பிடனே வெற்றிபெற்றார் என முடிவுகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை, சின்னா கல்லூரி இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் மிக முக்கிய இரண்டு மாகாணங்களில் வெற்றிபெறுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

ஃபுளோரிடா மாகாணத்தில், முன்னாள் துணை அதிபரான பிடனுக்கு 47 விழுக்காடு மக்களின் ஆதரவு உள்ளது. ட்ரம்புக்கு 42 விழுக்காடு மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பெனிசில்வேனியா மாகாணத்தில், பிடனுக்கு 49 விழுக்காடு மக்களின் ஆதரவும் ட்ரம்புக்கு 42 விழுக்காடு மக்களின் ஆதரவும் உள்ளது.

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் இந்த இரு மாகாணங்களிலும் போட்டி கடுமையாக இருந்தது, இருப்பினும் இறுதியில் ட்ரம்பே வெற்றி பெற்றார்.

இதையும் படிங்க: நாட்டை வலுப்படுத்த கரோனாவிலிருந்து விரைந்து மீள்வேன் - ட்ரம்ப் நம்பிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.