ETV Bharat / elections

'பூஜ்ஜியத்திற்கு உள்ளே ராஜ்ஜியம் நடத்துபவர் மு.க.ஸ்டாலின்" - பொன்.ராதா விமர்சனம்

கன்னியாகுமரி: 'பூஜ்ஜியத்திற்கு உள்ளே  ஒரு ராஜ்ஜியம்' என வாழ்ந்து வரும் ஸ்டாலினுக்கு பாஜக சதம் அடித்திருப்பது தெரியாது' என பொன்.ராதாகிருஷ்ணன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

author img

By

Published : Apr 9, 2019, 9:04 PM IST

'பூஜ்ஜியத்திற்கு உள்ளே ராஜ்ஜியம் நடத்துபவர் மு.க.ஸ்டாலின்" - பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சனம்

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பரப்புரையில் ஈடுபட்டு வரும் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், "ஆட்சியை மீண்டும் பிடிக்கும் கட்சி எவ்வளவு பொறுப்போடு ஒரு தேர்தல் அறிக்கையை கொடுக்க முடியுமோ, அந்த வகையில் சிறப்பான தேர்தல் அறிக்கையை பாஜக கொடுத்துள்ளதுள்ளது.

விவசாயிகள், தொழில் முனைவோர் என அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் தேர்தல் அறிக்கை உள்ளதாகக் கூறிய அவர், எட்டு வழிச்சாலை விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு சிந்தித்து முடிவெடுக்கும் என்றார்.

பா.ஜ.க தேர்தல் அறிக்கையை ஸ்டாலின் பூஜ்ஜியம் என கூறியதன் அர்த்தம் தனக்கு புரியவில்லை எனக் கூறிய அவர், ஸ்டாலின் பூஜ்ஜியத்திற்கு உள்ளே ஒரு ராஜ்ஜியம் நடத்தி வாழ்ந்து வருவதாகவும், வெளியே வந்து பார்த்தால்தான் பா.ஜ.க சதம் அடித்திருப்பது தெரியும் என தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பரப்புரையில் ஈடுபட்டு வரும் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், "ஆட்சியை மீண்டும் பிடிக்கும் கட்சி எவ்வளவு பொறுப்போடு ஒரு தேர்தல் அறிக்கையை கொடுக்க முடியுமோ, அந்த வகையில் சிறப்பான தேர்தல் அறிக்கையை பாஜக கொடுத்துள்ளதுள்ளது.

விவசாயிகள், தொழில் முனைவோர் என அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் தேர்தல் அறிக்கை உள்ளதாகக் கூறிய அவர், எட்டு வழிச்சாலை விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு சிந்தித்து முடிவெடுக்கும் என்றார்.

பா.ஜ.க தேர்தல் அறிக்கையை ஸ்டாலின் பூஜ்ஜியம் என கூறியதன் அர்த்தம் தனக்கு புரியவில்லை எனக் கூறிய அவர், ஸ்டாலின் பூஜ்ஜியத்திற்கு உள்ளே ஒரு ராஜ்ஜியம் நடத்தி வாழ்ந்து வருவதாகவும், வெளியே வந்து பார்த்தால்தான் பா.ஜ.க சதம் அடித்திருப்பது தெரியும் என தெரிவித்தார்.

கன்னியாகுமரி: மு க ஸ்டாலின் 'பூஜ்ஜியத்திற்கு உள்ளே  ஒருராஜ்ஜியம்' என வாழ்ந்து வருகிறார்வெளியே வந்து பார்த்தால்பா.., சதம்அடித்திருப்பது அவருக்குத் தெரியும்என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலை அடுத்த பறக்கை பகுதியில் பா.ஜ., வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன்  பிரசாரம் மேற்கொண்டார். அப்போது  அவர் செய்தியளர்களுக்கு அளித்த பேட்டி:

 "ஆட்சியை மீண்டும் பிடிக்கும் கட்சி எவ்வளவு பொறுப்போடு ஒரு தேர்தல் அறிக்கையை கொடுக்க முடியுமோஅந்தவகையில் சிறப்பான தேர்தல் அறிக்கையை பா.., கொடுத்துள்ளது.

விவசாயிகள்தொழில் முனைவோர் என, அனைத்து தரப்பு மக்களும் பயன்பெரும் வகையில் இது உள்ளது.  எட்டு வழிச்சாலை விவகாரம் தொடர்பாக, தமிழகஅரசு சிந்தித்து முடிவெடுக்கும்.

தமிழக அரசானதுதமிழக மக்கள், விவசாயிகள் மீதும் மிகுந்த அக்கறை கொண்டு செயல்பட்டு வருகிறது.  அப்படி இருக்கும்போதுநிச்சயமாக அப்பகுதி மக்களுக்கும், விவசாயிகளுக்கு எதுநன்மையோ அதை நிச்சயமாக செய்யும். பா.., தேர்தல் அறிக்கையை ஸ்டாலின் பூஜ்ஜியம் என கூறியதன் அர்த்தம் எனக்கு புரியவில்லை.

ஸ்டாலின் பூஜ்ஜியத்திற்கு உள்ளே  ஒருராஜ்ஜியம்  என வாழ்ந்து வருகிறார்.  வெளியே வந்து பார்த்தால்பா.., சதம் அடித்திருப்பது, அவருக்குத் தெரியும்.  நான்குநேரி தொகுதியில் கொடுத்தவாக்குறுதிகளை நிறைவேற்றாமல்வசந்தகுமார் குமரிக்கு  வருகிறார்.

அப்படியானால்அங்கும் வாய்க்கரிசி, இங்கும் வாய்க்கரிசிஇந்த நிலைஇருக்கக் கூடாதுகுமரி மாவட்டத்தில்ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டது வசந்தகுமாருக்கு பின்னடைவைஏற்படுத்தி உள்ளது.

 வாயில் வடை சுடுவதையும், அடைசுடுவதையும் வைத்துதேர்தலை சந்திக்கமுடியுமாதி.மு.க., குமரி மாவட்டத்துக்கு என்ன செய்துள்ளது. “நெல்லை எங்கள் எல்லை, குமரி எங்கள் தொல்லை” என்று கூறி, மாவட்ட மக்களை அவமானப்படுத்தியது தி.மு.க., இதில் இருந்து இன்றும் மாறவில்லை. ஸ்டாலின்இலவு காத்த கிளியாக இருக்கிறார் .

மத்தியிலும் ஆட்சி மாற்றம்வரப் போவதில்லைதமிழகத்திலும் வாய்ப்பே இல்லைஸ்டாலின் முதல்வராகவருவதற்கு வாய்ப்புள்ளதா எனகேட்கிறீர்கள்.  ஓட்டப்பம் வீட்டைச் சுடும், தன்வினை தன்னைச்சுடும்.

 இவ்வாறு அவர் கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.