ETV Bharat / elections

அமமுக வேட்பாளர்கள் மீது தொடரும் பாலியல் புகார்கள்!

தேனி: அமமுகவின் முக்கிய பிரமுகரான கதிர்காமுவைத் தொடர்ந்து தங்கதமிழ்ச்செல்வன் மீதும் பாலியல் புகார் எழுந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author img

By

Published : Apr 10, 2019, 8:25 PM IST

Updated : Apr 10, 2019, 9:27 PM IST

அமமுக வேட்பாளர்கள் மீது பாலியல் புகார்!

தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் கதிர்காமு மீது ஏப்ரல் 8ஆம் தேதி அதே தொகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். அதனடிப்படையில் தேனி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கதிர்காமு மீது கொலை மிரட்டல், கற்பழிப்பு உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது மீண்டும் ஒரு பிரளயம் எழுந்துள்ளது. அதாவது கதிர்காமு மீது அளிக்கப்பட்டுள்ள புகாரில், அமமுக கொள்கை பரப்பு செயலாளரும், தேனி மக்களவைத் தொகுதி வேட்பாளருமான தங்கதமிழ்செல்வனும் பாதிக்கப்பட்ட பெண் மீது ஆசைப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. கதிர்காமு மீது அளிக்கப்பட்ட புகாரின் முதல் தகவல் அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.

அதில் பாதிக்கப்பட்ட பெண் கடந்த 2015ஆம் ஆண்டு தனது தந்தையின் சிகிச்சைக்காக தேனி அல்லிநகரத்தில் இருக்கும் கதிர்காமுவின் மருத்துவமனையில் இருந்ததாகவும் அப்போது கதிர்காமு தனக்கு மயக்க ஊசி செலுத்தி உடலுறவு கொண்டதாகவும், அதை வீடியோவாக எடுத்து வைத்து மிரட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் சம்பந்தபட்ட புகைப்படம், வீடியோவை தரும்படி கேட்டதற்கு தேனியில் உள்ள எம்.எல்.ஏ அலுவலகத்திற்கு வந்தால் தருவதாகவும் கதிர்காமு கூறியதாகவும், ஆனால் அங்கு சென்றால் தங்கதமிழ்செல்வன் தன் விருப்பத்திற்கு ஏற்ப நடந்து கொள்ளுமாறு மிரட்டியுள்ளதாகவும் புகாரில் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

எனவே தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் கதிர்காமுவால் அச்சுறுத்தல் உள்ளதாகவும், மேலும் தன்னை கற்பழித்து அதனை புகைப்படம் வீடியோக்களாக எடுத்து வைத்துக்கொண்டு சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக கூறி வரும் கதிர்காமு மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.

அமமுகவை சேர்ந்த கதிர்காமு மீது வெளியாகியுள்ள பாலியல் புகாரில் தங்கதமிழ்செல்வன் பெயரும் இணைந்துள்ளது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் கதிர்காமு மீது ஏப்ரல் 8ஆம் தேதி அதே தொகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். அதனடிப்படையில் தேனி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கதிர்காமு மீது கொலை மிரட்டல், கற்பழிப்பு உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது மீண்டும் ஒரு பிரளயம் எழுந்துள்ளது. அதாவது கதிர்காமு மீது அளிக்கப்பட்டுள்ள புகாரில், அமமுக கொள்கை பரப்பு செயலாளரும், தேனி மக்களவைத் தொகுதி வேட்பாளருமான தங்கதமிழ்செல்வனும் பாதிக்கப்பட்ட பெண் மீது ஆசைப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. கதிர்காமு மீது அளிக்கப்பட்ட புகாரின் முதல் தகவல் அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.

அதில் பாதிக்கப்பட்ட பெண் கடந்த 2015ஆம் ஆண்டு தனது தந்தையின் சிகிச்சைக்காக தேனி அல்லிநகரத்தில் இருக்கும் கதிர்காமுவின் மருத்துவமனையில் இருந்ததாகவும் அப்போது கதிர்காமு தனக்கு மயக்க ஊசி செலுத்தி உடலுறவு கொண்டதாகவும், அதை வீடியோவாக எடுத்து வைத்து மிரட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் சம்பந்தபட்ட புகைப்படம், வீடியோவை தரும்படி கேட்டதற்கு தேனியில் உள்ள எம்.எல்.ஏ அலுவலகத்திற்கு வந்தால் தருவதாகவும் கதிர்காமு கூறியதாகவும், ஆனால் அங்கு சென்றால் தங்கதமிழ்செல்வன் தன் விருப்பத்திற்கு ஏற்ப நடந்து கொள்ளுமாறு மிரட்டியுள்ளதாகவும் புகாரில் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

எனவே தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் கதிர்காமுவால் அச்சுறுத்தல் உள்ளதாகவும், மேலும் தன்னை கற்பழித்து அதனை புகைப்படம் வீடியோக்களாக எடுத்து வைத்துக்கொண்டு சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக கூறி வரும் கதிர்காமு மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.

அமமுகவை சேர்ந்த கதிர்காமு மீது வெளியாகியுள்ள பாலியல் புகாரில் தங்கதமிழ்செல்வன் பெயரும் இணைந்துள்ளது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுப.பழனிக்குமார் - தேனி.        10.04.2019.

   "தங்கதமிழ்ச்செல்வன் உன் மீது ஆசைப்படுகிறார். அவரோடு உறவு வைத்துக்கொள். இல்லையென்றால் உன்னை கொன்றுவிடுவேன் என என்னை மிரட்டினார் டாக்டர் கதிர்காமு.!" 
     பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பெண் புகார்.

     தேனி மாவட்டம் பெரியகுளம்  சட்டமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் கதிர்காமு மீது பெரியகுளம் அருகே உள்ள சருத்துப்பட்டியை சேர்ந்த பெண் ஒருவர்   நேற்று முன்தினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம்
புகார் அளித்தார். அதனடிப்படையில் தேனி அணைத்து மகளிர் காவல்நிலையத்தில் கதிர்காமு மீது கொலை மிரட்டல், கற்பழிப்பு உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அமமுக வேட்பாளர் மீது பாலியல் ரீதியான குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது மீண்டும் ஒரு பிரளயம் எழுந்துள்ளது. அதாவது கதிர்காமு மீது அளிக்கப்பட்டுள்ள புகாரில், அமமுக கொள்கை பரப்பு செயலாளரும், தேனி பாராளுமன்ற தொகுதி வேட்பாளருமாகிய தங்கதமிழ்செல்வனும் பாதிக்கப்பட்ட பெண் மீது ஆசைப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
       கதிர்காமு  மீது அளித்துள்ள புகாரின்,  முதல் தகவல் அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. 
   அதில் பாதிக்கப்பட்ட பெண் கடந்த 2015ஆம் ஆண்டு தனது தந்தையின் சிகிச்சைக்காக தேனி அல்லிநகரத்தில் இருக்கும் கதிர்காமுவின் மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்க்கப்பட்டு, தந்தையின் உதவிக்கு தானும் மருத்துவமனையில் தங்கியிருந்தேன். அப்போது முழங்கால் வலி சம்பந்தமாக கதிர்காமுவிடம் சிகிச்சை பெற நேர்ந்தது. சிகிச்சையில் மயக்க ஊசி செலுத்தி தன்னை உடலுறவு கொண்டதாகவும், அதை வீடியோவாக எடுத்து வைத்துள்ளது தெரியவந்தது. இது சம்பந்தமாக அவரிடம் கேட்ட போது உன்னை எனக்கு பிடித்து விட்டது, உனக்கு அரசு வேலை வாங்கி தருகிறேன் என்று ஆசை வார்த்தை கூறியும், என் விருப்பத்திற்கு மாறாக நடந்து கொண்டால் உனது நிர்வான வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டி தொடர்ந்து பலமுறை என்னிடம் உடலுறவு வைத்தார். 
   அதன் பின்னர் தொடர்ந்து  அவரிடம் அனுகி என் சம்பந்தமான புகைப்படம், வீடியோவை தரும் படி கேட்டதற்கு தேனியில் உள்ள எம்.எல்.ஏ அலுவலகத்திற்கு வா, அங்கு தருகிறேன் என்றார். அதனை நம்பி கடந்த 2017 மே7ஆம் தேதி தேனியில் உள்ள எம்.எல்.ஏ அலுவலகத்திற்கு சென்றேன். அங்கு தங்கதமிழ்செல்வன் உள்பட அடையாளம் தெரிந்த பெயர் தெரியாத மூன்று நபர்கள் இருந்தனர்.  அவர்கள் சென்றபின் கதரிகாமுவிடம் புகைப்படங்களை கேட்டதற்கு, "தங்கதமிழ்செல்வன் உன் மீது ஆசைப்படுகிறார், அவர் விருப்பத்திற்கு ஏற்ப நடந்து கொள், இல்லாவிட்டால் எனக்கு இருக்கும் அரசியல் செல்வாக்கு உனக்கு தெரியும். உன்னை குடும்பத்துடன் கொழுத்தாமல் விடமாட்டேன் என்று கொலை மிரட்டல் விடுத்தார். 
   எனவை எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் அவரால் அச்சுறுத்தல் உள்ளது. மேலும் என்னை கற்பழித்து அதனை புகைப்படம் வீடியோக்களாக எடுத்து வைத்துக்கொண்டு சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக கூறி வரும் கதிர்காமு மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    அமமுகவை சேர்ந்த கதிர்காமு மீது  வெளியாகியுள்ள பாலியல் புகாரில் தங்கதமிழ்செல்வன் பெயரும் இணைந்துள்ளது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





Thanks & Regards,
Suba.Palanikumar
District Reporter - Theni.
ETV Bharat.
Mobile : +91 6309994707
Last Updated : Apr 10, 2019, 9:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.