ETV Bharat / elections

'வருமான வரித்துறையினர் தொடர்ந்த வழக்கை சட்டப்படி சந்திப்போம்'-துரைமுருகன் திட்டவட்டம்!

author img

By

Published : Apr 10, 2019, 7:50 PM IST

வேலூர்: வருமான வரித்துறையினர் தன் மகன் மீது தொடர்ந்த வழக்கை சட்டப்படி சந்தித்துக் கொள்வதாக திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்

திமுக பொருளாலர் துரைமுருகன்

திமுக பொருளாளர் துரைமுருகனின் நண்பர்கள் வீடுகளில் நடைபெற்ற சோதனையில் 11 லட்சம் 58 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த நிலையில் வேலூர் தொகுதியில் போட்டியிடும் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் மீது வருமான வரித்துறை கொடுத்த அறிக்கையின்படி வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் நடத்தும் அதிகாரியான மாவட்ட ஆட்சியர் ராமன் சார்பில் காட்பாடி காவல் நிலையத்தில் அவர் மீது புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிமன்றத்தை அணுகிய காவல் துறையினர், இன்று கதிர் ஆனந்த் மற்றும் துரைமுருகன் நெருங்கிய நண்பர் சீனிவாசன் மற்றும் தாமோதரன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தனது மகன் மீதான வழக்கை சட்டப்படி சந்திப்போம் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் செய்தியாளர்களின் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

'வருமான வரித்துறையினர் தொடர்ந்த வழக்கை சட்டப்படி சந்திப்போம்'-துரைமுருகன் திட்டவட்டம்!

திமுக பொருளாளர் துரைமுருகனின் நண்பர்கள் வீடுகளில் நடைபெற்ற சோதனையில் 11 லட்சம் 58 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த நிலையில் வேலூர் தொகுதியில் போட்டியிடும் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் மீது வருமான வரித்துறை கொடுத்த அறிக்கையின்படி வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் நடத்தும் அதிகாரியான மாவட்ட ஆட்சியர் ராமன் சார்பில் காட்பாடி காவல் நிலையத்தில் அவர் மீது புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிமன்றத்தை அணுகிய காவல் துறையினர், இன்று கதிர் ஆனந்த் மற்றும் துரைமுருகன் நெருங்கிய நண்பர் சீனிவாசன் மற்றும் தாமோதரன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தனது மகன் மீதான வழக்கை சட்டப்படி சந்திப்போம் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் செய்தியாளர்களின் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

'வருமான வரித்துறையினர் தொடர்ந்த வழக்கை சட்டப்படி சந்திப்போம்'-துரைமுருகன் திட்டவட்டம்!

என் மகன் மீதான வழக்கை சந்திப்போம்

துரைமுருகன் பேட்டி

திமுக பொருளாளர் துரைமுருகனின் வேலூர் காட்பாடி வீடு மற்றும் கல்லூரியில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தொடர்ந்து அவரது நண்பர்கள் வீடுகளிலும் நடைபெற்ற சோதனையில் ரூ.11.58 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த நிலையில் வேலூர் தொகுதியில் போட்டியிடும் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் மீது வருமான வரித்துறை கொடுத்த அறிக்கையின்படி வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியான மாவட்ட ஆட்சியர் ராமன் சார்பில் காட்பாடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து நீதிமன்றத்தை அனுகிய போலீசார் இன்று கதிர் ஆனந்த் மற்றும் துரைமுருகன் நெருங்கிய நண்பர் சீனிவாசன் மற்றும் தாமோதரன் ஆகியோர் மீது 171e 171b, 125a ஆகிய சட்டப்பிரிவுகள் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனால் ஐடி ரெய்டு விவகாரத்தில் மேலும் பரபரப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், தனது மகன் மீதான வழக்கை சந்திப்போம் என துரைமுருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து காட்பாடியில் இன்று நிருபர்கள் துரைமுருகனிடம், உங்கள் மகன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதே என கேட்டனர். அதற்கு பதில் அளித்த துரைமுருகன், என் மகன் மீதான புகாரை சந்திப்போம் என தெரிவித்தார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.