ETV Bharat / crime

1.8 கிலோ தங்கத்தை பேண்டெய்டில் மறைத்து கடத்தல்: இருவர் கைது

author img

By

Published : May 16, 2021, 10:36 PM IST

துபாயிலிருந்து 1.8 கிலோ தங்கத்தை காலில் பேண்டெய்ட் மூலம் மறைத்து கடத்த முயன்றவரையும், தங்கக்கட்டியை வாங்க வந்தவரையும் சென்னை விமான நிலையத்தில் சுங்கத் துறையினர் கைது செய்தனர்.

சென்னை விமான நிலையத்தில் தங்கக் கடத்தல், சென்னை விமான நிலையம், தங்கக் கடத்தல், chennai airport, two persons arrested for gold smuggling in chennai airport
two persons arrested for gold smuggling in chennai airport

சென்னை: துபாயிலிருந்து எமிரேட்ஸ் ஏா்லைன்ஸ் சிறப்பு விமானம் இன்று (மே.16) அதிகாலை சென்னை சா்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத் துறையினா் சோதனையிட்டனா்.

அப்போது சென்னையைச் சோ்ந்த முகமது அஸ்ரப் (21) என்ற பயணி, தன்னிடம் சுங்கவரி செலுத்தும் பொருள்கள் எதுவும் இல்லை என்று கூறினாா். அதோடு வேகமாக கிரீன் சேனல் வழியாக அவர் வெளியே சென்றாா். அவா் மீது சுங்கத் துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து வெளியே சென்ற முகமது அஸ்ரப்பை மீண்டும் உள்ளே அழைத்து வந்து, அவரது உடமைகளை சோதனையிட்டனா்.

ஆனால் எதுவுமில்லாத நிலையில், சந்தேகம் தீராமல், அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று முழுமையாக சோதித்தனா். அப்போது அவருடைய இரு கால்களிலும் பெரிய பேண்டேய்ட் துணி ஒட்டப்பட்டிருந்தது. சந்தேகத்தில் அந்த பேண்டேய்ட் துணியை பிரித்துப் பாா்த்தபோது அதன் உள்ளே தங்கத்தை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. தொடர்ந்து அவர் மறைத்துவைத்து எடுத்து வந்த 1.8 கிலோ தங்கத்தை சுங்கத் துறையினர் கைப்பற்றினா். அதன் சா்வதேச மதிப்பு 89 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் ஆகும்.

இதையடுத்து முகமது அஸ்ரபிடம் மேலும் விசாரணை நடத்தினா். அப்போது, தங்கக் கடத்தல் கும்பலைச் சோ்ந்த முகமது இப்ராகீம் (39) என்பவருக்காகதான் இந்தத் தங்கத்தை தான் கடத்தி வந்ததாகவும், அவா் தற்போது விமான நிலையத்திற்கு வெளியே நிற்பதாகவும் கூறினாா். இதையடுத்து சுங்கத் துறையினா் அவரையும் கைது செய்தனா். கைது செய்யப்பட்ட இருவரிடமும் சுங்கத் துறையினா் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீடு அதிகரிப்பு: மத்திய அமைச்சருக்கு நன்றி தெரிவித்து ஸ்டாலின் கடிதம்

சென்னை: துபாயிலிருந்து எமிரேட்ஸ் ஏா்லைன்ஸ் சிறப்பு விமானம் இன்று (மே.16) அதிகாலை சென்னை சா்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத் துறையினா் சோதனையிட்டனா்.

அப்போது சென்னையைச் சோ்ந்த முகமது அஸ்ரப் (21) என்ற பயணி, தன்னிடம் சுங்கவரி செலுத்தும் பொருள்கள் எதுவும் இல்லை என்று கூறினாா். அதோடு வேகமாக கிரீன் சேனல் வழியாக அவர் வெளியே சென்றாா். அவா் மீது சுங்கத் துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து வெளியே சென்ற முகமது அஸ்ரப்பை மீண்டும் உள்ளே அழைத்து வந்து, அவரது உடமைகளை சோதனையிட்டனா்.

ஆனால் எதுவுமில்லாத நிலையில், சந்தேகம் தீராமல், அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று முழுமையாக சோதித்தனா். அப்போது அவருடைய இரு கால்களிலும் பெரிய பேண்டேய்ட் துணி ஒட்டப்பட்டிருந்தது. சந்தேகத்தில் அந்த பேண்டேய்ட் துணியை பிரித்துப் பாா்த்தபோது அதன் உள்ளே தங்கத்தை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. தொடர்ந்து அவர் மறைத்துவைத்து எடுத்து வந்த 1.8 கிலோ தங்கத்தை சுங்கத் துறையினர் கைப்பற்றினா். அதன் சா்வதேச மதிப்பு 89 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் ஆகும்.

இதையடுத்து முகமது அஸ்ரபிடம் மேலும் விசாரணை நடத்தினா். அப்போது, தங்கக் கடத்தல் கும்பலைச் சோ்ந்த முகமது இப்ராகீம் (39) என்பவருக்காகதான் இந்தத் தங்கத்தை தான் கடத்தி வந்ததாகவும், அவா் தற்போது விமான நிலையத்திற்கு வெளியே நிற்பதாகவும் கூறினாா். இதையடுத்து சுங்கத் துறையினா் அவரையும் கைது செய்தனா். கைது செய்யப்பட்ட இருவரிடமும் சுங்கத் துறையினா் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீடு அதிகரிப்பு: மத்திய அமைச்சருக்கு நன்றி தெரிவித்து ஸ்டாலின் கடிதம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.