ETV Bharat / crime

தேனியில் தொடர் வாகன திருட்டில் ஈடுபட்ட 5 பேர் கைது!

author img

By

Published : Feb 13, 2021, 12:20 PM IST

தேனி: உத்தமபாளையத்தில் தொடர் வாகன திருட்டில் ஈடுபட்ட ஐந்து பேரை கைது செய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்து 12 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

தேனியில் தொடர் வாகன திருட்டில் ஈடுபட்ட 5 பேர் கைது!
தேனியில் தொடர் வாகன திருட்டில் ஈடுபட்ட 5 பேர் கைது!

தேனி மாவட்டம் உத்தமபாளையம், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏராளமான இருசக்கர வாகனங்கள் திருடுபோவதாக வந்த புகாரை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி உத்தரவின் பேரில் குற்றவாளிகளை பிடிப்பதற்கு தனிப்படை அமைக்கப்பட்டது.

உத்தமபாளையம் பகுதியில் தனிப்படையினரின் தீவிர ரோந்துப்பணியின்போது, இருசக்கர வாகனத்தில் வந்தகொண்டிருந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, க.புதுப்பட்டியைச் சேர்ந்த கௌதம் என்ற நபர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததால் சந்தேகம் அடைந்த காவல் துறையினர் அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் வாகன ஓட்டுநரான கௌதமிற்கு சரிவர வேலை கிடைக்காததால், உத்தமபாளையம் பகுதியில் தொடர் வாகன திருட்டில் ஈடுபட்டதும், அவருக்கு உதவியாக க.புதுப்பட்டியைச் சேர்ந்த சரவணக்குமார், காக்குவீரன், நந்தகுமார், புகழ் ஆகிய நான்கு பேரும் செயல்பட்டதும் தெரியவந்தது.

திருடப்படும் வாகனங்களை சொற்ப விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளனர் என்பது காவல் துறையினரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து 12 இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டன. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த உத்தமபாளையம் காவல் துறையினர் திருட்டில் ஈடுபட்ட ஐந்து நபர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க...விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து - பலி எண்ணிக்கை 19ஆக உயர்வு

தேனி மாவட்டம் உத்தமபாளையம், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏராளமான இருசக்கர வாகனங்கள் திருடுபோவதாக வந்த புகாரை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி உத்தரவின் பேரில் குற்றவாளிகளை பிடிப்பதற்கு தனிப்படை அமைக்கப்பட்டது.

உத்தமபாளையம் பகுதியில் தனிப்படையினரின் தீவிர ரோந்துப்பணியின்போது, இருசக்கர வாகனத்தில் வந்தகொண்டிருந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, க.புதுப்பட்டியைச் சேர்ந்த கௌதம் என்ற நபர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததால் சந்தேகம் அடைந்த காவல் துறையினர் அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் வாகன ஓட்டுநரான கௌதமிற்கு சரிவர வேலை கிடைக்காததால், உத்தமபாளையம் பகுதியில் தொடர் வாகன திருட்டில் ஈடுபட்டதும், அவருக்கு உதவியாக க.புதுப்பட்டியைச் சேர்ந்த சரவணக்குமார், காக்குவீரன், நந்தகுமார், புகழ் ஆகிய நான்கு பேரும் செயல்பட்டதும் தெரியவந்தது.

திருடப்படும் வாகனங்களை சொற்ப விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளனர் என்பது காவல் துறையினரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து 12 இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டன. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த உத்தமபாளையம் காவல் துறையினர் திருட்டில் ஈடுபட்ட ஐந்து நபர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க...விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து - பலி எண்ணிக்கை 19ஆக உயர்வு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.