ETV Bharat / city

தொப்புள் கொடி அறுக்காத நிலையில் வீசி எறியப்பட்ட பெண் சிசு! - வேலூரில் பிறந்த குழந்தையை எறிந்த பெற்றொர்

வேலூர்: தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத நிலையில் பெண் சிசு கழிவுநீர் கால்வாயில் வீசி கொல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

baby was killed in vellore
author img

By

Published : Nov 22, 2019, 3:47 PM IST

வேலூர் மாவட்டம் மேல்விஷாரத்தை அடுத்த தஞ்சாவுரான் காலனி பகுதியில் வழக்கம்போல் இன்று காலை சிலர் நடைபயிற்சி மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள கழிவுநீர் கால்வாயில் தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத நிலையில் பெண் சிசு ஒன்று சடலமாகக் கிடந்துள்ளது.

வேலூரில் கழிவுநீர் கால்வாயில் இறந்து கிடந்த குழந்தை

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், இதுகுறித்து ஆற்காடு நகர காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஆற்காடு நகர காவல் துறையினர் கால்வாயில் வீசப்பட்டு இருந்த பெண் சிசுவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குழந்தை உடல் சிறிதளவு அழுகிய நிலையில் இருப்பதால் குழந்தை வீசப்பட்டு ஓரிரு தினங்கள் ஆகி இருக்கலாம் என்று தங்களது முதல் கட்டவிசாரணையில் தெரிவித்த காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:

அசிங்கப்பட்ட அமைச்சர்கள்! ஆத்திரமடைந்த ஸ்டாலின்!

வேலூர் மாவட்டம் மேல்விஷாரத்தை அடுத்த தஞ்சாவுரான் காலனி பகுதியில் வழக்கம்போல் இன்று காலை சிலர் நடைபயிற்சி மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள கழிவுநீர் கால்வாயில் தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத நிலையில் பெண் சிசு ஒன்று சடலமாகக் கிடந்துள்ளது.

வேலூரில் கழிவுநீர் கால்வாயில் இறந்து கிடந்த குழந்தை

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், இதுகுறித்து ஆற்காடு நகர காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஆற்காடு நகர காவல் துறையினர் கால்வாயில் வீசப்பட்டு இருந்த பெண் சிசுவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குழந்தை உடல் சிறிதளவு அழுகிய நிலையில் இருப்பதால் குழந்தை வீசப்பட்டு ஓரிரு தினங்கள் ஆகி இருக்கலாம் என்று தங்களது முதல் கட்டவிசாரணையில் தெரிவித்த காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:

அசிங்கப்பட்ட அமைச்சர்கள்! ஆத்திரமடைந்த ஸ்டாலின்!

Intro:வேலூர் மாவட்டம்

ஆற்காடு அருகே பிறந்த சில மணி நேரத்திலே கழிவுநீர் கால்வாயில் வீசப்பட்ட பெண் சிசு - காவல்துறையினர் விசாரணை

Body:வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் தஞ்சாவூரான் காலனி பகுதியில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி கழிவுநீர் கால்வாய் அமைந்துள்ளது. இந்த கால்வாய் வழியாக இன்று நடைபயிற்சி மேற்கொண்டு இருந்தவர்கள் கால்வாயில் தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத நிலையில் பெண் சிசு ஒன்று சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து ஆற்காடு நகர காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஆற்காடு நகர காவல் துறையினர் கால்வாயில் வீசப்பட்டு இருந்த பெண் சிசுவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ஆய்வுக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தை உடல் சிறிதளவு அழுகிய நிலையில் இருப்பதால் குழந்தை வீசப்பட்டு ஓரிரு தினங்கள் ஆகி இருக்கலாம் என கூறப்படுகிறது.குழந்தையை வீசி சென்றது யார் என்றும் எதற்காக குழந்தை வீசி செல்லப்பட்டது என்பது குறித்து ஆற்காடு நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிறந்து தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத நிலையில் பெண் சிசு கால்வாயில் வீசி கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.