ETV Bharat / city

கிணற்றுக்குள் விழுந்த காட்டெருமைக் கன்றுகள்: உயிருடன் மீட்பு

author img

By

Published : Jun 2, 2021, 7:02 PM IST

Updated : Jun 2, 2021, 9:07 PM IST

திருச்சி: கண்ணூத்து பகுதியில் கிணற்றுக்குள் விழுந்த காட்டெருமை கன்றுகள் இரண்டாம் நாளான இன்று(ஜூன்.2) உயிருடன் மீட்கப்பட்டன.

கிணற்றுக்குள் விழுந்த காட்டெருமை கன்றுகள் மீட்பு
கிணற்றுக்குள் விழுந்த காட்டெருமை கன்றுகள் மீட்பு

திருச்சி மாவட்டம், கண்ணூத்து பகுதியில் உள்ள காட்டெருமை உள்ளிட்ட வன விலங்கள் உணவுக்காகவும் குடிநீருக்காகவும் வனப்பகுதியில் இருந்து குடியிருப்புப் பகுதிக்கு வருவது வழக்கம். இந்நிலையில் கண்ணூத்தைச் சேர்ந்த விவசாயி கருப்பையா என்பவருக்குச் சொந்தமான 50 அடி ஆழக் கிணற்றில் நேற்று முன்தினம் (மே 31) இரவு இரண்டு காட்டெருமைக் கன்றுகள் தவறி விழுந்தன.

இதனையடுத்து மாவட்ட வன அலுவலர் சுஜாதா உத்தரவின் பேரில், மாவட்ட உதவி வன அலுவலர் சம்பத்குமார் தலைமையிலான வனத் துறையினர் கயிறு கட்டி காட்டெருமைக் கன்றுகளை மீட்க முயன்று வந்தனர். ஆனால், கன்றுகளின் அவற்றை சீற்றத்தால் மீட்கும் முயற்சி தோல்வியடைந்தது.

இதனையடுத்து இன்று (ஜூன்.02) மதியம் கிரேன் இயந்திரம் கொண்டுவரப்பட்டு அதன் மூலம் கிணற்றுக்குள் இறங்கிய தீயணைப்பு வீரர்கள் காட்டெருமைக் கன்றுகளின் கண்கள், கால்களைக் கட்டி பின்னர் கன்றுகளை குப்பைத் தொட்டிக்குள் வைத்து கிரேன் மூலம் வனத் துறையினர் உயிருடன் மீட்டனர்.

கிணற்றுக்குள் விழுந்த காட்டெருமை கன்றுகள் மீட்பு
கிணற்றுக்குள் விழுந்த காட்டெருமை கன்றுகள் மீட்பு

இதனையடுத்து கால்நடை மருத்துவர்கள் மூலம் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் காட்டெருமைக் கன்றுகள் வனப்பகுதிக்குள் விடப்பட்டன.

திருச்சி மாவட்டம், கண்ணூத்து பகுதியில் உள்ள காட்டெருமை உள்ளிட்ட வன விலங்கள் உணவுக்காகவும் குடிநீருக்காகவும் வனப்பகுதியில் இருந்து குடியிருப்புப் பகுதிக்கு வருவது வழக்கம். இந்நிலையில் கண்ணூத்தைச் சேர்ந்த விவசாயி கருப்பையா என்பவருக்குச் சொந்தமான 50 அடி ஆழக் கிணற்றில் நேற்று முன்தினம் (மே 31) இரவு இரண்டு காட்டெருமைக் கன்றுகள் தவறி விழுந்தன.

இதனையடுத்து மாவட்ட வன அலுவலர் சுஜாதா உத்தரவின் பேரில், மாவட்ட உதவி வன அலுவலர் சம்பத்குமார் தலைமையிலான வனத் துறையினர் கயிறு கட்டி காட்டெருமைக் கன்றுகளை மீட்க முயன்று வந்தனர். ஆனால், கன்றுகளின் அவற்றை சீற்றத்தால் மீட்கும் முயற்சி தோல்வியடைந்தது.

இதனையடுத்து இன்று (ஜூன்.02) மதியம் கிரேன் இயந்திரம் கொண்டுவரப்பட்டு அதன் மூலம் கிணற்றுக்குள் இறங்கிய தீயணைப்பு வீரர்கள் காட்டெருமைக் கன்றுகளின் கண்கள், கால்களைக் கட்டி பின்னர் கன்றுகளை குப்பைத் தொட்டிக்குள் வைத்து கிரேன் மூலம் வனத் துறையினர் உயிருடன் மீட்டனர்.

கிணற்றுக்குள் விழுந்த காட்டெருமை கன்றுகள் மீட்பு
கிணற்றுக்குள் விழுந்த காட்டெருமை கன்றுகள் மீட்பு

இதனையடுத்து கால்நடை மருத்துவர்கள் மூலம் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் காட்டெருமைக் கன்றுகள் வனப்பகுதிக்குள் விடப்பட்டன.

Last Updated : Jun 2, 2021, 9:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.