ETV Bharat / city

டெல்லி விவசாயிகள் போராட்டம்: திருச்சி, பெரம்பலூரில் திமுக ஆர்ப்பாட்டம்!

author img

By

Published : Dec 5, 2020, 11:53 AM IST

டெல்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, திமுக சார்பில் திருச்சி, பெரம்பலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுவருகிறது.

திமுக ஆர்ப்பாட்டம்
திமுக ஆர்ப்பாட்டம்

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, பல்வேறு மாநில விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்திவருகின்றனர். அதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின், டெல்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக மத்திய, மாநில அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

பெரம்பலூர் ஆர்ப்பாட்டம்
பெரம்பலூர் ஆர்ப்பாட்டம்

அதனடிப்படையில், இன்று(டிச. 05) திமுகவினர் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, திருச்சியில் திமுக மாவட்டச் செயலாளர்கள் வைரமணி, மகேஷ் பொய்யாமொழி, காடுவெட்டி தியாகராஜன் தலைமையில் அண்ணா சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுவருகிறது.

திமுக ஆர்ப்பாட்டம்

அதில், முன்னாள் துணை மேயர் அன்பழகன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் அன்பில் பெரியசாமி, விவசாய சங்கத் தலைவர் பூவை. விஸ்வநாதன் உள்பட 500-க்கும் மேற்பட்ட கட்சியினர் கலந்துகொண்டுள்ளனர்.

அதேபோல பெரம்பலூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் பகுதியில் திமுகவின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுவருகிறது. அதற்கு திமுக மாவட்டச் செயலாளர் குன்னம் ராஜேந்திரன் தலைமையில் தாங்கியுள்ளார்.

இதையும் படிங்க: விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு: கருப்பு கொடி ஏந்தி களத்தில் இறங்கும் திமுக!

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, பல்வேறு மாநில விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்திவருகின்றனர். அதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின், டெல்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக மத்திய, மாநில அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

பெரம்பலூர் ஆர்ப்பாட்டம்
பெரம்பலூர் ஆர்ப்பாட்டம்

அதனடிப்படையில், இன்று(டிச. 05) திமுகவினர் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, திருச்சியில் திமுக மாவட்டச் செயலாளர்கள் வைரமணி, மகேஷ் பொய்யாமொழி, காடுவெட்டி தியாகராஜன் தலைமையில் அண்ணா சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுவருகிறது.

திமுக ஆர்ப்பாட்டம்

அதில், முன்னாள் துணை மேயர் அன்பழகன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் அன்பில் பெரியசாமி, விவசாய சங்கத் தலைவர் பூவை. விஸ்வநாதன் உள்பட 500-க்கும் மேற்பட்ட கட்சியினர் கலந்துகொண்டுள்ளனர்.

அதேபோல பெரம்பலூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் பகுதியில் திமுகவின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுவருகிறது. அதற்கு திமுக மாவட்டச் செயலாளர் குன்னம் ராஜேந்திரன் தலைமையில் தாங்கியுள்ளார்.

இதையும் படிங்க: விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு: கருப்பு கொடி ஏந்தி களத்தில் இறங்கும் திமுக!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.