ETV Bharat / city

திருச்சி இளைஞர்களுக்கு அல்கொய்தா இயக்கத்துடன் தொடர்பா? என்ஐஏ விசாரணை - என்ஐஏ அலுவலர்கள் விசாரணை

திருச்சி: அல்கொய்தா இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட இருவரிடம் தேசிய புலனாய்வு பிரிவு அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

என்ஐஏ விசாரணை
என்ஐஏ விசாரணை
author img

By

Published : Nov 30, 2019, 12:57 PM IST

திருச்சி எடமலைப்பட்டி புதூரைச் சேர்ந்தவர் சர்புதீன் (30). இவர் தனது முகநூலில் அல்கொய்தா இயக்கத்தின் பதிவுக்கு லைக் மற்றும் கமெண்ட் செய்திருந்தார். இதையடுத்து, இவருக்கு அல்கொய்தா இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக, கோவையில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்பு அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், திருச்சியில் உள்ள சர்புதீன் வீட்டுக்குச் சென்ற புலனாய்வு அலுவலர்கள், அவரது கம்ப்யூட்டர், செல்போன், இ-மெயில், சமூக வலைதளம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

என்ஐஏ விசாரணை
என்ஐஏ விசாரணை

அதன்பின் சர்புதீனையும், அவரது வீட்டிலிருந்த ஜாபர் என்பவரையும் விசாரணைக்காக அலுவலர்கள் அழைத்துச் சென்றனர். இதனால், எடமலைப்பட்டி புதூரில் பரபரப்பு நிலவியது.

திருச்சி எடமலைப்பட்டி புதூரைச் சேர்ந்தவர் சர்புதீன் (30). இவர் தனது முகநூலில் அல்கொய்தா இயக்கத்தின் பதிவுக்கு லைக் மற்றும் கமெண்ட் செய்திருந்தார். இதையடுத்து, இவருக்கு அல்கொய்தா இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக, கோவையில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்பு அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், திருச்சியில் உள்ள சர்புதீன் வீட்டுக்குச் சென்ற புலனாய்வு அலுவலர்கள், அவரது கம்ப்யூட்டர், செல்போன், இ-மெயில், சமூக வலைதளம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

என்ஐஏ விசாரணை
என்ஐஏ விசாரணை

அதன்பின் சர்புதீனையும், அவரது வீட்டிலிருந்த ஜாபர் என்பவரையும் விசாரணைக்காக அலுவலர்கள் அழைத்துச் சென்றனர். இதனால், எடமலைப்பட்டி புதூரில் பரபரப்பு நிலவியது.

Intro:திருச்சியில் வாலிபரிடம் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். Body:

திருச்சி:
திருச்சியில் 2 இளைஞர்களிடம் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி எடமலைப்பட்டி புதூர் சீனிவாசா நகரில் உள்ள அப்துல் நசீர் என்பவரது மகன் சர்புதீன் (30) வீட்டில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் இன்று காலை சோதனை மேற்கொண்டனர். அவரது கம்ப்யூட்டர், செல்போன், இமெயில், சமூக வலைதளங்கள் ஆகியவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
சர்புதீன் அல்கொய்தா இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது இதன் அடிப்படையிலேயே கோவையில் இருந்து வந்த அதிகாரிகள் 3 பேர் சர்புதீன் வீட்டில் சோதனை நடத்தினர்.
முகநூலில் அல்கொய்தா இயக்கத்தின் பதிவிற்கு சர்புதீன் லைக் மற்றும் கமெண்ட் அளித்து வந்துள்ளார். அதனால் தற்போது எனக்கும் அல்கொய்தா அமைப்புக்கும் தொடர்பு இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தித்துள்ளனர் சோதனை முடிவடைந்ததைத் தொடர்ந்து சர்புதீனையும், வீட்டிலிருந்த ஜாபர் என்பவரையும் விசாரணைக்காக அதிகாரிகள் அழைத்துச் சென்றுள்ளனர். மேலும் சர்புதீன் நாளை துபாய் செல்ல இருந்த தகவலும் கிடைத்துள்ளது. சோதனை காரணமாக எடமலைப்பட்டி புதூரில் இன்று காலை முதல் பரபரப்பு நிலவியதுConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.