ETV Bharat / city

Gutka burned: திருச்சியில் குட்கா, புகையிலைப் பொருள்கள் தீயிட்டு அழிப்பு! - திருச்சி குட்கா புகைபொருட்கள் தீயிட்டு அழிப்பு

Gutka burned: திருச்சியில் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா, புகையிலைப் பொருள்களை மாநகராட்சி ஊழியர்கள் தீயிட்டு அழித்தனர்.

புகைபொருட்கள் தீயிட்டு அழிப்பு
புகைபொருட்கள் தீயிட்டு அழிப்பு
author img

By

Published : Dec 24, 2021, 10:39 AM IST

Gutka burned: திருச்சியில் குட்கா, புகையிலைப் பொருள்கள் விற்பதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு குட்கா, புகையிலைப் பொருள்கள் விற்பனை நடைபெறுவதாகக் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் குட்கா, புகையிலை விற்பனை செய்த கடை உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிந்து, குட்கா, புகையிலைப் பொருள்களை காவல் துறையினர் பறிமுதல்செய்தனர்.

மாவட்டத்தில் உள்ள 13 காவல் நிலையங்களில் சோதனையின்போது பறிமுதல்செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருள்கள் திருச்சி அரியமங்கலத்தில் உள்ள குப்பைக் கிடங்கிற்கு கொண்டுவரப்பட்டன.

புகையிலைப் பொருள்கள் தீயிட்டு அழிப்பு

அங்கு மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர் ரமேஷ்பாபு முன்னிலையில், பொன்மலை காவல் உதவி ஆணையர் தலைமையில், மூன்றாயிரத்து 600 கிலோ எடையுள்ள ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா, புகையிலைப் பொருள்களை மாநகராட்சி ஊழியர்கள் தீயிட்டு அழித்தனர்.

இதையும் படிங்க: ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட போது என்ன செய்து கொண்டிருந்தது அரசு ? - சீமான் கேள்வி

Gutka burned: திருச்சியில் குட்கா, புகையிலைப் பொருள்கள் விற்பதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு குட்கா, புகையிலைப் பொருள்கள் விற்பனை நடைபெறுவதாகக் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் குட்கா, புகையிலை விற்பனை செய்த கடை உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிந்து, குட்கா, புகையிலைப் பொருள்களை காவல் துறையினர் பறிமுதல்செய்தனர்.

மாவட்டத்தில் உள்ள 13 காவல் நிலையங்களில் சோதனையின்போது பறிமுதல்செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருள்கள் திருச்சி அரியமங்கலத்தில் உள்ள குப்பைக் கிடங்கிற்கு கொண்டுவரப்பட்டன.

புகையிலைப் பொருள்கள் தீயிட்டு அழிப்பு

அங்கு மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர் ரமேஷ்பாபு முன்னிலையில், பொன்மலை காவல் உதவி ஆணையர் தலைமையில், மூன்றாயிரத்து 600 கிலோ எடையுள்ள ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா, புகையிலைப் பொருள்களை மாநகராட்சி ஊழியர்கள் தீயிட்டு அழித்தனர்.

இதையும் படிங்க: ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட போது என்ன செய்து கொண்டிருந்தது அரசு ? - சீமான் கேள்வி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.