திருச்சி பீமா நகர் பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் கோபி கண்ணன். இவர் இன்று இரவு சுமார் 7 மணி அளவில் வீட்டின் அருகே தனது குழந்தைக்கு சைக்கிள் ஓட்ட கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத ஆறு பேர் கொண்ட கும்பல் அவரை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு தப்பியோடினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சி நீதிமன்ற காவல் நிலையம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்கறிஞரின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.