ETV Bharat / city

தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற 31வது சாலை பாதுகாப்பு வார விழா பேரணி

author img

By

Published : Jan 22, 2020, 8:04 AM IST

தமிழ்நாடு முழுவதும் 31ஆவது சாலைப் பாதுகாப்பு வார விழாவையொட்டி சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

safety
safety

தமிழ்நாட்டில் போக்குவரத்துத் துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 20ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை 31ஆவது சாலைப் பாதுகாப்பு வார விழா கொண்டாடப்படுகிறது. சாலைப் போக்குவரத்தில் நிகழும் விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு இந்த வார விழாவில் பொதுமக்கள், வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

அந்த வகையில், தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் சாலைப் பாதுகாப்பு குறித்து வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு செய்யப்பட்டுவருகிறது. இதில், இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தேனியில் நடைபெற்ற 31ஆவது சாலைப் பாதுகாப்பு வாரவிழா விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கிவைத்தார். இதில், காவல் துறையினர், வட்டார போக்குவரத்து அலுவலர்கள், மாணவர்கள் உள்பட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

விழிப்புணர்வு செய்யும் மாணவிகள்
விழிப்புணர்வு செய்யும் மாணவிகள்

திருச்சியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் தொடங்கிவைத்தனர். காஞ்சிபுரத்தில் ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார். இதில், பள்ளி, கல்லூரி மாணவர்கள் அரசுப் போக்குவரத்து துறை ஓட்டுநர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி

பெரியாருக்கு எதிரான ரஜினியின் போர் வெல்லுமா?

அதேபோன்று, விருதுநகர், தூத்துக்குடி, பெரம்பலூர், கன்னியாகுமரி, புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, ஈரோடு, திருவாரூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களிலும் சாலைப் பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில், இளைஞர்கள், காவல் துறையினர், கல்லூரி மாணவர்கள் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.

தமிழ்நாட்டில் போக்குவரத்துத் துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 20ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை 31ஆவது சாலைப் பாதுகாப்பு வார விழா கொண்டாடப்படுகிறது. சாலைப் போக்குவரத்தில் நிகழும் விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு இந்த வார விழாவில் பொதுமக்கள், வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

அந்த வகையில், தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் சாலைப் பாதுகாப்பு குறித்து வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு செய்யப்பட்டுவருகிறது. இதில், இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தேனியில் நடைபெற்ற 31ஆவது சாலைப் பாதுகாப்பு வாரவிழா விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கிவைத்தார். இதில், காவல் துறையினர், வட்டார போக்குவரத்து அலுவலர்கள், மாணவர்கள் உள்பட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

விழிப்புணர்வு செய்யும் மாணவிகள்
விழிப்புணர்வு செய்யும் மாணவிகள்

திருச்சியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் தொடங்கிவைத்தனர். காஞ்சிபுரத்தில் ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார். இதில், பள்ளி, கல்லூரி மாணவர்கள் அரசுப் போக்குவரத்து துறை ஓட்டுநர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி

பெரியாருக்கு எதிரான ரஜினியின் போர் வெல்லுமா?

அதேபோன்று, விருதுநகர், தூத்துக்குடி, பெரம்பலூர், கன்னியாகுமரி, புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, ஈரோடு, திருவாரூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களிலும் சாலைப் பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில், இளைஞர்கள், காவல் துறையினர், கல்லூரி மாணவர்கள் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.

Intro:விருதுநகர்
21-01-2020

விருதுநகரில் 31வது சாலைப் பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி 500க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பு.

Tn_vnr_01_road_safety_vis_script_7204885Body:31 வது சாலைப் பாதுகாப்பு வார விழா கடந்த 20ம் தேதியிலிருந்து 27ம் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் இரண்டாம் நாளான இன்று சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் அவர்கள் கொடியசைத்து துவங்கி வைத்தார். இந்த நடை பயண விழிப்புணர்வு பேரணி விருதுநகர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆரம்பித்து மதுரை பைபாஸ் சாலை சூலக்கரை மேடு மாவட்ட ஆட்சியர் வளாகம் வழியாக வந்து மீண்டும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் முடிவடைந்தது. இந்த நடைபயண பேரணியில் காவல்துறையினர் நான்கு மற்றும் மூன்று சக்கர வாகன ஓட்டுநர்கள். சாரண சாரணியர் மாணவர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த நடைபயண பேரணியில் கலந்து கொண்டவர்கள் தலைக்கவசம் உயிர்க் கவசம். அதிக வேகம் ஆபத்தானது. 100ல் வேகம்108 ல் சோகம். சிக்னலை மதிப்போம். சிக்கலைத் தவிர்ப்போம் போன்ற விழிப்புணர்வு. சாலையில் சாகசம் செய்யாதீர். போன்ற பதாகைகளை கையில் ஏந்திச் சென்று பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.