ETV Bharat / city

கரோனா பாதிப்பு: சமூக இடைவெளியை பின்பற்ற கிராமப்புற சாலைகள் மூடல் - corona impact rural roads are closed

திருப்பூர்: கரோனா வைரஸின் பரவலைத் தடுக்க கிராமப் புறங்களில் உள்ள சாலைகளை சீமைகருவேல மரங்களை வெட்டி காவல்துறையினர் அடைத்தனர்.

திருப்பூர்:கரோனா வைரஸின் பரவலை தடுக்க கிராமப்புறங்களில் உள்ள சாலைகளை சீமைகருவேல மரங்களை வெட்டி காவல்துறையினர் அடைத்தனர்.
திருப்பூர்:கரோனா வைரஸின் பரவலை தடுக்க கிராமப்புறங்களில் உள்ள சாலைகளை சீமைகருவேல மரங்களை வெட்டி காவல்துறையினர் அடைத்தனர்.
author img

By

Published : Mar 31, 2020, 9:10 PM IST

உலகம் முழுவதும் கரோனா வைரஸின் தாக்கம் அதிகமாகி வரும் சூழ்நிலையில், கரோனா வைரஸின் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுகள் சமூக இடைவெளியை கடைபிடிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஊரடங்கு, 144 தடை உத்தரவு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மக்கள் சாலையில் வழக்கம்போல நடமாடி வருகின்றனர்.

கரோனா பாதிப்பு: சமுக இடைவெளியை பின்பற்ற கிராமப்புற சாலைகள் மூடல்

இதனால் ஊரடங்கை கடைபிடிக்ககோரி மக்களிடம் எடுத்துக் கூறியும், கேட்காமல் ஊர் சுற்றும் நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ததோடு மட்டுமின்றி, தங்கள் பாணியில் அவர்களுக்கு சிறப்பு கவனிப்பையும் செய்து வருகின்றனர். இந்நிலையில், திருப்பூரின் எல்லை பகுதியான ஈரோட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20ஐ தொட்டுள்ள நிலையில், மாவட்ட எல்லை பகுதியாக உள்ள நொய்யல் ஆற்றை கடந்து வர உள்ள அனைத்து கிராமப்புற சாலைகளும் அடைக்கப்பட்டுள்ளன.

மேலும் முக்கிய சாலைகளை காவல்துறையினர் தடுப்புகளை ஏற்படுத்தி கண்காணித்து வரும் நிலையில், கிராமப்புற சாலைகளான ஒரத்துப்பாளையம், மறவாபாளையம் உள்ளிட்ட அனைத்து சாலைகளையும் சீமைகருவேல மரங்களை வெட்டி போட்டு காவல்துறையினர் அடைத்து வைத்துள்ளனர். இதனால் தேவையின்றி வாகனங்களில் சுற்றுவோர்களை தடுப்பதோடு மட்டுமின்றி, நோய் பரவலையும் தடுக்க முடியும் என கூறியுள்ளனர்.

இதையும் படிக்க:சமூக இடைவெளியை மறந்து பைவாங்க குவிந்த மக்கள் !

உலகம் முழுவதும் கரோனா வைரஸின் தாக்கம் அதிகமாகி வரும் சூழ்நிலையில், கரோனா வைரஸின் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுகள் சமூக இடைவெளியை கடைபிடிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஊரடங்கு, 144 தடை உத்தரவு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மக்கள் சாலையில் வழக்கம்போல நடமாடி வருகின்றனர்.

கரோனா பாதிப்பு: சமுக இடைவெளியை பின்பற்ற கிராமப்புற சாலைகள் மூடல்

இதனால் ஊரடங்கை கடைபிடிக்ககோரி மக்களிடம் எடுத்துக் கூறியும், கேட்காமல் ஊர் சுற்றும் நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ததோடு மட்டுமின்றி, தங்கள் பாணியில் அவர்களுக்கு சிறப்பு கவனிப்பையும் செய்து வருகின்றனர். இந்நிலையில், திருப்பூரின் எல்லை பகுதியான ஈரோட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20ஐ தொட்டுள்ள நிலையில், மாவட்ட எல்லை பகுதியாக உள்ள நொய்யல் ஆற்றை கடந்து வர உள்ள அனைத்து கிராமப்புற சாலைகளும் அடைக்கப்பட்டுள்ளன.

மேலும் முக்கிய சாலைகளை காவல்துறையினர் தடுப்புகளை ஏற்படுத்தி கண்காணித்து வரும் நிலையில், கிராமப்புற சாலைகளான ஒரத்துப்பாளையம், மறவாபாளையம் உள்ளிட்ட அனைத்து சாலைகளையும் சீமைகருவேல மரங்களை வெட்டி போட்டு காவல்துறையினர் அடைத்து வைத்துள்ளனர். இதனால் தேவையின்றி வாகனங்களில் சுற்றுவோர்களை தடுப்பதோடு மட்டுமின்றி, நோய் பரவலையும் தடுக்க முடியும் என கூறியுள்ளனர்.

இதையும் படிக்க:சமூக இடைவெளியை மறந்து பைவாங்க குவிந்த மக்கள் !

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.