ETV Bharat / city

தேர்தல் நெருக்கத்தில் சலுகைகளா? - கொதிக்கும் திருப்பூர் தொழிலாளர்கள்!

author img

By

Published : Feb 12, 2021, 7:30 PM IST

திருப்பூர்: கரோனா காலத்தில் தொழிலாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் உதவாத அரசு தேர்தல் நெருங்குவதால் பொங்கல் பரிசையும் சலுகைகளையும் அறிவிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

weavers
weavers

எங்கு திரும்பினாலும் பின்னலாடை நிறுவனங்கள், அதனை சார்ந்த ஜாப் வொர்க் நிறுவனங்கள் பல செயல்பட்டு வரும் ஊர் திருப்பூர். 8 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இங்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை செய்து வருகின்றனர். ஆடைத் தயாரிப்பு, வெளிநாடுகள், வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி என எப்போதும் பரபரப்பாகவே காணப்படும் திருப்பூர், கரோனா பொதுமுடக்கத்தின் போது கடும் பாதிப்பை சந்தித்தது. ஆனால், தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்பும் நிலைமை இன்னும் சீராகவில்லை என்றும், அதற்கு அரசுதான் காரணம் என்றும் புகார் கூறுகின்றனர் தொழிலாளர்கள்.

கரோனா காலத்தில் வருமானமின்றி மிகவும் சிரமப்பட்டு வந்த தொழிலாளர்களை தமிழக அரசு திரும்பிக்கூட பார்க்கவில்லை என்றும், தொழிலாளர்களை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல், வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே நிவாரணமாக வழங்கியதாகவும் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். ஆனால், தேர்தல் நெருங்குவதால் சில சலுகைகளையும், பொங்கல் பரிசாக 2,500 ரூபாயும் கொடுப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

தேர்தல் நெருக்கத்தில் சலுகைகளா? - கொதிக்கும் திருப்பூர் மக்கள்!

பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்படாமல், வாக்குகளை பெறுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு அரசுகள் செயல்படுவதாக, இப்பகுதி தொழிலாளர்களும் பொதுமக்களும் கடுமையாக விமர்சிக்கின்றனர். தேவைக்கு உதவாமல், தங்கள் தேவைக்கு பணத்தை வீசி ஆட்சியில் அமர்ந்து விடலாம் என எண்ணும் அரசியல் கட்சிகளுக்கு, தேர்தலுக்கு முன்பே திருப்பூர் மக்கள் பாடமெடுக்கின்றனர். அரசாளும் கட்சியும், இனி ஆளப்போகும் கட்சி எதுவோ அதுவும் புரிந்து செயல்பட்டால் அவர்களுக்கு நல்லது.

இதையும் படிங்க: 'மத்திய அரசு நடத்தும் தேர்வுகளுக்குத் தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் இல்லை'

எங்கு திரும்பினாலும் பின்னலாடை நிறுவனங்கள், அதனை சார்ந்த ஜாப் வொர்க் நிறுவனங்கள் பல செயல்பட்டு வரும் ஊர் திருப்பூர். 8 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இங்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை செய்து வருகின்றனர். ஆடைத் தயாரிப்பு, வெளிநாடுகள், வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி என எப்போதும் பரபரப்பாகவே காணப்படும் திருப்பூர், கரோனா பொதுமுடக்கத்தின் போது கடும் பாதிப்பை சந்தித்தது. ஆனால், தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்பும் நிலைமை இன்னும் சீராகவில்லை என்றும், அதற்கு அரசுதான் காரணம் என்றும் புகார் கூறுகின்றனர் தொழிலாளர்கள்.

கரோனா காலத்தில் வருமானமின்றி மிகவும் சிரமப்பட்டு வந்த தொழிலாளர்களை தமிழக அரசு திரும்பிக்கூட பார்க்கவில்லை என்றும், தொழிலாளர்களை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல், வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே நிவாரணமாக வழங்கியதாகவும் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். ஆனால், தேர்தல் நெருங்குவதால் சில சலுகைகளையும், பொங்கல் பரிசாக 2,500 ரூபாயும் கொடுப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

தேர்தல் நெருக்கத்தில் சலுகைகளா? - கொதிக்கும் திருப்பூர் மக்கள்!

பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்படாமல், வாக்குகளை பெறுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு அரசுகள் செயல்படுவதாக, இப்பகுதி தொழிலாளர்களும் பொதுமக்களும் கடுமையாக விமர்சிக்கின்றனர். தேவைக்கு உதவாமல், தங்கள் தேவைக்கு பணத்தை வீசி ஆட்சியில் அமர்ந்து விடலாம் என எண்ணும் அரசியல் கட்சிகளுக்கு, தேர்தலுக்கு முன்பே திருப்பூர் மக்கள் பாடமெடுக்கின்றனர். அரசாளும் கட்சியும், இனி ஆளப்போகும் கட்சி எதுவோ அதுவும் புரிந்து செயல்பட்டால் அவர்களுக்கு நல்லது.

இதையும் படிங்க: 'மத்திய அரசு நடத்தும் தேர்வுகளுக்குத் தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் இல்லை'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.