ETV Bharat / city

பின்னலாடை நிறுவனத்தில் தீ - பல லட்சம் ரூபாய் இழப்பு!

திருப்பூர்: பின்னலாடை நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள துணிகள் எரிந்து சேதம் அடைந்தது.

author img

By

Published : Aug 4, 2020, 2:02 PM IST

திருப்பூர் பின்னலாடை நிறுவனத்தில் தீ விபத்து
திருப்பூர் பின்னலாடை நிறுவனத்தில் தீ விபத்து

திருப்பூர் மாவட்டம், அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்த முருகேசன், தண்ணீர்பந்தல் பகுதியில் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார்.

இதனிடையே இன்று(ஆகஸ்ட் 4) காலை ஏற்றுமதி நிறுவனத்தின் முதல் தளத்திலிருந்து, புகை வருவதை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் உடனே தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

திருப்பூர் பின்னலாடை நிறுவனத்தில் தீ விபத்து

இந்தத் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையிநர் ஒரு மணி நேரத்திற்கும் மேல் போராடி தீயை அணைத்தனர். நல்வாய்ப்பாக நிறுவனத்தில் தொழிலாளர்கள் யாரும் இல்லாத காரணத்தால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

மீட்பு பணியில் தீயணைப்பு துறையினர்
மீட்புப் பணியில் தீயணைப்புத் துறையினர்

மேலும் நிறுவனத்தின் முதல் தளத்தில் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்புள்ள பின்னலாடை துணிகள் தீயில் எரிந்து முற்றிலும் சேதம் அடைந்தது. மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: மதுரை ஜவுளி மில்லில் பயங்கர தீ விபத்து

திருப்பூர் மாவட்டம், அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்த முருகேசன், தண்ணீர்பந்தல் பகுதியில் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார்.

இதனிடையே இன்று(ஆகஸ்ட் 4) காலை ஏற்றுமதி நிறுவனத்தின் முதல் தளத்திலிருந்து, புகை வருவதை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் உடனே தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

திருப்பூர் பின்னலாடை நிறுவனத்தில் தீ விபத்து

இந்தத் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையிநர் ஒரு மணி நேரத்திற்கும் மேல் போராடி தீயை அணைத்தனர். நல்வாய்ப்பாக நிறுவனத்தில் தொழிலாளர்கள் யாரும் இல்லாத காரணத்தால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

மீட்பு பணியில் தீயணைப்பு துறையினர்
மீட்புப் பணியில் தீயணைப்புத் துறையினர்

மேலும் நிறுவனத்தின் முதல் தளத்தில் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்புள்ள பின்னலாடை துணிகள் தீயில் எரிந்து முற்றிலும் சேதம் அடைந்தது. மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: மதுரை ஜவுளி மில்லில் பயங்கர தீ விபத்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.