ETV Bharat / city

பைக்-லாரி மோதல்: தூத்துக்குடியில் தீயணைப்பு வீரர் உயிரிழப்பு - இருசக்கர வாகனம், லாரி மோதல்

தூத்துக்குடி: ஓட்டப்பிடாரம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் தீயணைப்பு வீரர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இருசக்கர வாகனம், லாரி மோதிய விபத்தில் தீயணைப்பு வீரர் உயிரிழந்தார்
author img

By

Published : Sep 20, 2019, 11:34 AM IST

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் மேட்டு காலனியைச் சேர்ந்தவர் அழகர் மகன் மகேந்திரன் (22). இவர் ஓட்டப்பிடாரம் தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு வீரராக பணிபுரிந்துவருகிறார். இன்று அலுவலக வேலையாக தனது இருசக்கர வாகனத்தில் தூத்துக்குடி வந்துள்ளார். பின்னர், வேலை முடிந்ததும் ஓட்டப்பிடாரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.

இருசக்கர வாகனம்-லாரி மோதிய விபத்தில் தீயணைப்பு வீரர் உயிரிழப்பு

தூத்துக்குடி - மதுரை புறவழிச்சாலையில் புதூர் பாண்டியபுரம் விலக்கில் திரும்பும்போது தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து மதுரை நோக்கிச் சென்ற கண்டெய்னர் லாரி இவரது இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த மகேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து புதியம்புத்தூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் மேட்டு காலனியைச் சேர்ந்தவர் அழகர் மகன் மகேந்திரன் (22). இவர் ஓட்டப்பிடாரம் தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு வீரராக பணிபுரிந்துவருகிறார். இன்று அலுவலக வேலையாக தனது இருசக்கர வாகனத்தில் தூத்துக்குடி வந்துள்ளார். பின்னர், வேலை முடிந்ததும் ஓட்டப்பிடாரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.

இருசக்கர வாகனம்-லாரி மோதிய விபத்தில் தீயணைப்பு வீரர் உயிரிழப்பு

தூத்துக்குடி - மதுரை புறவழிச்சாலையில் புதூர் பாண்டியபுரம் விலக்கில் திரும்பும்போது தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து மதுரை நோக்கிச் சென்ற கண்டெய்னர் லாரி இவரது இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த மகேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து புதியம்புத்தூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Intro:இருசக்கர வாகனம் - லாரி மோதல்: தீயணைப்பு வீரர் பரிதாப சாவு
Body:
தூத்துக்குடி


தூத்துக்குடி அருகே மோட்டார் பைக் மீது லாரி மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த தீயணைப்பு வீரர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் மேட்டு காலனியைச் சேர்ந்தவர் அழகர் மகன் மகேந்திரன் (22). ஓட்டப்பிடாரம் தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு வீரராக பணிபுரிந்து வருகிறார். இவர் இன்று அலுவல் தொடர்பாக தனது மோட்டார் பைக்கில் தூத்துக்குடி வந்துள்ளார். பின்னர், வேலை முடிந்ததும் ஓட்டப்பிடாரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். 

தூத்துக்குடி - மதுரை புறவழிச்சாலையில் புதூர் பாண்டியுரம் விலக்கில் திரும்பும்போது தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து மதுரை நோக்கிச் சென்ற கண்டெய்னர் லாரி இவரது பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த மகேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து புதியம்புத்தூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.