ETV Bharat / city

வாகன ஓட்டுநர் கூட மருத்துவம் பார்க்கலாம் போல உள்ளது புதிய மசோதா - protest for next exam

தூத்துக்குடி: புதிய மருத்துவ மசோதாவை கைவிட வலியுறுத்தி தூத்துக்குடியில் அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் ஆறாவது நாளாக, உருவ பொம்மைக்கு வாயில் கருப்பு துணி கட்டி நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.

மாணவர்கள் போராட்டம்
author img

By

Published : Aug 9, 2019, 1:06 AM IST

மத்திய அரசு தேசிய மருத்துவ ஆணையத்தின் மூலம் புதிய மருத்துவ மசோதாவை நிறைவேற்றி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் சங்கத்தினர், தொடர்ந்து ஆறாவது நாளாக போராட்டத்தினை கையில் எடுத்து நடத்தி வருகின்றனர்.

ஆறாவது நாளான நடைபெறும் போராட்டத்தில், மாணவர்கள் மருத்துவர் போன்ற உருவபொம்மையை நாற்காலியில் அமரவைத்து, அதன் வாயைக் கருப்பு துணியால் கட்டி ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும் நீட் தேர்வு, நெக்ஸ்ட் தேர்வு ரத்து, என்.எம்.சி ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திக் கண்டன முழக்கங்களையும் எழுப்பினர்.

தீவிரமடையும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட மருத்துவக்கல்லூரி மாணவர் தினேஷ் கூறும்போது, “மத்திய, மாநில அரசுகள் கொண்டு வந்துள்ள புதிய மருத்துவ கல்வி மசோதாக்களை உடனடியாக திரும்பப் பெறவேண்டும். இது முறையாக மருத்துவம் படித்து வரும் எங்களுக்கும், எதிரானது. நெக்ஸ்ட் தேர்வு தேவையில்லாததால் அதை திரும்பப்பெறவேண்டும்.

மருத்துவர்களிடம் பயிற்சியில் உதவியாளராக இருக்கும் செவிலியர்கள் கிராமப்புறத்தில் ஆரம்ப நிலை மருத்துவம் பார்க்கலாம் என்ற மசோதாவையும் திரும்பப் பெறவேண்டும்” என்றார் .

மேலும் தூத்துக்குடி இந்திய மருத்துவர் சங்க கிளையின் தலைவர் அருள் பிரகாஷ் கூறும்போது, “அகில இந்திய அளவிலான இந்த ஆர்ப்பாட்டம் கடந்த ஆண்டுமுதல் நடைபெற்று வருகின்றது. இந்த புதிய மசோதாவில் மருத்துவத் துறையில் உள்ள ஓட்டுநரைக் கூட, மருத்துவம் பார்க்கலாம் என்பது சரியாகாது. மருத்துவர்களும், மாணவர்களின் போராட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றோம். விரைவில் இந்த விவகாரத்தில் மத்திய அரசு நல்ல முடிவு எடுக்கும் என்று நம்புகிறோம்” என்றார்.

மத்திய அரசு தேசிய மருத்துவ ஆணையத்தின் மூலம் புதிய மருத்துவ மசோதாவை நிறைவேற்றி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் சங்கத்தினர், தொடர்ந்து ஆறாவது நாளாக போராட்டத்தினை கையில் எடுத்து நடத்தி வருகின்றனர்.

ஆறாவது நாளான நடைபெறும் போராட்டத்தில், மாணவர்கள் மருத்துவர் போன்ற உருவபொம்மையை நாற்காலியில் அமரவைத்து, அதன் வாயைக் கருப்பு துணியால் கட்டி ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும் நீட் தேர்வு, நெக்ஸ்ட் தேர்வு ரத்து, என்.எம்.சி ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திக் கண்டன முழக்கங்களையும் எழுப்பினர்.

தீவிரமடையும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட மருத்துவக்கல்லூரி மாணவர் தினேஷ் கூறும்போது, “மத்திய, மாநில அரசுகள் கொண்டு வந்துள்ள புதிய மருத்துவ கல்வி மசோதாக்களை உடனடியாக திரும்பப் பெறவேண்டும். இது முறையாக மருத்துவம் படித்து வரும் எங்களுக்கும், எதிரானது. நெக்ஸ்ட் தேர்வு தேவையில்லாததால் அதை திரும்பப்பெறவேண்டும்.

மருத்துவர்களிடம் பயிற்சியில் உதவியாளராக இருக்கும் செவிலியர்கள் கிராமப்புறத்தில் ஆரம்ப நிலை மருத்துவம் பார்க்கலாம் என்ற மசோதாவையும் திரும்பப் பெறவேண்டும்” என்றார் .

மேலும் தூத்துக்குடி இந்திய மருத்துவர் சங்க கிளையின் தலைவர் அருள் பிரகாஷ் கூறும்போது, “அகில இந்திய அளவிலான இந்த ஆர்ப்பாட்டம் கடந்த ஆண்டுமுதல் நடைபெற்று வருகின்றது. இந்த புதிய மசோதாவில் மருத்துவத் துறையில் உள்ள ஓட்டுநரைக் கூட, மருத்துவம் பார்க்கலாம் என்பது சரியாகாது. மருத்துவர்களும், மாணவர்களின் போராட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றோம். விரைவில் இந்த விவகாரத்தில் மத்திய அரசு நல்ல முடிவு எடுக்கும் என்று நம்புகிறோம்” என்றார்.

Intro:புதிய மருத்துவ மசோதாவை கைவிட வலியுறுத்தி தூத்துக்குடியில் அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் 6வது நாளாக போராட்டம் - உருவ பொம்மைக்கு வாயில் கருப்பு துணி கட்டி மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து நூதன முறையில் எதிர்ப்பு.

Body:
தூத்துக்குடி

மத்திய அரசு தேசிய மருத்துவ ஆணையத்தின் மூலம் புதிய மருத்துவ மசோதவை நிறைவேற்றி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் சங்கத்தினர் தொடர்ந்து 6வது நாளாக இந்த போராட்டத்தினை கையில் எடுத்து நடத்தி வருகின்றனர். ஆறாவது நாளான இன்று அரசு மருத்துவகல்லூரி வளாகத்தில் மருத்துவர் போன்ற உருவபொம்மை நாற்காலியில் அமரவைத்து அதன் வாயை கருப்பு துணியால் கட்டி ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும் நெக்ஸ்ட் தேர்வு ரத்து, என்.எம்.சி ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோசங்கள் எழுப்பினர்.

இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட மருத்துவகல்லூரி மாணவர் தினேஷ் கூறும்போது மத்திய மாநில அரசுகள் கொண்டு வந்துள்ள புதிய மருத்துவ கல்வி மசோததாக்களை உடனடியாக திரும்ப பெற வேண்டும். இது மக்களுக்கும் முறையாக மருத்துவம் படித்து வரும் எங்களுக்கும் எதிரானது. நெக்ஸ்ட் தேர்வு தேவையில்லாதது அதனால் அதை திரும்பபெறவேண்டும். மருத்துவர்களிடம் பயிற்சியில் உதவியாளராக இருக்கும் நர்சிங் தகுதி படைத்தவர்கள் கிராமபுரத்தில் ஆரமப் நிலை மருத்துவம் பார்க்கலாம் என்ற மசோதவையும் திரும்ப பெறவேண்டும் எண்ற அவர் அவ்வாறு நியமனம் செய்யப்படும் மருத்துவர்கள் தனியார் மருத்துவம் பார்க்கமால் இருப்பார்கள் என்பதற்கு எந்த உத்திரவாதம் இல்லை. கிராமபுற மக்களுக்கான மருத்துவ தரம் குறைவதற்கு வாய்ப்புள்ளது. அதனால் இந்த புதிய மருத்துவ திட்ட மசோதா உடனடியாக திரும்பபெறவேண்டும் என்றார். மேலும் எங்களது கோரிக்கை நிறைவேற்றப்படும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என்றார்.


மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ள மாணவர்களிடம் பேசிய தூத்துக்குடி இந்திய மருத்துவர் சங்கத்தின் கிளையின் தலைவர் மருத்துவர் அருள் பிரகாஷ் கூறும்போது அகில இந்திய அளவிலான இந்த ஆர்ப்பாட்டம் கடந்த ஆண்டுமுதல் நடைபெற்று வருகின்றது. இந்த புதிய மருத்து திட்ட மசோதாவில் மருத்துவ துறையில் உள்ள ட்ரைவர் போன்றவர்கள் கூட மருத்துவம் பார்க்கலாம் என்பது சரியாகாது. என்ற அவர் இந்தியாவில் பீகார் ஒரிசா போன்றா மாநிலங்களில் அதிக முன்னேற்றம் மருத்துவ துறையில் இல்லை ஆனால் தமிழகத்தில் சிறப்பான முறையில் மருதுவதுறை செயல்பட்டு வருகின்றது. இங்குள்ள மருத்துவம் படிப்பவர்கள் முறையாக படித்தவர்கள் இவர்களுக்கு மீண்டும் நீட் போன்ற தேர்வு என்பது தேவையில்லாத பிரச்சனைகளை உருவாக்கும். இந்தியா முழுவது ஒரே கல்வி என்பது தமிழகத்தை பொறுத்த மட்டில் தேவையில்லை என்ற அவர் மருத்துவர்களும் மாணவர்களின் போராட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றோம் என்று கூறிய அவர் விரைவில் இந்த விவகாரத்தில் அரசு நல்ல முடிவு எடுக்கும் என்று நம்புவதாக கூறினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.