ETV Bharat / city

அமைச்சரின் சகோதரர் வீட்டில் 15 சவரன் நகை திருட்டு

தூத்துக்குடியில் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனின் சகோதரர் வீட்டில் 15 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்ற கும்பல் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

author img

By

Published : Aug 11, 2021, 5:58 PM IST

15 சவரன் நகை திருட்டு
15 சவரன் நகை திருட்டு

தூத்துக்குடி: தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் தமிழக மீன் வளத்துறை அமைச்சருமான அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனின் சகோதரர் சுதானந்தன், தூத்துக்குடி கேடிசி நகரில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு அவரது சொந்த ஊரான தண்டுபத்து கிராமத்தில் நடந்த கோயில் விழாவிற்காக குடும்பத்துடன் சென்றுள்ளார்.

இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 08) காலை அவரது ஓட்டுநர் வழக்கம்போல் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து உடனடியாக சுதானந்தனுக்கும், சிப்காட் காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்தார்.

ரூ.5 லட்சம் திருட்டு

இதையடுத்து, அங்கு சென்ற காவல் துறையினர், வீட்டை சோதனை செய்தனர். அப்போது, பீரோவிலிருந்த தங்க நகைகள் வைக்கும் லாக்கர் உள்ளிட்டவை உடைக்கப்பட்டு பொருள்கள் சிதறி கிடந்தன. உடனடியாக கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தினர்.

இதனிடையே வீட்டிற்கு திரும்பி வந்த சுதானந்தனிடம் விசாரணை நடத்தியதில், வீட்டில் வைத்திருந்த 15 சவரன் தங்கநகைகள், 5 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவை திருடு போனது தெரியவந்தது. இது தொடர்பாக சிப்காட் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: திரைப்பட பாணியில் போலி ரெய்டு: 1 பெண் உள்பட 6 பேர் கைது

தூத்துக்குடி: தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் தமிழக மீன் வளத்துறை அமைச்சருமான அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனின் சகோதரர் சுதானந்தன், தூத்துக்குடி கேடிசி நகரில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு அவரது சொந்த ஊரான தண்டுபத்து கிராமத்தில் நடந்த கோயில் விழாவிற்காக குடும்பத்துடன் சென்றுள்ளார்.

இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 08) காலை அவரது ஓட்டுநர் வழக்கம்போல் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து உடனடியாக சுதானந்தனுக்கும், சிப்காட் காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்தார்.

ரூ.5 லட்சம் திருட்டு

இதையடுத்து, அங்கு சென்ற காவல் துறையினர், வீட்டை சோதனை செய்தனர். அப்போது, பீரோவிலிருந்த தங்க நகைகள் வைக்கும் லாக்கர் உள்ளிட்டவை உடைக்கப்பட்டு பொருள்கள் சிதறி கிடந்தன. உடனடியாக கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தினர்.

இதனிடையே வீட்டிற்கு திரும்பி வந்த சுதானந்தனிடம் விசாரணை நடத்தியதில், வீட்டில் வைத்திருந்த 15 சவரன் தங்கநகைகள், 5 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவை திருடு போனது தெரியவந்தது. இது தொடர்பாக சிப்காட் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: திரைப்பட பாணியில் போலி ரெய்டு: 1 பெண் உள்பட 6 பேர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.