ETV Bharat / city

செண்பகவல்லி அம்மன் கோயில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா

தூத்துக்குடி: கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

செண்பகவல்லி அம்மன் கோயில்
author img

By

Published : Oct 14, 2019, 11:23 PM IST

கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்பாள் உடனுறை அருள்மிகு பூவனநாத சுவாமி திருக்கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இக்கோயிலில் கொடியேற்றத்தினை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருவனந்தல், திருப்பள்ளி எழுச்சி பூஜையும், அதையடுத்து அம்பாளுக்கும், பஞ்ச மூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடைபெற்றன.

பின்னர் இன்று காலை 5.45 மணிக்கு மேல் 6.15 மணிக்குள் கொடியேற்றமும் அதைத் தொடர்ந்து நந்தி, பலிபீடம், கொடிமரத்திற்குச் சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது.

இன்று இரவு 7.30 மணிக்கு புஷ்ப சப்பரத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஜனகல்யாண் திருப்பதி ராஜா, வணிக வைசிய சங்க செயலாளர் பழனி குமார், தொழிலதிபர் மகாலட்சுமி சந்திரன், முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் ரத்தினவேல் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழா, 25ஆம் தேதிவரை நடைபெறுகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மண்டகபடிதாரர்கள் சார்பில் அம்பாள் திருவீதி உலா வந்து பக்தர்களுக்குக் காட்சி அளிப்பார். விழா ஏற்பாடுகளைச் செயல் அலுவலர் ரோஷினி, உதவி ஆணையர் ரோஜாலிசுமதா ஆகியோர் செய்துவருகின்றனர்.

கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்பாள் உடனுறை அருள்மிகு பூவனநாத சுவாமி திருக்கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இக்கோயிலில் கொடியேற்றத்தினை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருவனந்தல், திருப்பள்ளி எழுச்சி பூஜையும், அதையடுத்து அம்பாளுக்கும், பஞ்ச மூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடைபெற்றன.

பின்னர் இன்று காலை 5.45 மணிக்கு மேல் 6.15 மணிக்குள் கொடியேற்றமும் அதைத் தொடர்ந்து நந்தி, பலிபீடம், கொடிமரத்திற்குச் சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது.

இன்று இரவு 7.30 மணிக்கு புஷ்ப சப்பரத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஜனகல்யாண் திருப்பதி ராஜா, வணிக வைசிய சங்க செயலாளர் பழனி குமார், தொழிலதிபர் மகாலட்சுமி சந்திரன், முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் ரத்தினவேல் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழா, 25ஆம் தேதிவரை நடைபெறுகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மண்டகபடிதாரர்கள் சார்பில் அம்பாள் திருவீதி உலா வந்து பக்தர்களுக்குக் காட்சி அளிப்பார். விழா ஏற்பாடுகளைச் செயல் அலுவலர் ரோஷினி, உதவி ஆணையர் ரோஜாலிசுமதா ஆகியோர் செய்துவருகின்றனர்.

Intro:கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா : இன்று காலை கொடியேற்றதுடன் தொடங்கியது
Body:கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா : இன்று காலை கொடியேற்றதுடன் தொடங்கியது

தூத்துக்குடி


கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மள் உடனுறை அருள்மிகு பூவனநாத சுவாமி திருக்கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இக்கோவிலில் கொடியேற்த்தினை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கபட்டு திருவனந்தல், திருப்பள்ளி எழுச்சி பூஜையும் , அதையடுத்து சுவாமி , அம்பாளுக்கும், பஞ்ச மூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. பின்னர் இன்று காலை 5.45 மணிக்கு மேல் 6.15 மணிக்குள் கொடியேற்றமும், அதைத் தொடர்ந்து நந்தி, பலிபீடம், கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. இன்று இரவு 7.30 மணிக்கு பிராமணாள் சமூகம் சார்பில் புஷ்பசப்பரத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெறவுள்ளது.

நிகழ்ச்சியில் ஜனகல்யாண் திருப்பதிராஜா, வணிக வைசிய சங்க செயலாளர் பழனிகுமார், தொழிலதிபர் மகாலட்சுமி சந்திரன், முன்னாள் நகர்மன்ற துணை தலைவர் ரத்தினவேல், மற்றும் அனைத்து மண்டகபடிதரர்கள் உள்ளிட்ட ஏராளாமனோர் கலந்து கொண்டனர்.

இன்று காலை கொடியேற்றதுடன் தொடங்கிய திருவிழா (25ம் தேதி )வரை நடைபெறுகிறது. ஓவ்வொருநாளும் ஒவ்வொரு மண்டகபடிதாரர்கள் சார்பில் சுவாமி , அம்பாள் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிகின்றனர்

விழாவின் 2ம் திருநாள் (அக் 15ம் தேதி ) மண்டகப்படிதாரான இனாம்மணியாச்சி பூலோகப்பாண்டிதேவர், ரத்தினவேல்சாமி தேவர் குடும்பத்தினர் சார்பில் காலை 8மணிக்கு அம்மன் பள்ளக்கில் திருவீதி உலா, இரவு 7.30 மணிக்கு காமதேனுவாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெறுகிறது. 3ம் திருநாள்( அக் 16ம் தேதி ) மண்டகப்படிதாரான இல்லத்துப்பிள்ளைமார் சங்கம் சார்பில் காலை 8 மணிக்கு பல்லக்கில் அம்மன் திருவீதி உலா, இரவு 7.30 மணிக்கு சிம்மவானத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெறுகிறது. 4ம் திருநாள் (அக் 17ம் தேதி ) மண்டகப்படிதாரான மேடைத்தளவாய்க்கட்டளைதாரார் சார்பில் காலை 8மணிக்கு பல்லக்கில் அம்மன் திருவீதி உலா , இரவு 7.30 மணிக்கு ரீஷப வாகனத்தில் அம்மன் திரு வீதி உலா நடைபெறுகிறது. 5ம் திருநாள் ( அக் 18 ம் தேதி ) மண்டகப்படிதாரான விஸ்வகர்ம நகைத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் காலை 8 மணிக்கு அம்மன் பல்லக்கில் திருவீதிஉலா , இரவு 7.30 மணிக்கு காமதேனு வாகனத்தில் திருவீதிஉலா நடைபெறுகிறது. 6ம் திருநாள்( அக் 19ம் தேதி ) மண்டகப்படிதாரான தூத்துக்குடி காசுகடை அழகிரிசாமி செட்டியார் குடும்பத்தினர் சார்பில் காலை பல்லக்கில் அம்மன் திருவீதி உலா , இரவு 7.30 மணிக்கு அன்னவாகனத்தில் அம்மன் திருவீதிஉலா நடைபெறுகிறது. 7ம் திருநாள் (அக் 20ம் தேதி) மண்டகப்படிதாரான சைவவேளாளர்கள் சங்கம் சார்பில் காலை 8 மணிக்கு பல்லக்கல் அம்மன் திருவீதி உலா , இரவு 7.30 சப்பரத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெறுகிறது. 8ம் திருநாள் (அக் 21 ம் தேதி ) மண்டகப்படிதாரான சைவசெட்டியார்கள் சங்கம் சார்பில் பல்லக்கில் அம்மன் திருவீதி உலா இரவு 7.30 மணிக்கு கிளி வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெறும் , 9ம் திருநாள் மண்டகப்படிதாரான வணிக வைசிய சங்கத்தினர் சார்பில் (அக் 22 ம் தேதி) செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு ரதாரோகணம் மற்றும் 8 மணிக்கு தேரோட்டம் நடைபெறவுள்ளது. அன்று இரவு 7.30 மணிக்கு மேல் அம்பாள் அன்ன வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர். 10 ம் நாள் திருநாளான (அக்23 ந் தேதி) மண்டகப்படிதாரான ஆயிர வைசிய காசுகாரச்செட்டிப்பிள்ளைகள் சங்கம் சார்பில் காலை 8 மணிக்கு அம்மன் பல்லக்கில் திரு வீதி உலா, இரவு 7.30 மணிக்கு ரிஷப வாகனத்தில் அம்மன் திருவீதி நடக்கிறது. 11ம் நாள் திருநாளான (அக் 24 ந் தேதி ) மண்டகப்படிதாரான இராமலிங்கம் குடும்பத்தினர் மற்றும் மூவேந்தர் பண்பாட்டு கழகம் சார்பில் மதியம் 1 மணிக்கு தபசு சப்பரத்தில் அம்மன் தபசுக்கு எழுந்தருளுகிறார். மாலை 6 மணிக்கு சுவாமி ரிஷப வாகனத்தில் பூவனநாதராக அம்மனுக்கு காட்சி கொடுக்கிறார். 12 ம் நாளான (அக் 25 ஆம் தேதி ) மண்டகப்படிதாரான முடுக்குமீண்டான்பட்டி ஆவடையப்பன் செட்டியார் குடும்பத்தினர் சார்பில் காலை 8 மணிக்கு பல்லக்கில் அம்மன் திருவீதிஉலா நடைபெறுகிறது. அதை தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. பின்னர், சுவாமி யானை வாகனத்திலும், அம்பாள் பல்லக்கிலும் பட்டணப்பிரவேசம் செல்லும் வைபவம் நடைபெறும்.

விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் ரோஷினி, உதவி ஆணையர் ரோஜாலிசுமதா ஆகியோர் செய்துவருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.