ETV Bharat / city

வீடியோ: நான்கு வழி சாலையில் எரிந்து நாசமான கார்!

author img

By

Published : Sep 13, 2021, 8:16 PM IST

காவல்கிணறு அருகே நான்கு வழி சாலையில் எஞ்சினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கார் முற்றிலும் எரிந்து நாசமானது.

running car caught fire in tirunelveli
running car caught fire in tirunelveli

திருநெல்வேலி: வள்ளியூர் அருகேயுள்ள சௌந்தரபாண்டியன்புரத்தைச் சேர்ந்தவர் நாராயண பெருமாள்.

இவர் இன்று (செப்.13) கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, சொந்த ஊருக்கு திரும்பிச் சென்றுள்ளார். அப்போது காவல்கிணறு அருகே நான்கு வழி சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, காரின் முன்பக்க இன்ஜின் பகுதியில் இருந்து கருகிய வாடை வந்ததுள்ளது.

இதனையடுத்து காவல்கிணறு நான்கு வழிச் சாலையின் அருகே காரை நிறுத்திவிட்டு, இறங்கிச் சென்று பார்த்தபோது கார் எரிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். தொடர்ந்து காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென கார் முழுவதும் பற்றி எரிந்தது.

நான்கு வழி சாலையில் எரிந்து நாசமான கார்

இதனையடுத்து வள்ளியூர் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்து சம்பவயிடம் வந்த அவர்கள் தீயை அணைக்க முயன்றனர். எனினும் காற்றின் வேகத்தின் காரணமாக கார் முழுவதும் தீயில் எரிந்து நாசமாகி விட்டது. இதுகுறித்து பணகுடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருநெல்வேலி: வள்ளியூர் அருகேயுள்ள சௌந்தரபாண்டியன்புரத்தைச் சேர்ந்தவர் நாராயண பெருமாள்.

இவர் இன்று (செப்.13) கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, சொந்த ஊருக்கு திரும்பிச் சென்றுள்ளார். அப்போது காவல்கிணறு அருகே நான்கு வழி சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, காரின் முன்பக்க இன்ஜின் பகுதியில் இருந்து கருகிய வாடை வந்ததுள்ளது.

இதனையடுத்து காவல்கிணறு நான்கு வழிச் சாலையின் அருகே காரை நிறுத்திவிட்டு, இறங்கிச் சென்று பார்த்தபோது கார் எரிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். தொடர்ந்து காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென கார் முழுவதும் பற்றி எரிந்தது.

நான்கு வழி சாலையில் எரிந்து நாசமான கார்

இதனையடுத்து வள்ளியூர் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்து சம்பவயிடம் வந்த அவர்கள் தீயை அணைக்க முயன்றனர். எனினும் காற்றின் வேகத்தின் காரணமாக கார் முழுவதும் தீயில் எரிந்து நாசமாகி விட்டது. இதுகுறித்து பணகுடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.