ETV Bharat / city

காவலர்களின் துன்புறுத்தலால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற கூலித்தொழிலாளி! - Labor Worker Attempt Suicide In front Of Police Station

சேலம்: காவல் துறையினரின் தொடர் துன்புறுத்தல் காரணமாக  வர்ணம் பூசும் தொழிலாளி, காவல்நிலையம் முன்பு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Police Torches Reason To Suicide
author img

By

Published : Oct 7, 2019, 10:43 PM IST

Updated : Oct 7, 2019, 11:45 PM IST

சேலம் மாவட்டம் கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிலம்பரசன். இவர் கட்டடங்களுக்கு ஒப்பந்தம் அடிப்படையில் வர்ணம் பூசும் தொழில் செய்துவருகிறார். இவருக்கு திருமணமாகி தேவி என்ற மனைவியும் சந்தோஷ், தனுஷ் என்ற இரண்டு ஆண்குழந்தைகளும் உள்ளனர்.

சிலம்பரசனின் போரட்டமும் சிறை வாசமும்:
சிலம்பரசன் சில சமயம் பொதுமக்கள் நலனுக்காக போராட்டங்களில் ஈடுபடும் குணம் உடையவர் என்பதால், அவரின் பெயரில் கிச்சிப்பாளையம் காவல் நிலையத்தில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், சாலை மறியல் செய்த வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் கடந்த 10 நாட்களுக்குப் பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார், சிலம்பரசன்.

Labor Worker Attempt Suicide In front Of Police Station
சிலம்பரசனின் மனைவி தேவி

காவல் துறையினரும் வழக்குகளும்!
இதனிடையே தீபாவளிப் பண்டிகையையொட்டி பல்வேறு வழக்குகள் பதிவு செய்யும் முனைப்பில் கிச்சிப்பாளையம் காவல் துறையினர் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, வழக்குப் பதிவு செய்வதற்காக சிலம்பரசனை கிச்சிப்பாளையம் காவல் துறையினர் தேடி வந்தனர்.

காவல் துறையினர் சிலம்பரசன் குடும்பத்தினரிடம் பணம் கேட்டு மிரட்டல்:

காவல் துறையினர் சிலம்பரசன் மீது வழக்குப் பதிவு செய்யாமல் இருப்பதற்காக, 25 ஆயிரம் ரூபாய் பணம் தர வேண்டும் என்று சிலம்பரசனிடமும் அவரின் குடும்பத்தினரிடமும் கேட்டு வற்புறுத்தி உள்ளனர். இதற்கு ஒத்துழைக்காத சிலம்பரசனை காவல் துறையினர் கைது செய்ய வீடு தேடி வந்துள்ளனர்.

அப்போது வீட்டில் அவரின் மனைவி தேவியும், மகன்களும் இருந்துள்ளனர். காவல் துறையினர் சிலம்பரசன் குடும்பத்தினரைத் தகாத வார்த்தைகளால் திட்டி அவரை காவல் நிலையத்திற்கு வருமாறு மிரட்டும் தொனியில் பேசி விட்டு சென்றுள்ளனர்.

காவல் நிலையத்தில் சிலம்பரசன் தீக்குளிப்பு:
இதனைத் தொடர்ந்து, காவல் நிலையம் சென்ற சிலம்பரசன் மண்ணெண்ணெய் ஊற்றி தனது உடலில் தீ வைத்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த காவல் துறையினர் தீயை அணைத்து அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர்.


சிலம்பரசனும் மருத்துவமனை சிகிச்சையும்:

தற்போது சேலம் தனியார் மருத்துவமனையில் சிலம்பரசன் அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக சிலம்பரசனின் மனைவி தேவி கூறுகையில், " திருந்தி வாழ வேண்டும் என்ற நோக்கத்தோடு போராட்டங்கள் எதுவும் நடத்தாமல் சிலம்பரசன் தற்போது அமைதியாக வாழ்ந்து வருகிறார். இந்த சூழலில் காவல் துறையினர் அவரைக் கைது செய்து, சிறையில் அடைக்க வேண்டும் என்று நடவடிக்கை எடுத்ததால், எனது கணவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். காவல் துறையினரின் தொடர் துன்புறுத்தல் காரணமாக தான் என் கணவரின் இந்த நிலைமைக்குக் காரணம். எங்களை வாழ விடுங்கள்" என்று கேட்டுக்கொண்டார். மேலும் காவல் நிலையம் முன்பு கட்டட வர்ணம் பூசும் ஒப்பந்ததாரர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிலம்பரசன்

இதையும் படிங்க: வறுமையின் கோர பிடியில் தத்தளித்த குடும்பம்... கூட்டாகத் தற்கொலை?

சேலம் மாவட்டம் கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிலம்பரசன். இவர் கட்டடங்களுக்கு ஒப்பந்தம் அடிப்படையில் வர்ணம் பூசும் தொழில் செய்துவருகிறார். இவருக்கு திருமணமாகி தேவி என்ற மனைவியும் சந்தோஷ், தனுஷ் என்ற இரண்டு ஆண்குழந்தைகளும் உள்ளனர்.

சிலம்பரசனின் போரட்டமும் சிறை வாசமும்:
சிலம்பரசன் சில சமயம் பொதுமக்கள் நலனுக்காக போராட்டங்களில் ஈடுபடும் குணம் உடையவர் என்பதால், அவரின் பெயரில் கிச்சிப்பாளையம் காவல் நிலையத்தில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், சாலை மறியல் செய்த வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் கடந்த 10 நாட்களுக்குப் பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார், சிலம்பரசன்.

Labor Worker Attempt Suicide In front Of Police Station
சிலம்பரசனின் மனைவி தேவி

காவல் துறையினரும் வழக்குகளும்!
இதனிடையே தீபாவளிப் பண்டிகையையொட்டி பல்வேறு வழக்குகள் பதிவு செய்யும் முனைப்பில் கிச்சிப்பாளையம் காவல் துறையினர் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, வழக்குப் பதிவு செய்வதற்காக சிலம்பரசனை கிச்சிப்பாளையம் காவல் துறையினர் தேடி வந்தனர்.

காவல் துறையினர் சிலம்பரசன் குடும்பத்தினரிடம் பணம் கேட்டு மிரட்டல்:

காவல் துறையினர் சிலம்பரசன் மீது வழக்குப் பதிவு செய்யாமல் இருப்பதற்காக, 25 ஆயிரம் ரூபாய் பணம் தர வேண்டும் என்று சிலம்பரசனிடமும் அவரின் குடும்பத்தினரிடமும் கேட்டு வற்புறுத்தி உள்ளனர். இதற்கு ஒத்துழைக்காத சிலம்பரசனை காவல் துறையினர் கைது செய்ய வீடு தேடி வந்துள்ளனர்.

அப்போது வீட்டில் அவரின் மனைவி தேவியும், மகன்களும் இருந்துள்ளனர். காவல் துறையினர் சிலம்பரசன் குடும்பத்தினரைத் தகாத வார்த்தைகளால் திட்டி அவரை காவல் நிலையத்திற்கு வருமாறு மிரட்டும் தொனியில் பேசி விட்டு சென்றுள்ளனர்.

காவல் நிலையத்தில் சிலம்பரசன் தீக்குளிப்பு:
இதனைத் தொடர்ந்து, காவல் நிலையம் சென்ற சிலம்பரசன் மண்ணெண்ணெய் ஊற்றி தனது உடலில் தீ வைத்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த காவல் துறையினர் தீயை அணைத்து அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர்.


சிலம்பரசனும் மருத்துவமனை சிகிச்சையும்:

தற்போது சேலம் தனியார் மருத்துவமனையில் சிலம்பரசன் அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக சிலம்பரசனின் மனைவி தேவி கூறுகையில், " திருந்தி வாழ வேண்டும் என்ற நோக்கத்தோடு போராட்டங்கள் எதுவும் நடத்தாமல் சிலம்பரசன் தற்போது அமைதியாக வாழ்ந்து வருகிறார். இந்த சூழலில் காவல் துறையினர் அவரைக் கைது செய்து, சிறையில் அடைக்க வேண்டும் என்று நடவடிக்கை எடுத்ததால், எனது கணவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். காவல் துறையினரின் தொடர் துன்புறுத்தல் காரணமாக தான் என் கணவரின் இந்த நிலைமைக்குக் காரணம். எங்களை வாழ விடுங்கள்" என்று கேட்டுக்கொண்டார். மேலும் காவல் நிலையம் முன்பு கட்டட வர்ணம் பூசும் ஒப்பந்ததாரர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிலம்பரசன்

இதையும் படிங்க: வறுமையின் கோர பிடியில் தத்தளித்த குடும்பம்... கூட்டாகத் தற்கொலை?

Intro:போலீசாரின் தொடர் துன்புறுத்தல் காரணமாக கட்டடங்களுக்கு வர்ணம் பூசும் தொழிலாளி, காவல்நிலையம் முன்பு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Body:சேலம் கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சூரி .இவரின் மகன் சிலம்பரசன்.

சிலம்பரசனுக்கு திருமணமாகி தேவி என்ற மனைவியும் சந்தோஷ் மற்றும் தனுஷ் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர் .சிலம்பரசன் கட்டடங்களுக்கு வர்ணம் பூசும் ஒப்பந்ததாரராக தொழில் நடத்திவருகிறார் .

சில நேரங்களில் பொதுமக்கள் நலனுக்காக போராட்டங்களில் ஈடுபடும் குணம் உடையவர் சிலம்பரசன் என்பதால் அவரின் பெயரில் கிச்சிப்பாளையம் காவல் நிலையத்தில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்தநிலையில் சாலை மறியல் செய்த வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் கடந்த 10 நாட்களுக்கு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார் .

இந்த நிலையில் தீபாவளியையொட்டி பல்வேறு வழக்குகள் பதிவு செய்யும் முனைப்பில் கிச்சிப் பாளையம் போலீசார் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து சிலம்பரசனை கிச்சிப்பாளையம் போலீசார் தேடி வந்தனர். வழக்குப் பதிவு செய்யாமல் இருப்பதற்காக 25 ஆயிரம் ரூபாய் தங்களுக்கு பணம் தர வேண்டும் என்று கிச்சிபாளையம் போலீசார் சிலம்பரசனிடமும் அவரின் குடும்பத்தினரிடமும் வற்புறுத்தி உள்ளனர்.

இதற்கு ஒத்துழைக்காத சிலம்பரசனை போலீசார் கைது செய்ய வீடு தேடி வந்துள்ளனர். அப்போது வீட்டில் அவரின் மனைவி தேவியும் மகன்களும் இருந்துள்ளனர்.

போலீசார் சிலம்பரசனை குடும்பத்தினரை தகாத வார்த்தைகளால் திட்டி அவரை காவல் நிலையத்திற்கு வருமாறு மிரட்டும் தொனியில் பேசி விட்டு சென்றுள்ளனர் .

இதனையடுத்து காவல் நிலையம் சென்ற சிலம்பரசன் மண்ணெண்ணெய் ஊற்றி தனது உடலில் தீவைத்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் சிலம்பரசனை தீயை அணைத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர்.

தற்போது சேலம் தனியார் மருத்துவமனையில் சிலம்பரசன் அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக பேட்டியளித்த சிலம்பரசனின் மனைவி தேவி கூறும்போது ," திருந்தி வாழ வேண்டும் என்ற நோக்கோடு போராட்டங்கள் எதுவும் நடத்தாமல் சிலம்பரசன் தற்போது அமைதியாக இருக்கிறார் .

இந்த சூழலில் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று நடவடிக்கை எடுத்ததால் எனது கணவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.

போலீசாரின் தொடர் டார்ச்சர்தான் இந்த நிலைமைக்கு காரணம். எங்களை வாழ விடுங்கள்" என்று தெரிவித்தார்.


Conclusion:காவல் நிலையம் முன்பு கட்டட வர்ணம் பூசும் ஒப்பந்ததாரர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Last Updated : Oct 7, 2019, 11:45 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.