ETV Bharat / city

திமுக கூட்டணியை ஆதரித்து இந்திய குடியரசு கட்சி பரப்புரை!

author img

By

Published : Mar 22, 2021, 5:40 PM IST

சேலம்: 'அதிமுக-பாஜக கூட்டணியை சேலம் மாவட்டத்தில் 11 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தோல்வி அடையச் செய்யும் வகையில் திண்ணைப் பரப்புரைசெய்து தோற்கடிப்போம்' என இந்திய குடியரசு கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் பாலகிருஷ்ணன் கூறினார்.

இந்திய குடியரசு கட்சி
இந்திய குடியரசு கட்சி

இந்திய குடியரசு கட்சியின் செயற்குழுக் கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. இதில் மாநிலத் துணைத் தலைவர் பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு முக்கியத் தீர்மானங்களை முன்மொழிந்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "அதிமுக, பாஜக, பாமக கூட்டணியை சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தோற்கடிப்போம். அதற்காக திண்ணைப் பரப்பரையில் பட்டியலின சமுதாய மக்கள் ஈடுபடுவார்கள். எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் பட்டியலின சமுதாய மக்களுக்கு எந்த ஒரு நன்மையும் செய்யப்படவில்லை.

இந்திய குடியரசு கட்சி
இந்திய குடியரசு கட்சி
அவர்கள் அவமதிக்கப்பட்டே வந்துள்ளனர். ஆனால் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் பட்டியலின சமுதாய மக்களுக்குப் பல்வேறு நலத் திட்டங்களையும், வளர்ச்சிப் பாதையில் அவர்கள் செல்வதற்கான திட்டங்களையும் நிறைவேற்றினார்.
ஆனால், அவரின் பெயரைச் சொல்லி ஆட்சி நடத்தும் ஆட்சியாளர்கள் பட்டியலின சமுதாய மக்களை அவமதித்துவருகின்றனர். எனவே இந்த அதிமுக கூட்டணியை விட்டு வெளியேறி அவர்களுக்கு எதிராகப் பரப்புரை செய்கிறோம்.


கட்டாயம் எடப்பாடி தொகுதியில், எடப்பாடி பழனிசாமியைத் தோற்கடிப்பதே இந்திய குடியரசு கட்சியின் தலையாய பணியாக இருக்கும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:'சூடுபிடிக்கும் தேர்தல் பரப்புரை: நட்பு பாராட்டிய அமமுக-திமுக வேட்பாளர்கள்!'

இந்திய குடியரசு கட்சியின் செயற்குழுக் கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. இதில் மாநிலத் துணைத் தலைவர் பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு முக்கியத் தீர்மானங்களை முன்மொழிந்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "அதிமுக, பாஜக, பாமக கூட்டணியை சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தோற்கடிப்போம். அதற்காக திண்ணைப் பரப்பரையில் பட்டியலின சமுதாய மக்கள் ஈடுபடுவார்கள். எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் பட்டியலின சமுதாய மக்களுக்கு எந்த ஒரு நன்மையும் செய்யப்படவில்லை.

இந்திய குடியரசு கட்சி
இந்திய குடியரசு கட்சி
அவர்கள் அவமதிக்கப்பட்டே வந்துள்ளனர். ஆனால் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் பட்டியலின சமுதாய மக்களுக்குப் பல்வேறு நலத் திட்டங்களையும், வளர்ச்சிப் பாதையில் அவர்கள் செல்வதற்கான திட்டங்களையும் நிறைவேற்றினார்.
ஆனால், அவரின் பெயரைச் சொல்லி ஆட்சி நடத்தும் ஆட்சியாளர்கள் பட்டியலின சமுதாய மக்களை அவமதித்துவருகின்றனர். எனவே இந்த அதிமுக கூட்டணியை விட்டு வெளியேறி அவர்களுக்கு எதிராகப் பரப்புரை செய்கிறோம்.


கட்டாயம் எடப்பாடி தொகுதியில், எடப்பாடி பழனிசாமியைத் தோற்கடிப்பதே இந்திய குடியரசு கட்சியின் தலையாய பணியாக இருக்கும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:'சூடுபிடிக்கும் தேர்தல் பரப்புரை: நட்பு பாராட்டிய அமமுக-திமுக வேட்பாளர்கள்!'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.