ETV Bharat / city

தேர்தலுக்கான அனைத்து முன்னேற்பாடுகளும் மேற்கொள்ள வேண்டும் - தேர்தல் அலுவலர் - மாவட்ட தேர்தல் அலுவலர் சி.அ. ராமன்

சேலம்: 20 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறவுள்ள தேர்தலுக்கான வாக்கு பதிவிற்கும், வாக்கு எண்ணிக்கைக்கும் தேவையான முன்னேற்பாடுகள் முழுமையாக மேற்கொள்ள வேண்டுமென தேர்தல் அலுவலர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் சி.அ. ராமன் உத்தரவிட்டுள்ளார்.

salem collector Raman  மாவட்ட தேர்தல் அலுவலர் சி.அ. ராமன்  collector raman inspection in voting center
collector raman inspection in voting center
author img

By

Published : Dec 26, 2019, 10:22 AM IST

சேலம் மாவட்டம், ஓமலூர், காடையாம்பட்டி, மேச்சேரி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறயிருக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு பதிவிற்கும், வாக்கு எண்ணிக்கைக்கும் தேவையான பொருட்கள் தயார்படுத்துதல், வாக்கு எண்ணும் பணிகளுக்கு தேவையான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர் சி.அ.ராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட தேர்தல் அலுவலர் சி.அ.ராமன் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். அப்போது, “தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் உத்தரவிடப்பட்டுள்ளவாறு, வாக்குபதிவிற்கு தேவையான 72 பொருட்களையும் உரிய அலுவலர்கள் முறையாக பிரித்து அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் உள்ள வாக்குச் சாவடிகளுக்கு அனுப்புவதற்கு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

புதுக்கோட்டையில் ஒரு அத்திப்பட்டி !

மேலும், ஊராட்சி ஒன்றிய தேர்தளில் பதிவான வாக்குகள் உள்ள பெட்டிகளை பாதுகாப்பாக வைப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும், முழுமையாக வாக்கு எண்ணும் பணிகளுக்கு தேவையான பொருட்கள் மற்றும் பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகளை முழுமையாக மேற்கொள்ளவேண்டும்” என்று அறிவுரை வழங்கினார்.

மாவட்ட தேர்தல் அலுவலர் சி.அ. ராமன் ஆய்வு மேற்கொண்டபோது

இந்த ஆய்வின்போது மேட்டூர் சார் ஆட்சியர் ஜி.சரவணன், ஓமலூர் வருவாய் வட்டாட்சியர் குமரன், மேட்டூர் வருவாய் வட்டாட்சியர் சு.ஹசீன்பானு, ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட தேர்தல் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

சேலம் மாவட்டம், ஓமலூர், காடையாம்பட்டி, மேச்சேரி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறயிருக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு பதிவிற்கும், வாக்கு எண்ணிக்கைக்கும் தேவையான பொருட்கள் தயார்படுத்துதல், வாக்கு எண்ணும் பணிகளுக்கு தேவையான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர் சி.அ.ராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட தேர்தல் அலுவலர் சி.அ.ராமன் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். அப்போது, “தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் உத்தரவிடப்பட்டுள்ளவாறு, வாக்குபதிவிற்கு தேவையான 72 பொருட்களையும் உரிய அலுவலர்கள் முறையாக பிரித்து அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் உள்ள வாக்குச் சாவடிகளுக்கு அனுப்புவதற்கு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

புதுக்கோட்டையில் ஒரு அத்திப்பட்டி !

மேலும், ஊராட்சி ஒன்றிய தேர்தளில் பதிவான வாக்குகள் உள்ள பெட்டிகளை பாதுகாப்பாக வைப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும், முழுமையாக வாக்கு எண்ணும் பணிகளுக்கு தேவையான பொருட்கள் மற்றும் பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகளை முழுமையாக மேற்கொள்ளவேண்டும்” என்று அறிவுரை வழங்கினார்.

மாவட்ட தேர்தல் அலுவலர் சி.அ. ராமன் ஆய்வு மேற்கொண்டபோது

இந்த ஆய்வின்போது மேட்டூர் சார் ஆட்சியர் ஜி.சரவணன், ஓமலூர் வருவாய் வட்டாட்சியர் குமரன், மேட்டூர் வருவாய் வட்டாட்சியர் சு.ஹசீன்பானு, ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட தேர்தல் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Intro:சேலம் மாவட்டத்தில் 20 ஊராட்சி ஒன்றியங்களிலும் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தலுக்கான வாக்கு பதிவிற்கும் மற்றும் வாக்கு எண்ணிக்கைக்கும் தேவையான பொருட்களை தயார்படுத்துதல் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகளை முழுமையாக மேற்கொள்ள வேண்டுமென தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் சி.அ.ராமன் உத்தரவிட்டுள்ளார்.Body:
சேலம் மாவட்டம், ஓமலூர், காடையாம்பட்டி மற்றும் மேச்சேரி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தலுக்கான வாக்கு பதிவிற்கும் மற்றும் வாக்கு எண்ணிக்கைக்கும் தேவையான பொருட்கள் தயார்படுத்துதல், வாக்கு எண்ணும் பணிகளுக்கு தேவையான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன்,இன்று (24.12.2019) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

சேலம் மாவட்டம், தாரமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், நங்கவள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் நங்கவள்ளி வட்டார சேவை மையம் ஆகிய இடங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தலுக்கான வாக்காளர் சீட்டு வழங்கும் பணிகள், வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான பொருட்கள் பிரித்து வைக்கும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனை தொடர்ந்து கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தலில் பதிவாகும் வாக்குகளை எண்ணுவதற்கு கொளத்தூர் நிர்மலா மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தினையும் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் சி.அ.ராமன் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கி தெரிவித்ததாவது.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல் சேலம் மாவட்டத்தில் வருகின்ற 27.12.2019 மற்றும் 30.12.2019 ஆகிய 2 நாட்களில் 2 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இத்தேர்தலுக்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் 20 ஊராட்சி ஒன்றியங்களிலும் முழுமையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை மையங்களும் 20 ஊராட்சி ஒன்றியங்களும் அமைக்கப்பட்டு இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகளை எண்ணுவதற்கு தேவையான அனைத்து பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் உத்தரவிடப்பட்டுள்ளவாறு வாக்குபதிவிற்கு தேவையான 72 பொருட்களையும் உரிய அலுவலர்கள் முறையாக பிரித்து அந்தந்த வாக்குசாவடி மையங்களில் உள்ள வாக்கு சாவடிகளுக்கு அனுப்புவதற்கு அலுவலர்கள் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், வாக்குப்பதிவிற்கு தேவையான அனைத்துப் பொருட்களையும் அந்தந்த வாக்குச் சாவடிகளில் வாக்கு பதிவு அலுவலர்களிடம் வழங்கும் பணிகளையும், வாக்கு பதிவு நிறைவுப்பெற்றவுடன் வாக்குப்பெட்டிகள் மற்றும் உரிய ஆவணங்களை திறம்பபெற்று வாக்கு எண்ணும் மையங்களுக்கு பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் எடுத்துவந்து வாக்கு எண்ணும் மையங்களில் ஒப்படைக்கும் பணிகளையும் மண்டல அலுவலர்கள் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். ஊரக உள்ளாட்சிக்கான சாதரண தேர்தலுக்கான பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அந்தந்த தேர்தல் நடுத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடுத்தும் அலுவலர்கள் உள்ளிட்ட அனைத்து அலுவலர்களும் இத்தேர்தல் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். அதேபோல் வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு பெட்டி வைப்பதற்கு தேவையான பாதுகாப்பு அறைகளை முழுமையாக தயார் படுத்திக்கொள்ள வேண்டும். வாக்கு எண்ணிக்கையின் போது மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிகளுக்கான வாக்குகள் எண்ணும் அறையும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான வாக்குகள் எண்ணும் அறையும், கிராம ஊராட்சிமன்ற தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான வாக்குகள் எண்ணும் அறையினையும் தனித்தனியாக அமைத்திட வேண்டும்.

மேலும், ஊராட்சி ஒன்றிய தேர்தளில் பதிவான வாக்குகள் உள்ள பெட்டிகளை பாதுகாப்பாக வைப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும், முழுமையாக வாக்கு எண்ணும் பணிகளுக்கு தேவையான பொருட்கள் மற்றும் பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகளை முழுமையாக மேற்கொள்ளவதோடு இத்தேர்தல் சிறப்பாக நடைபெறுவதற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடு பணிகளையும் அலுவலர்கள் சிறப்பாக மேற்கொள்ளவேண்டும். இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சி.அ.ராமன், இ.ஆ.ப., அவர்கள் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கி பேசினார்கள்.

Conclusion:இந்த ஆய்வின்போது மேட்டூர் சார் ஆட்சியர் ஜி.சரவணன், ஓமலூர் வருவாய் வட்டாட்சியர் குமரன், மேட்டூர் வருவாய் வட்டாட்சியர் சு.ஹசீன்பானு, ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உடன் இருந்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.